இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இது இயற்கையின் அற்புதம்! படத்தை பெரிது படுத்திப் பாருங்கள்...

படம்

விசிலை அடிக்காதீர்

நான் ஒரு பள்ளியில், விளையாட்டு மைதானத்தில் நடக்கும் ஒரு சாதாரண கால் பந்து போட்டியை கவனித்தேன். நான் உட்கார்ந்தவுடன், அங்கிருந்த பையன் ஒருவனிடம் ஸ்கோர் என்ன என்று கேட்டேன். ஒரு புன்சிரிப்போடு அவன் பதில் கூறினான், “அவர்கள் எங்களை விடவும், 3-0 என்ற கணக்கில் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் நான் சொன்னேன்,” உண்மையாகவா !” “ நான் கூறினேன், உன்னைப் பார்த்தால் தைரியத்தை இழந்தவன் போல தெரியவில்லையே! அவனை, ஆறுதல் படுத்த முயற்சி செய்யும் விதமாக, நான் இதனை கூறினேன்.   “தைரியத்தை இழக்க வேண்டுமா?” அந்த பையன் என்னைப் பார்த்து திகைப்பான பார்வை கொண்டு கேட்டான். “ நான் ஏன் தைரியத்தை இழக்க வேண்டும்; அந்த நடுவர் இன்னமும் கடைசி விசிலை அடிக்கவில்லையே?” அந்த குழுவின் மீதும், மேலும் அங்கு பங்கேற்கும் மேனேஜர்களிடமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் நிச்சயமாக முறியடித்திடுவோம்.“ உண்மையாகவே, அந்த போட்டி ஒரு முடிவுக்கு வந்தது. 5-4 என்ற கணக்கில் ஸ்கோர்; அந்த பையனுடைய குழு வெற்றி பெற்றது. அவன் போகும் போது, அழகான புன்சிரிப்புடன் சென்றான்; அவன் என்னைப் பார்த்து, கைகளை மென்மையாக அசைத்தான். நான் அ

மரம்

இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்போ நம்மால் தாங்க இயலாது குழந்தைகள் காப்பாற்றுவதற்கு சிரமம் இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பலம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது, நம்ம வீட்டை சுற்றி இடமிருப்பின் முடிந்த அளவிற்கு மரங்களை நடுங்கள், *மரம் நடுவோம் இயற்கையை காப்போம்* வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம் மர கன்றுகள் உற்பத்தியாளர்கள்,  வன துறை,  பள்ளி தாளாளர்கள்,  உயர் பதவிகளில் இருப்போர்,  பிரபலங்கள்,   ஆன்மீக தலைவர்கள்,  அனைத்து மதங்களின் குருமார்கள்,  கிராம தலைவர்கள்,  ஊர் தலைவர்கள்,  அனைத்து கட்சி தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம்.  அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகி கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மர கன்றிற்கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.  இதே போல் சில வருடங்கள் செய்தால், 2030 ககுள் தமிழகமும் குளிர்ந்து போகும் அவரவர் ஊர்களில் சி

ஸ்ரீதர் வேம்பு

படம்
ஸ்ரீதர் வேம்பு..  உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான “ஸோஹோ கார்ப்பரேஷனின் (Zoho Corporation ) ”, தலைமை நிர்வாக அதிகாரி ( C E O) . ஏதோ, இந்த மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் இப்போது இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அங்கு தான் இருந்தது. அதன் தலைமையகத்தை, 2019ஆம் ஆண்டு அக்டோபரில், தென்காசிக்குப் பக்கம் இருக்கும் “மத்தளம்பாறை” என்னும் தன் கிராமத்துக்குக் கொண்டு வந்து விட்டார் இந்த மஹாமனிதர். இப்போது, ஒரே வருஷத்தில், இந்த நிறுவனம், சுமார் 3410 கோடி டாலர் லாபம் அடைந்ததைக் கண்டு, தொழில் நுட்ப வல்லுநர்கள், வியந்து போய் இருக்கிறார்கள். மிகப் பெரிய தொழில் ஸ்தாபனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்ரீதர் வேம்பு போவது சைக்கிளில் தான். சாப்பிடுவதும், டீ அருந்துவதும், கிரிக்கெட் விளையாடுவதும் கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளுடன் தான். கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளைத் திரட்டி, 4 ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு நவீன கணினிப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார். நவீன மருத்துவமனை, சாக்கடைகள், குடிநீர்வசதி, நீர்ப்பாசன

திருமணம்...சில நம்பிக்கைகள்

படம்
சடங்குகள் நம்பிக்கைகள் அம்மி மிதிப்பது அம்மி போன்று மன வலிமை கிடைக்குமென்று. அரிசி தூவி வாழ்த்துவது உணவிற்கு பஞ்சமின்றி வாழ்வீர்கள் என்பதற்காக மூன்று மூடிச்சு அறம்,பொருள், இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருளில் நிற்பதற்காக வாழை மற்றும் தென்னங்கிற்று தோரணம் வாழை தென்னை அழியாத பயிர்கள். இவை எல்லா காலங்களிலும் வளரும் அதன் எல்லா பாகங்களும் நமக்கு பயன்தரும். அதுபோல் மணமக்கள் வாழ வேண்டும் என்பதற்காக மெட்டி அணிவிப்பது வாழ்வின் பொறுப்புகளை சுட்டிக்காட்டும் | கால்கட்டின் அடையாளம் கெட்டி மேளம் கொட்டுவது அனைவரையும் திருமணம் பத்தி மட்டுமே சிந்திக்க வைக்க. அமங்கலமான அபசகுணமான வார்த்தைகளை கேளாதிருக்க மாலை மாற்றுதல் உள்ளத்தால் ஒன்றுபட மன மாற்றம் தேவை. அதை உணர்த்த மாலை.. பத்து பொருத்தங்களைப் பார்த்து. ஒன்பது கோள்நிலைகளை அறிந்து. எட்டு திசையிலிருந்தும் உறவை அழைத்து, ஏழு அடி எடுத்து வைத்து. அறுசுவை உணவு படைத்து. பஞ்ச பூதங்கள் சாட்சியாக, நான்கு வேதங்கள் முழங்க. மூன்று முடிச்சுகளால், இரு மனங்கள் ஒன்று சேரும்.  ஓர் அற்புத பந்தத்தின் உறவே.  திருமண உறவு🙏🏼

ஒருபோதும் நீ தன்னந்தனியாக இல்லை

*465 நாட்கள் ✈️HFN கதை 🌍 குழுவினரோடு."* *♥️ கதை-82♥️*  *“வாசிப்பதற்கு முன்பாக … உங்கள் கண்களை இதமாக மூடுங்கள்… உங்கள் கவனத்தை உங்கள அந்த சிறிய பையன் குளிருக்கான அவனுடைய ஆடைகளை போட்டு விட்டு பிறகு அவனுடைய அப்பாவிடம் கூறினான்:  “ ஓ. கே. அப்பா, நான் தயாராகி விட்டேன்.”  அவனுடைய அப்பா, ஒரு போதகர், அவர் கூறினார்: “தயார், என்றால் அது எதற்காக?”  “அப்பா, இப்போது நாம் வெளியே செல்ல வேண்டிய நேரம்; அங்கே நம்முடைய துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ய வேண்டும்.“  அப்பா பதில் கூறினார்: “ மகனே, வெளியே இப்போது மிகவும் குளிராக இருக்கிறது. மேலும் மழையும் தூற்றிக் கொண்டே இருக்கிறது.”  அந்தக் குழந்தை அவனுடைய அப்பாவை ஆச்சரியத்துடன் பார்த்தான், மேலும் கூறினான்: “ஆனால், அப்பா, மழைக் நாட்களில் கூட மக்கள் கடவுளைப் பற்றி அறிந்து கொள்வது தேவைப்படுகிறது. “  அப்பா பதில் அளித்தார், “மகனே, என்னால் இந்த சீதோஷ்ண நிலையில் வெளியே போக முடியாது.“  விரக்தியோடு, அந்த குழந்தை கூறியது” “அப்பா, நான் தனியாகப் போகலாமா? தயவுசெய்து!“  அவனுடைய அப்பா ஒரு கண நேரம் செல்ல விட்டு, பிறகு மேலும் கூறினார்,“ மகனே, நீ போக முடியும்.

சித்ரா பெளர்ணமி

படம்
*சித்ரா பெளர்ணமியில் வீட்டுவாசலில் விளக்கேற்றுங்கள்; குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டுதெய்வ வழிபாடு அவசியம்...* சித்ரா பெளர்ணமியில், வீட்டில் சிரத்தையுடன் செய்யப்படும் பூஜையால், வீட்டில் இதுவரை இருந்த தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும் என்பது உறுதி.  சித்ரா பெளர்ணமி  பூரண வெள்ளிநிலவும் சேர்ந்திருக்கும் அற்புதநாளில், வீட்டில் பூஜையிலும் வழிபாட்டிலும் ஈடுபடுங்கள் . சித்ரா பௌர்ணமியை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுகிற வைபவம். இந்த நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. கோயிலின் சாந்நித்யமும் சக்தியும் சித்திரை மாதத்தின் பெளர்ணமி நாளில், இன்னும் வீறுகொண்டு வெளிப்படும் என்பதாக சொல்லப்படு கிறது. ஆகவே, அந்தநாளில், கோயிலுக்குச் செல்லும் போது நல்ல அதிர்வலைகள் நம் மீது பட்டு, நம்மை செம்மையுறச் செய்யும் என்பது நம்பிக்கை. அதேபோல், சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பன்மடங்கு வீரியம் அதிகம் . *சித்ரா பெளர்ணமி நாளில், வீட்டில் என்ன செய்யவேண்டும்?* ‌சி‌த்ரா பௌர்ண‌மி அ‌ன்று அதிகாலை‌யி‌ல் கு‌ளி‌‌த்து முடி‌த்துவிடுங்கள். முன்னதாக, இல்லத்தை தூய்மை யா க்கி, த

அப்பாவும் மகளும்

படம்
ஒரு திருமண விழா ... ஆன்றோரும் சான்றோரும் ....  மணமக்களை வரிசையாக வாழ்த்துரைக்கின்றனர். இறுதியாக மணமகளின் தந்தை.... ஒலிவாங்கியின் முன் வந்து... கண்களில் நீர் எட்டிப் பார்க்க...  வாயில் இருந்து வார்த்தைகள் வர எழும்பாமல் தவிக்க ....  ஒரு படியாகச் சமாளித்து ... இதோ பேசுகிறார். வாருங்கள் கேட்போம்... எனது மனதின் மகிழ்ச்சியான இந்த தருணத்தில் ....  பங்கு பெற்று சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.  இந்த நாள் வாழ்வில் எனக்கு மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. காரணம் .... எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டோம். இனி ஓய்வெடுக்க விரும்புகிறோம். அதை அனுபவிக்கத் தயாராகி விட்டோம் . நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் ...  நான் எதிர்பார்ப்பதை விட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன் . அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்தவள். அதை விட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளலோடு இருப்பாள் என நம்புகிறேன். இருந்தாலும் எல்லா சராசரி தந்தையை போலவும் நான் இதை திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன். தயவுசெய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள

தேர்தல் பணி

ஒதுக்கப்பட்ட ஊருக்குள் பேருந்து  இறக்கிவிட்டதும் எங்களுக்குள் ஏறிக் கொண்டது தேர்தல் பணி.. Zonal offficer கொடுத்துப் போன கோணிமூட்டையை கொட்டியதும் கொத்து கொத்தாய் வந்து விழுந்தன ஃபாரங்கள்.. EVM எந்திரங்களை பிறந்த குழந்தை  போல பாதுகாத்தோம்.. சின்ன  வகுப்பறை ஒரே ட்யூப்லைட்.. ஓரமாய் ஓடும்  மின்விசிறி.. இப்படி கொடுத்ததற்குள் வாழ கற்றுக் கொடுத்தது தேர்தல் பணி.. குழாய் இருந்தது  தண்ணீர் இல்லை.. பாத்ரூம் கதவு உடைந்திருந்தது.. சில இடங்களில் பாத்ரூமே  இல்லை என்று கேள்விபட்ட போது மனம் தானாக ஆறுதலடைந்தது.. புரண்டு புரண்டு படுத்தும் இமைகளில் தூக்கம் அமரவில்லை.. பக்கத்தில் P3 படுத்ததும் தூக்கம் அவரை வாரி அணைத்துக் கொண்டது.. P1 'குபீர் குபீர்' என்று  எழுந்து மீண்டும் படுத்துக் கொண்டார்.. வந்த  தண்ணீரை நெய் போல ஊற்றி குளித்து ஐந்து மணிக்கே தயாரானோம்.. ஆறுமணிக்கு வந்த ஏஜெண்டுகள்.. அவர்கள் கூட வந்த குளிக்காத  ஆட்கள் என்று Mockpoll  தொடங்கியது.. ஆயிரம் முறை வீடியோ பார்த்தாலும் அங்கு ஒருமுறை சீல் வைப்பதில் தடுமாறி  சரிசெய்து தொடங்கியது உண்மை  வாக்குப்பதிவு.. ஏழு மணிக்கு துவங்கிய  வரிசை ரயில் பெட்ட

தேவை நிம்மதி

படம்
*💐💐🙏🏻💐💐💐"இன்றைய சிந்தனை'..(18.04.2024)..* ............................... *"’’* .................................. செல்வம், அதிகாரம், பணம், புகழ், மதிப்பு ஆகியவை மன அமைதியை அழிப்பன. வாழ்வில் என்ன என்ன அடைய வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றி மனதை அலைக்கழிக்கும்.  தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவன், அதிகமான சொத்து, செல்வம் அடைந்தவன்,  ஆகியோருக்கு நிம்மதி கெட்டு விடும்.உறக்கம் வராது. *மனநிம்மதி இருந்தால் தான் எந்த செயலையும் பதட்டம் இல்லாமல் ஒருவரால் எளிதில் செய்ய முடியும்..* தன் தகுதியை உணர்ந்து அதற்குரிய செயலில் ஈடுபட வேண்டும். மனதில் நிம்மதியும் தூக்கமும் இன்றித் தவித்த ஒருவன் அருகில் இருந்த ஆசிரமத்தில் பெரியவரை சந்தித்து எனக்கு எல்லாம் இருந்தும் மன நிம்மதி மட்டும் இல்லை என்றான். அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றான்.. அதற்கு அந்தப் பெரியவர் *தேவையில்லா சுமைகளை சுமப்பதும், தெரியக் கூடாத ரகசியங்களைத் தெரிந்துக் கொள்வதாலும் நிம்மதி போய் விடுகின்றது.*  நீ முதலில் ஆசிரமத்தில் சாப்பிடு என்றார். சாப்பிட்டப் பின் ஒரு படுக்கையைக் காண்பித்து படுக்கச் சொன்னார் அவனிடம் ஒரு கத

ஒரு கேள்வி

 *வாசிப்பதற்கு முன்பாக… அன்போடு உங்கள் கண்களை மென்மையாக மூடுங்கள்… உங்களுடைய இதயத் துடிப்பானது ஒழுக்கத்தை விட்டு வெளியேறினால், என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்யுங்கள்....தொடர்ந்து வாசியுங்கள்.* **  முன்னொரு காலத்தில் ஒரு குருகுலத்தில், ஆச்சார்யா சுமத், தமது சீடர்களோடு வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் அறிவுத் திறமை கொண்டு, மேலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கக் கூடியவராகவும் இருந்து வந்தார்.   ஒரு நாள் பாடம், முடிந்த பிறகு, அவருடைய சீடர்களுள் ஒருவரான வர்ட்டெண்ட் என்பவர் குருவிடம் கேட்டார், “ஆச்சர்யா! அறிவுத் தன்மையின் கூர்மை என்பது கற்றுக் கொண்டு இருப்பதன் அடிப்படையைச் சார்ந்த ஒன்று. இது இப்படி இருந்த போதிலும், நீங்கள் ஏன், எப்போதும், நமது வாழ்க்கை முழுவதுமே கடுமையான ஒழுக்கத்தை திடமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று, பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்?“  ஆச்சார்யா சுமத் பதிலளித்தார்,“ நேரம் வரும் போது, உங்களுக்குரிய பதில் கிடைக்கும்.”  சில நாட்களுக்குப் பிறகு, ஆச்சார்யாவும், அவரது எல்லா சீடர்களும், நடை பயிற்சிக்காக வெளியே போனார்கள். நடந்து கொண்டு இருக்கும் போது, அவர்கள் அனைவரும், கங்கை

கோ1 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

படம்

கோ1 தமிழ் தளத்திற்கு நல்வரவு

படம்
  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கோ1 தமிழ் இணைய தளம் இன்று வலைப்பூ வாக உதயம் ஆகிறது. தமிழ் தகவல்கள் செய்திகள், கவிதைகள் மற்றும் பல இதில் பதிப்பிக்க படும். தொடர்ந்து காணுங்கள். இணைய முகவரி: https://tamil.co1.in https://co1tamil.blogspot.com