ஓவியரின் ஞானம்
முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு கண்ணும், ஒரு காலும்தான் இருந்தன. இந்தக் குறைபாடுகள் இருந்தும், அவர் ஒரு திறமையான; இரக்கமான; புத்திசாலித்தனமான அரசராக ஆட்சி புரிந்தார். அந்த அரசரது ஆட்சியின் கீழ் அவரது மக்கள் ஆனந்தமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அரசர் தன் அரண்மனை நடை கூடத்தின் வழியாக நடந்து கொண்டு இருந்தார். திடீரென்று, சுவரில் மாட்டி இருந்த படங்களின் மீது அவரது பார்வை விழுந்தது. அவை அவரது முன்னோர்களின் படங்கள் ஆகும். தன்னைப் போல, தனக்குப் பின் வருகின்ற சந்ததியினர்களும் இதே போல் நடக்கும் போது, தம் முன்னோர்களின் படங்களைப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்வார்கள். இந்த அரசரது படம் இதுவரை அங்கு போடப் படவில்லை. அவரது குறைபாடுகளால், அதாவது ஒரு கண், ஒரு கால் இல்லாத குறைபாடுள்ள அவரது உருவத்தை போடுவது பற்றி அரசர் தயக்கத்தோடு இருந்தார். ஆனால் அன்று தன்னுடைய படத்தையும் போட வேண்டும் என்று, ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தார். அடுத்த நாள் அந்த நாட்டில் உள்ள சிறந்த ஓவியர்கள் அனைவரையும் தன் அவைக்கு வரவழைத்தார். அரண்மனை சுவரில் என்னுடைய அழகான படத்தை போ