முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”*
இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.   

 அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்படியே நான் பசியோடும் மேலும் தாகத்தோடும் நான் போய்க் கொண்டே இருந்தால், நான் விரைவில் இறந்து போய் விடுவேன்.

 களைப்படைந்து, அவருடைய சொந்த எண்ணங்களில் மூழ்கியிருந்த அந்தப் படைவீரரை, நெப்போலியன் பார்த்த போது, அவரிடம் கேட்டார், “அந்தப் பையின் உள்ளே என்ன இருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா?

 அந்தப் படைவீரர் கூறினார், "அரசரே, நான் என்ன சுமந்து கொண்டு இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது.”

 நெப்போலியன் படைவீரரிடம், அந்தப் பையை திறந்து பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

 அந்தப் படைவீரர் பார்த்தார். அந்தப் பை முழுவதும் தங்கம் மற்றும் விலை மதிப்புள்ள ஆபரணங்கள்; இவை கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களில் உள்ளவை.

 இன்றிலிருந்து இவை எல்லாமே, உன்னுடையவை; எடுத்துக் கொள்ளலாம், என்று நெப்போலியன் கூறினார்.

 ஒரு சில கணங்களுக்கு முன்பாக, இந்த மாதிரியான கனமான பையைத் தூக்கிக் கொண்டு இருப்பதைப் பற்றி அவருக்குள்ளாகவே, சபித்துக் கொண்டே இருந்தார். அந்த பை முழுவதும், தங்கம் மற்றும் விலை மதிப்புள்ள ஆபரணங்கள் இருப்பதைப் பார்த்தார்; மேலும், அது தனக்கே சொந்தமாகப் போகிறதையும் தெரிந்து கொண்டார். உடனே அவரது மனோபாவமே மாறிவிட்டது. அவருடைய எல்லா பகுதிகளிலும், மகிழ்ச்சி பரவ ஆரம்பித்து விட்டது. திடீரென்று அவருக்கு, அதிக அளவில் வலிமையும் மேலும் சுறுசுறுப்பும் கிடைத்தது தெரிந்தது. இப்பொழுது அந்த படைவீரர், தன் வீட்டை அடைவதற்கு வேகமாகச் சென்றார். அவருடைய எல்லாவிதமான களைப்பும் கூட, காணாமல் போய் விட்டன. நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு, அவர் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தார்.

 இது அற்புதமாக இருக்கிறது; எவ்வாறு நமது நேர்மறையான மனோபாவம் நம் வாழ்க்கையை நோக்கி முடிவில்லாத ஆற்றலை நிரப்ப முடிகிறது; மேலும் இந்த மனோபாவம் எதிர்மறையாக இருந்தால், பிறகு இது எவ்வாறு நம் வாழ்க்கையை உற்சாகம் இல்லாமல் செய்து விடுகிறது. நம்முடைய மனப்பான்மை, நம்முடைய உலகாயத வாழ்க்கையை மட்டுமல்லாமல், நம்முடைய ஆன்மீக வாழ்க்கையையும் பாதிக்கிறது.

 கல்வி விஷயத்திலும் கூட, நாம் பார்க்க முடியும்; எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது அங்கே; அதாவது இரண்டு விதமான மனப்பான்மை கொண்ட குழந்தைகள் இருக்கின்றன. தன்னுடைய படிப்பில் உற்சாகம் கொண்ட குழந்தைகள், படித்துக் கொண்டு இருக்கும் போது எந்த விதமான உற்சாகமும் இல்லாத குழந்தைகள் என்று!

 சரியான மனப்பான்மையை அபிவிருத்தி செய்தால், அது நமக்கு உதவுகிறது; இந்த உலகத்தை சரியான தோற்றத்தில் பார்ப்பதற்கு! நாம் செயற்கையாக சிரித்தால், மேலும் செயற்கையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், இவையும் கூட, இயற்கையான மகிழ்ச்சியாக மாறிவிடும். நம்முடைய உற்சாகமும் மேலும் மகிழ்ச்சியும் வலிமையான காற்றைப் போலப் பரவிவிடும். அனைவரும் நம்முடைய நேர்மறையான சிந்தனையால் ஈர்க்கப்படுவார்கள்.

“வாழ்க்கை என்பது நம் மனப்பான்மையின் வெளிப்பாடாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...