முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் பணி

ஒதுக்கப்பட்ட ஊருக்குள் பேருந்து 
இறக்கிவிட்டதும்
எங்களுக்குள்
ஏறிக் கொண்டது
தேர்தல் பணி..

Zonal offficer
கொடுத்துப் போன
கோணிமூட்டையை
கொட்டியதும்
கொத்து கொத்தாய்
வந்து விழுந்தன
ஃபாரங்கள்..

EVM எந்திரங்களை
பிறந்த குழந்தை 
போல பாதுகாத்தோம்..

சின்ன 
வகுப்பறை
ஒரே ட்யூப்லைட்..
ஓரமாய் ஓடும் 
மின்விசிறி..
இப்படி கொடுத்ததற்குள்
வாழ கற்றுக் கொடுத்தது
தேர்தல் பணி..

குழாய்
இருந்தது 
தண்ணீர் இல்லை..
பாத்ரூம்
கதவு உடைந்திருந்தது..
சில இடங்களில்
பாத்ரூமே 
இல்லை என்று கேள்விபட்ட போது மனம் தானாக
ஆறுதலடைந்தது..

புரண்டு புரண்டு படுத்தும்
இமைகளில்
தூக்கம்
அமரவில்லை..

பக்கத்தில் P3
படுத்ததும்
தூக்கம் அவரை வாரி
அணைத்துக் கொண்டது..

P1 'குபீர் குபீர்'
என்று 
எழுந்து மீண்டும்
படுத்துக் கொண்டார்..

வந்த 
தண்ணீரை
நெய் போல
ஊற்றி குளித்து
ஐந்து மணிக்கே
தயாரானோம்..

ஆறுமணிக்கு
வந்த
ஏஜெண்டுகள்..
அவர்கள் கூட
வந்த
குளிக்காத 
ஆட்கள் என்று
Mockpoll 
தொடங்கியது..

ஆயிரம்
முறை வீடியோ
பார்த்தாலும்
அங்கு ஒருமுறை
சீல் வைப்பதில்
தடுமாறி 
சரிசெய்து தொடங்கியது உண்மை 
வாக்குப்பதிவு..

ஏழு மணிக்கு
துவங்கிய 
வரிசை
ரயில் பெட்டி 
போல நீண்டது..

அடிக்கடி
Total வுடன்
17A 
ஒப்பிட்டு
ஒரே எண்ணிக்கை வர
குலதெய்வத்தை
கும்பிட்டேன்..

இட்லி 
வந்து 
வயிற்றில்
ஓட்டுப் போட மணி
பத்து ஆனது..

நடுவே ஒரு
தேநீரில்
தலைவலிக்கு
ஒத்தடம் கொடுத்தேன்..

மதிய உணவை
மறக்கும் அளவுக்கு
வாக்குப்பதிவு கூட்டம்..

கையுறை
சானிடைசர்
முகக்கவசம்
எல்லாம் மறைமுக
வேட்பாளாரான
கொரோனாவின் 
சின்னங்கள்..

ஆறு மணிக்கு
மேல்
அடங்கத் தொடங்கியது
வெளிச்சமும்
கூட்டமும்..

ஒரு வழியாக
ஆறு மணிக்கு
Close அழுத்தியதும்
நிம்மதி Open ஆனது..

சீல் வைத்து
முடித்ததும்
ஓரிருவரை தவிர
காற்றாய்
பறந்தனர் ஏஜென்டுகள்..

Po டைரி
17C 
Declaration form
எல்லாம் 
முடித்து நிமிர்ந்த போது
முட்கள் ஒன்பதை 
முத்தமிட்டிருந்தது..

P1 P2 P3
'ஒருநாள் குடும்பம்'
போல
பழகியதால்
எங்கள் ஒற்றுமையின்
இசையில்
சின்ன சின்ன 
சலசலப்புகள்
காணாமல் போனது..

இரவு உணவுக்கு
பதில் தந்த
வாழைப்பழதத்தில்
பசி வழுக்கி
விழுந்தது
வயிற்றுக்குள்..

பத்து மணிக்கு
மேல்
பறந்து வந்த
Zonal 
மொத்தத்தையும்
கொத்திக் கொண்டு
மீண்டும் பறந்தார்..

12 மணிக்கு
மேல் 
துரத்திய நாய்களை தாண்டி வீடுவந்த போது
நாட்டுப்பணி ஆற்றிய
ஒரு ராணுவ வீரனின்
கம்பீரம் எனக்குள்..

படித்ததில் பிடித்தது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...