முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டு டைரிகள்

 ஒரு கணவனும் மனைவியும்  அவர்களது திருமணம் ஆண்டு நிறைவு விழா முடிந்த அன்று, தேநீர் அருந்திக் கொண்டு இருந்தனர்.    அவர்கள் இருவரும் மற்றவர் பார்வையில்  சிறந்த தம்பதிகள்.  இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடன் இருந்தனர். சில சமயங்களில் சிறுசிறு சச்சரவுகள் அவர்களுக்கு இடையே நிகழும். 
அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது,  மனைவி ஒரு கருத்தைக் கூறினாள்.  உங்களிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் என்னிடம் உள்ளன. நம் இருவருக்கும்  பேசுவதற்குக் கூட நேரம் கிடைப்பது இல்லை.  எனவே, நான் இரண்டு டைரிகளை வாங்கி இருக்கிறேன்.  இந்த வருடம் முழுவதும்  நாம் பேச வேண்டியதை இந்த டைரியில் எழுதுவோம்.  அடுத்த வருடம் இதே நாளில், நாம் இருவரும் இந்த டைரியை படிக்க வேண்டும்.  அதில் இருக்கும் விஷயங்களை கவனித்து,  அதை சரிசெய்ய, நாம் இருவரும்  சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.  கணவனுக்கும் இந்தக் கருத்து பிடித்து இருந்ததால், அதற்கு உடனே சம்மதித்தான். இருவரும் தத்தம் டைரியை  எடுத்துக் கொண்டனர்.
 
ஒரு வருடம் கழிந்தது. அந்த திருமண ஆண்டு விழா அன்று,  அவர்கள் இருவரும்,  தங்கள் டைரிகளை மாற்றிக் கொண்டார்கள்.   ஏற்கனவே அவர்கள் முன்பே தீர்மானித்தபடி  டைரியை படிக்கத் தொடங்கினர்.  கணவர் முதலில் மனைவியின் டைரியை  படிக்கத் தொடங்கினார். முதல் பக்கத்தில்,  இது நமது கல்யாண நாள்.  நீங்கள் எனக்கு அழகான பரிசு தரவில்லை. இரண்டாவது பக்கத்தில்,  என்னை  நீங்கள் டின்னருக்காக  ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துச் செல்லவில்லை.    மூன்றாவது பக்கத்தில், நீங்கள் என்னை சினிமாவுக்கு அழைத்து செல்வதாக முதலில்  வாக்குக் கொடுத்தீர்கள்.  ஆனால் கடைசி நேரத்தில்,  எனக்குக் களைப்பாக இருக்கிறது;  இன்று சினிமாவுக்குப் போக வேண்டாம் என்று முடிவு செய்தீர்கள்.  என்னுடைய  உறவினர்கள் வந்திருக்கும் போது, நீங்கள்  அவர்களிடம் சரியான முறையில்,  பேசவில்லை.  சில வருடங்களுக்குப் பிறகு  இன்று எனக்கு ஒரு புடவை வாங்கி வந்தீர்கள். அது மிகவும்  பழைய மாடலாக இருந்தது. 

  இது போல  நிறைய மோசமான குற்றச் சாட்டுக்கள் அந்த டைரியில்  எழுதப்பட்டு இருந்தன.  கண்ணீர் மல்க கணவர் டைரியை படித்து முடித்தார்.
தன் மனைவியிடம்,“ என்னை மன்னித்து விடு.  நான் வருத்தப்படுகிறேன்.  இது வரைக்கும் இப்படிப் பட்ட தவறுகள் பற்றி,  நான் அறிய வில்லை.  இனிமேல்  இவ்வாறான தவறுகளை திரும்பவும் செய்யாமல்,  நல்லதை செய்ய முயற்சி செய்கிறேன்”  என்றார். 
 
 இப்போது  மனைவி கணவனின்  டைரியை எடுத்தாள். முதல் பக்கம்  ஒன்று எழுதாமல் இருந்தது.  இரண்டாவது,  மூன்றாவது … …. ……என எல்லாமே வெற்றிடமாக இருந்தது.  50 முதல்  60 பக்கங்கள் வரை திருப்பினாள்.  அனைத்தும் காலியாகவே இருந்தன.    மனைவி மிகவும் ஏமாற்றம் அடைந்தாள்.   எனக்குத் தெரியும்,  உங்களால் என்னுடைய இந்த சின்ன ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாது என்று கோபம் அடைந்தாள்.  நான் மிக அதிகமான முயற்சி எடுத்து,  என் மனதில் உள்ள அனைத்தையும்,  இந்த ஒரு வருடமாக  உங்களுக்கு எழுதி வைத்து  இருக்கிறேன். ஆனால், நீங்கள்  எனக்காக இதைக் கூட செய்யாமல் இருந்திருக்கிறீர்கள்.   
 
 இதைக் கேட்ட கணவன்  புன் சிரிப்போடு,  கடைசி பக்கத்தில்  நான் அனைத்தையும் எழுதி இருக்கிறேன் என்று அன்பாகக் கூறினான்.  மனைவி  ஆவலோடு கடைசி பக்கத்தை திருப்பினாள். “ உன்னை எப்படி குறை கூற முடியும்?  வருடம் முழுவதும் என்னிடமும்,  என் குடும்பத்தினரிடமும்  நீ காட்டிய ஈடு இணையற்ற அன்பின் முன்,   நான் என்ன குறையைக் கண்டு பிடித்து,  இந்த டைரியில் எழுத முடியும்?     நீ தவறே செய்யாதவள் அல்ல. 

 உன்னுடைய அன்பு,  அர்ப்பணிப்பு,  எங்களுக்காக நீ செய்த தியாகம் – இவற்றின் முன்  உன்னுடைய சிறிய தவறுகள் எல்லாம்,  ஒன்றுமே இல்லாமல் மறைந்து விட்டன”. 

 நான், மன்னிக்க முடியாத,  எண்ணிக்கையில் அடங்காத தவறுகளை செய்த போதும்,  என்னுடைய வாழ்க்கையின்  ஒவ்வொரு கட்டத்திலும் நீ எனது நிழல் போல் இருந்து, உதவி செய்து இருக்கிறாய்.   எனது சொந்த நிழலில் நான் குற்றம் காண முடியுமா?
இதைப் படித்தவுடன்,  மனைவியின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. கணவனிடம் இருந்த  தன் டைரியை வாங்கி  இரண்டையும்  தீயில் இட்டாள். அத்துடன், தனது வேறுபாடுகள், குறைகள் அனைத்தையும் தீயில் கருக்கி விட்டாள்.
புதிதாக மணம் செய்த தம்பதிகளைப் போல, திரும்பவும் அவர்கள் வாழ்க்கை,  அன்பின் துணையோடு மலர்ந்து மணம் வீசியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...