இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓவியரின் ஞானம்

முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு கண்ணும், ஒரு காலும்தான் இருந்தன.  இந்தக் குறைபாடுகள் இருந்தும், அவர் ஒரு திறமையான; இரக்கமான; புத்திசாலித்தனமான அரசராக ஆட்சி புரிந்தார். அந்த அரசரது ஆட்சியின் கீழ் அவரது மக்கள் ஆனந்தமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.      ஒரு நாள் அரசர் தன் அரண்மனை நடை கூடத்தின் வழியாக நடந்து கொண்டு இருந்தார். திடீரென்று, சுவரில் மாட்டி இருந்த படங்களின் மீது அவரது பார்வை விழுந்தது. அவை அவரது முன்னோர்களின் படங்கள் ஆகும். தன்னைப் போல, தனக்குப் பின் வருகின்ற சந்ததியினர்களும் இதே போல் நடக்கும் போது, தம் முன்னோர்களின் படங்களைப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்வார்கள். இந்த அரசரது படம் இதுவரை அங்கு போடப் படவில்லை.  அவரது குறைபாடுகளால், அதாவது ஒரு கண், ஒரு கால் இல்லாத குறைபாடுள்ள அவரது உருவத்தை போடுவது பற்றி அரசர் தயக்கத்தோடு இருந்தார். ஆனால் அன்று தன்னுடைய படத்தையும் போட வேண்டும் என்று, ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தார்.      அடுத்த நாள் அந்த நாட்டில் உள்ள சிறந்த ஓவியர்கள் அனைவரையும் தன் அவைக்கு வரவழைத்தார். அரண்மனை சுவரில் என்னுடைய அழகான படத்தை போ

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பஞ்ச பிரகாரத்திருவிழா பத்தாம் நாள் வெள்ளி சப்பரத்தில் அம்பாள் புறப்பட்டு திருவீதி உலா கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

படம்
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பஞ்ச பிரகாரத்திருவிழா பத்தாம் நாள் வெள்ளி சப்பரத்தில் அம்பாள் புறப்பட்டு திருவீதி உலா கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💥🙏🙏🙏🙏💥பஞ்ச பூதங்களின் தலைவியான அன்னை அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் வைகாசி பஞ்சப் பிரகார விழாவில் வெண்ணிற பட்டுடுத்தி வெள்ளி ரதமேறி வீதி உலா வந்தருளினார்,இன்று பஞ்ச பிரகாரவிழாவின் முக்கிய சிறப்பான நாளில் வெண்ணிற பாவாடை அணிந்து  சிவ ரூபமாகவும், சக்தி பஞ்சாரியாகவும் வலம் வந்து அருள் காட்சி கொடுத்தார்.

சித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும்

🙏          1. திருமூலர் - சிதம்பரம். 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி. 3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில். 4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர். 5. கொங்கணர் - திருப்பதி, திருமலை 6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால் 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை. 8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம். 9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில். 10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு) 11. கோரக்கர் – பேரூர். 12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம். 13. சிவவாக்கியர் - கும்பகோணம். 14. உரோமரிசி - திருக்கயிலை 15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர். 16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை 17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை 18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம். 19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில். 20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம். 21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம். 22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர். 23. இராமதேவ சித்தர் - அழகர் மலை 24. மார்க்கண்டேயர் - கருவை நல்ல

உணர்வு

அமெரிக்காவில் மசேச்சுசெட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள டெக்ஸ்பரி இன்ஸ்டிடியூட், ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் புகலிடம் தரும் இடம் ஆகும்.   ஆன்னி என்ற இளம் சிறுமி அவளது அம்மாவின் மறைவிற்குப் பிறகு, இந்தப் புகலிடத்திற்கு அனுப்பப்படுகிறாள். அவளது நடத்தை மிகவும் சீர்கேடான நிலையில் இருந்தது. அவளுக்கு, யாருமே எதுவுமே செய்ய முடியாத நிலைமைதான் இருந்தது. அவள் அருகில் யார் சென்றாலும், அவர்களை கடித்து வைப்பாள்; சீறிப் பாய்வாள்; அவர்கள் கொடுத்த உணவை அவர்கள் மீதே வீசி எறிவாள். டாக்டர்களும், நர்சுகளும் கூட, அவள் அருகில் சென்று அவளைப் பரிசோதிக்க முடியாது. யாராவது அருகில் சென்றால், அவர்கள் மீது எச்சில் உமிழ்ந்து விடுவாள்; கீறி விடுவாள். அவளது இந்த மோசமான செயல்களால், அவளை அந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் இருக்கும் ஒரு சிறைச்சாலை மாதிரியான சிறிய அறை ஒன்றில் அடைத்து வைத்தார்கள்.   அங்கே வேலை செய்யும் ஒரு வயதான பெண் மணி இவை அனைத்தையும் கவனித்தாள். இந்த சிறுமிக்காக மிகவும் வருத்தப்பட்டாள். ஆன்னி, அந்த சிறையில் அடைபட்டுக் கிடப்பது அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஆன்னிக்கு உதவி செய்ய விரும்

ஒரு ஆட்டு மந்தை

படம்
முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார்.  அந்த அரசர் தன் அமைச்சரிடம், “செம்மறி ஆடுகளின் பிறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  அவை மந்தை மந்தையாய் இருக்கின்றன.  அதே நேரத்தில் நாய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. ஏன் இப்படி?” என்று கேட்டார்.               அமைச்சர் அரசரிடம், “எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள்.  நாளை இதற்கு நான் பதில் கூறுகிறேன் என்றார்”. அன்று மாலை அமைச்சர் இரண்டு அறைகளை தயார் செய்தார்.    அரசரும் அதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.  ஒரு அறையில் 20 செம்மறி ஆடுகளை வைத்து, அந்த அறையின் நடுவே ஒரு கூடை நிறைய ஆடுகளுக்கு உரிய உணவை அதில் அமைச்சர் வைத்தார்.  பின்பு, அந்த அறையை பூட்டி விட்டார்.             அடுத்த அறையில் 20 நாய்களை வைத்து, அந்த அறையிலும் ஒரு கூடை நிறைய ரொட்டிகளை உணவாக வைத்தார்.  பிறகு அந்த அறையையும் பூட்டி விட்டார்.             அடுத்த நாள் காலை அமைச்சர் அரசருடன் அங்கு வந்தார்.  முதல் அறையின் கதவை திறந்தார்.  ஆடுகள் அனைத்தும் ஒன்றன் மீது ஒன்றாக தலை சாய்த்து வசதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தன.    உணவு வைத்திருந்த கூடை காலியாக இருந

ஒரு அறிஞனின் சோதனை.

படம்
மகாகவி காளிதாசரைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து இருக்கிறோம்.   அவரது காலத்தில் அவர் ஒரு சிறந்த புலவர்; கவிஞர்; மிகச் சிறந்த அறிஞர்.  அவரைப் பற்றிய கதைதான் இது.       ஒரு முறை காளிதாசர் மிகப் பெரிய காட்டின் வழியாக நடந்து கொண்டு இருந்தார். அந்தக் காட்டைக் கடக்க வெகு நேரம் ஆயிற்று.    சூரியன் மிகக் கடுமையாக அனலை வீசிக்கொண்டு இருந்தது.  வெயிலின் கடுமை அவரது சக்தி முழுவதையுமே உறிஞ்சி எடுப்பது போல இருந்தது.  கதிரவனின் அனல் கதிர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கிய போதும், அவர் அதை குறையாக எண்ணவில்லை;  அவரால் அதை எதுவும் செய்ய இயலாது.   தண்ணீர் தாகம் அவரைப் பாதித்தது.     தாங்க முடியாத அளவுக்கு அவருக்கு தாகம் எடுத்த போது,  தண்ணீர் குடத்தோடு ஒரு பெண் மணி அவரைக்  கடந்து செல்வதைப் பார்த்தார்.  அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் ஆனது.   அந்த பெண்ணை நோக்கி,  வேகமாக நடந்து சென்றார்.  “அம்மா!  இந்த வெயில் என்னை மிகவும் கடுமையாக வாட்டுகிறது;  தாங்க முடியாத தாகத்தால் என் தொண்டையில், முள் குத்துவது போல் உணர்கிறேன்.  தயவு செய்து என் மீது இரக்கம் காட்டி,  கொஞ்சம் தண்ணீர், தா” என கேட்டார்.  அந்த பெ

அறம் மற்றும் கடமை

முன்னொரு காலத்தில் நல்ல குணமும் ஒழுக்கமும் நிறைந்த மனிதன் ஒருவன், தன் மனைவி குழந்தைகளோடு புனித யாத்திரை மேற்கொண்டார்.  பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.  புனித யாத்திரையை அவர் மேற்கொண்ட காலமோ, கடுமையான கோடை காலம் ஆகும்.  பல மைல்கள் தூரம் கடந்த பிறகு,  அவர்கள் கொண்டு வந்து இருந்த தண்ணீரும் காலியாகி விட்டது.  குடும்பமே தண்ணீர் தாகத்தால் வருந்தியது.  கடுங்கோடை என்பதால்  வழியில் எங்குமே தண்ணீர் இல்லை.  குழந்தைகள் தாகத்தால் தவித்தனர்.  இந்த மனிதனுக்கோ எப்படி இந்த பிரச்சனையைத் தீர்ப்பது என்று தெரியாமல் தவித்தார்.  எந்த வழியும் தெரியாமல்,  கடவுளிடம் முறையிட ஆரம்பித்தார்.  கடவுளிடம்,  ஓ பிரபுவே!  தயவு செய்து இந்த சூழ்நிலையை சமாளிக்க நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார்.  சிறிது நேரத்தில், கண்ணுக்கு எட்டிய தூரத்தில், ஒரு சந்நியாசி ஓரிடத்தில் உட்கார்ந்து  தியானம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.  அவரிடம் சென்று தன் பிரச்சனையைக் கூறினார்.  சந்நியாசி அவரிடம்,  “இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் ஒரு சிறிய ஆறு வடக்கு நோக்கி பாய்ந்து செல்கிறது.  நீ அங்கு சென்று,  உங்கள் தாகத்தை தீர்த்

வரலாற்றில் இன்று - மே 10, 1857 இந்தியச் சிப்பாய்க் கலகம் (Indian Sepoy Mutiny) துவங்கியது

படம்
 சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையிலிருந்த இந்திய சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது. . ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", எனவும் அழைக்கப்படுகிறது. இந்த புரட்சிக்கு வித்திட்டது இளம் சிப்பாய் மங்கள் பாண்டேயின் வீரமாகும். அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கி தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய

ஆசைகள்

 ஒரு சமயம் ஒரு வியாபாரி, ஒரு துறவியைத் தன் வீட்டிற்கு மதிய நேர உணவிற்காக அழைத்தார். ஆனால் அன்று, அந்த துறவி ஏகாதசி விரதம் மேற்கொண்டு இருந்தார். அவரால் அங்கே போக முடியாமல் போனது. எனவே, அவர் தனது சீடர்கள் இருவரை, வியாபாரியின் வீட்டிற்கு சாப்பிட அனுப்பி வைத்தார் … ஆனால், அந்த இரண்டு சீடர்களும் திரும்பிய நிலையில், ஒருவர் வருத்தமாக இருந்தார்; இன்னொருவர் மகிழ்ச்சியாக இருந்தார்!  அந்த துறவிக்கு இதைப் பார்த்ததும், ஒரே வியப்பு; அவர் கேட்டார்,”மகனே, நீ ஏன் வருத்தமாக இருக்கின்றாய்? அந்த வியாபாரி, அவருடைய விருந்தோம்பலின் போது, ஏதேனும், வேறுபாட்டை, உங்களிடையே, காட்டினாரா?“  “இல்லை மாஸ்டர்.”  “நீங்கள் அமரவைக்கப்படுவதில், ஏதேனும் வேறுபடுத்திக் காட்டினாரா?”  “இல்லை, மாஸ்டர்.”  “ அந்த வியாபாரி தட்சிணை கொடுப்பதில் ஏதேனும், வேறுபாடு செய்தாரா?”   “இல்லை குருஜி. அவர் எங்கள் இருவருக்குமே, சமமாகவே, தொகையைக் கொடுத்தார். எங்கள் ஒவ்வொருவருக்கும் சமமாக 2 ரூபாய் கொடுத்தார்.”  இப்போது, குருஜி, இன்னும் அதிக அளவு வியப்பு அடைந்து கேட்கலானார். “பிறகு நீ வருத்தம் கொண்டு இருப்பதற்கான காரணம்தான் என்ன? மேலும், இந்த

கணக்கெடுப்பின் முடிவு

ஒரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் அவருடைய மாணவர்களுக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்தார். மும்பையில் இருக்கும் தாராவி என்ற இடத்தில் இருக்கும், ஒரு சேரியில் இது நடக்கிறது. 10 முதல் 13 வயது வரையுள்ள பையன்களிடம் தொடர்பு கொண்டு, அவர்தம் வருங்காலத்தில் என்னவாக ஆக விரும்புகிறார்கள் என்பதையும், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் சமூக சூழ்நிலைகளையும் அவர்கள், மதிப்பாய்வு செய்திட வேண்டும்.   அந்த கல்லூரி மாணவர்கள் வேலை செய்யத் தொடங்கினார்கள். அந்த சேரியில் உள்ள 200 குழந்தைகளின் வீடுகளின் சூழல், அவர்களுடைய பெற்றோர்களின் சூழல், வாழ்க்கை முறை மற்றும் அங்குள்ள மக்களின் கல்வித்தரம், மது, போதை வஸ்து இவற்றின் நுகர்வு இது போன்ற பல்வேறு காரணிகளை கருத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இதற்குப் பிறகு அங்கே இருக்கும் பையன்களை சேர்த்து, பேட்டி எடுத்தனர். அவர்களுடைய கருத்துக்கள் தீவிரமாக கேட்கப்பட்டு, குறிப்புக்கள் கருத்தில் கொள்ளப் பட்டன.   இந்த அசைன்மெண்ட் முடிவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆனது. இதன் முடிவின் படி, அந்தப் பையன்களில் 95% குழந்தைகள் கிரிமினல் வழிகளில் போகின்றனர்; மேலும் வளர்ந்த பிறகு,

ஹனுமான் வால்மீகி ராமாயணம்

வால்மீகி அவருடைய இராமாயணத்தை நிறைவு செய்த போது, நாரதருக்கு அது ஈர்ப்பாக இருக்கவில்லை. “இது நன்றாக இருக்கிறது; ஆனால், ஹனுமான் எழுதி இருப்பது, இன்னும் மேலாக இருக்கிறது.” என்றார் நாரதர்.  “ஹனுமான் ராமாயணம் கூட எழுதி இருக்கிறாரா? வால்மீகிக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. யாருடைய இராமாயணம் மிகவும் நன்றாக இருக்கிறது, என்பது பற்றி மேலும் ஆச்சரியம் அடைந்தார். ஆகவே, ஹனுமானைத் தேடிக் காண, கிளம்பி விட்டார்.   கதலி வனத்தில் வாழைத் தோப்பு; அவர் ஏழு அகலமான வாழை இலைகளில், இராமாயணம் பொறிக்கப்பட்டு இருப்பதை, பார்த்தார். அவர் அதை வாசித்தார்; அது நேர்த்தியாக இருந்தது. மிகவும் துல்லியமான இலக்கணத் தெரிவு, அத்துடன் சேர்த்து சொல்வளம், துல்லியமான மற்றும், காதுக்கினிய கருத்துக்கள் என்று காணப்பட்டது. அவரால், அவருக்கே கூட உதவிட முடிய வில்லை; அழுவதற்கு ஆரம்பித்தார்.  “ இது என்ன அவ்வளவு தூரம் மோசமாகவா இருக்கிறது” என்று கேட்டார் ஹனுமான். “இல்லை; இது மிகவும் நன்றாக இருக்கிறது.” என்றார் வால்மீகி.  “பிறகு நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? “இது ஹனுமான் கேள்வி. “ஏனென்றால், உனது இராமாயணத்தைப் படித்த பிறகு, என்னுடையதை, யார் ஒர

நான் யார்?

 ஒரு முறை பிச்சைக்காரர் ஒருவர், ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கும் போது, சூட்டும், பூட்ஸும் அணிந்து, நேர்த்தியான உடையில் ஒரு வியாபாரி அமர்ந்து இருந்ததை, அந்த பிச்சைக் காரர் கவனித்தார். இவர் நினைத்தார்; அதாவது இவர் ஒரு பெரிய பணக்காரராகத்தான் இருக்க முடியும்; எனவே, அவர் நிச்சயமாக, நிறையவே பணம் தருவார்; நான் சென்று கேட்டால் கிடைக்கும். ஆகவே, அவர் போய் அந்த மனிதரிடம், பிச்சை கேட்டார்.  அந்த மனிதன், அந்த பிச்சைக் காரனைப் பார்த்துக் கூறினார்,“நீ எப்போதும் பிச்சை எடுக்கிறாய்; மேலும் மக்களிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறாய்; நீ எப்போதாவது யாருக்காவது, எதையாவது கொடுத்திருக்கிறாயா?”  அந்த பிச்சைக்காரர் கூறினார்,“சார், நான் ஒரு பிச்சைக்காரன். என்னால் மக்களிடம் பணத்தைக் கேட்க மட்டுமே முடியும். எவ்வாறு என்னால் ஏதாவது யாருக்காவது கொடுக்க முடியும்? “  அந்த மனிதர் பதிலளித்தார்,” உன்னால் யாருக்கும் எதுவுமே கொடுக்க முடியாத போது, அதன் பிறகு, அது போலவே, உனக்கு அடுத்தவர்களிடம் எந்த ஒன்றையும் கேட்பதற்கு, எந்த உரிமையும் இல்லை. நான் ஒரு வியாபாரி மேலும் பண பரிவர்த்தனைகளில் மட்டுமே எனக்கு நம்பிக்கை உண

நீதியின் நான்காவது கால்

 ஒரு அதிகாலைப் பொழுதில், நானும் என் மனைவியும் விசாகப் பட்டினம் இரயில்வே ஸ்டேசனில், இருந்து கிளம்புகின்ற, ஜென்ம பூமி ரயிலில் ஏறினோம். ராஜ முந்திரியில், நடக்க இருக்கும், எனது நண்பரது மகளின் திருமணத்திற்காகபுறப்பட்டோம்.  அதிகாலை தென்றல் காற்றும், மேலும் இரயிலின் முன்னும் பின்னுமான அசைவும், நிதானமாக இருந்தது; மேலும் நாங்கள் உறங்கத் தொடங்கினோம்; அந்த ரயில், டுனி ஸ்டேசனில் நிற்கும் வரை உறங்கினோம். ரயில் பெட்டியைக் கடந்து சென்று கொண்டு இருக்கின்ற விற்பனையாளரை அழைத்தேன்; இரண்டு கப் காஃபிக்கு ஆர்டர் செய்தேன். ஒன்றை, என் மனைவியிடம் கொடுத்தேன்; ஒரு சிப் அருந்தினேன். காஃபியின் ருசியைப் பாராட்டி, அவரைப் புகழ்ந்தேன்; ‘விலை என்ன என்று கேட்டேன்?”. அவர், 20 ரூபாய் என்று சொன்னார். நான் என் பர்ஸைத் திறந்து, அதில் இருந்த ஒரு 200 ரூபாய் நோட்டை எடுத்தேன்; நான் அவரிடம் அந்த 200 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.  “உங்களிடம் சில்லறை இல்லையா? அவர் கேட்டுக் கொண்டே, அந்த ஃபிளாஸ்கை கீழே வைத்து விட்டு, அவரது சட்டைப் பையில், இருந்து சில்லறையைத் தேடிக் கொண்டு இருந்தார். அந்த ரயில், அவர் சில்லறையை, தனது பாக்கெட்டில் இருந

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் தானம் செய்வது நன்மை

கிருஷ்ண பகவான் - உத்தவா உரையாடல்.

 உத்தவா அவருடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, கிருஷ்ண பகவானுடைய தேரோட்டியாக அவரோடு இருந்து வந்தார். மேலும் அவருக்கு பல்வேறு வழிகளில் சேவை செய்து வந்தார். அவர் ஒரு போதும், கிருஷ்ணரிடம் இருந்து எந்த விதமான விருப்பத்தையோ அல்லது வரத்தையோ நாடியது இல்லை.  கிருஷ்ண பகவான் அவரது இந்த அவதாரத்தை முடிக்கும் எல்லைக் கோட்டில் இருக்கும் போது, அவர் உத்தவரை அழைத்தார். “அன்பு உத்தவா, என்னுடைய இந்த அவதாரத்தில் நிறைய மக்கள், என்னிடம் இருந்து நிறைய வரங்களைக் கேட்டும், பெற்றும் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு போதும், என்னிடம் எதுவுமே கேட்டது இல்லை. இப்பொழுதாவது நீங்கள் ஏதாவது கேட்கலாம் அல்லவா? நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். இந்த அவதாரத்தை நிறைவு செய்திடும் போது, உங்களுக்கும் ஏதாவது செய்திட்ட திருப்தி எனக்கு கிடைத்திடும்.“  உத்தவா அவருக்கு என்று எதுவுமே, கேட்காமல் இருந்த போதிலும், அவர் அவருடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே, கிருஷ்ணரை உற்றுக் கவனித்துக் கொண்டே இருக்கிறார். அவர் எப்போதும் ஆச்சரியம் கொள்வதுண்டு. அதாவது கிருஷ்ணருடைய போதனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் வெளிப்படையாகவே, வேறுபாடு இருப்பது பற்ற