முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உண்மையான மன்னிப்பு

ஒரு முறை கௌதம புத்தர் தன் சீடர்களோடு, அமர்ந்திருக்கும் போது, ஒரு மனிதன் கோபத்துடன் புத்தரை நோக்கி உள்ளே வந்தான்.    
  
 புத்தர் ஏதோ தவறு செய்வதாக அந்த மனிதன் வழக்கமாக நினைத்துக் கொள்வான். புத்தர், மக்களை தியானம் செய்ய சொல்கிறார்; மக்களும் மிக அதிக அளவில் பெருங்கூட்டமாக அவரால் ஈர்க்கப்படுகின்றனர்.
  
 அவன் ஒரு வியாபாரி. அவனுடைய குழந்தைகள் அதிகமான நேரத்தை புத்தரோடு செலவழிப்பதை அவன் எதிர்த்தான். இந்த நேரத்தை வியாபாரத்தில் செலவிட்டால், அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் ; உறுதியாக ஒரு நல்ல வாழ்க்கை அமையும்.
  
 ஒருவர் அவருடைய அன்றாட நாளில், நான்கு மணி நேரமாக கண்களை மூடி உட்கார்ந்து இருப்பது என்பது முழுவதுமாக நேரத்தை வீணாக்குவது என்று எண்ணினான். இதனால் அவன் ஏமாற்றமும், களைப்பும் அடைந்தான். 

 இந்த மனிதருக்கு, அதாவது புத்தருக்கு ஒரு பாடம் கற்பித்துக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தான்.  
கோபம் நிறைந்த மனதோடு, புத்தரை நோக்கி மன உறுதியோடு நடந்தான்.        

 அவன் புத்தரை நெருங்கியவுடனே, அவனது எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் மறைந்து விட்டன; அவனிடம் இருந்த கோபமும் இல்லாமல் போய் விட்டது.
  
 தன் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில் தோல்வி அடைந்த அவன், புத்தர் முகத்தின் மேல் எச்சில் உமிழ்ந்தான். புத்தர் தன் புன் சிரிப்பை அதற்குப் பதிலாகக் கொடுத்தார்.
  
 அங்கு உட்கார்ந்திருந்த புத்தரின் சீடர்கள், அந்த மனிதனுக்கு கோபத்துடன் பதிலடி கொடுக்க தயார் ஆனார்கள். ஆனால், புத்தரின் அந்த அமைதியான இருப்பானது, அவர்களை அப்படி செய்வதற்கு அனுமதிக்கவில்லை. இவ்வாறு புத்தரை ஒருவர் அவமானப் படக்கூடிய விதத்தில், நடத்தியதை அந்த சீடர்களால் நம்பவே முடியவில்லை !. ஆனால் அவர்களால் எதுவும் பேசவும் முடியவில்லை.
  
 அந்த மனிதரால், அந்த இடத்தில் அதற்கு மேல் நிற்க முடியவில்லை; தன்னுடைய இந்த செயலுக்கு சுற்றியுள்ள யாருமே எந்த எதிர் செயலும் செய்ய முன்வரவில்லை ! புத்தரும் தன் புன் சிரிப்பைத்தான் பதிலாகக் கொடுத்தார். இனியும் இங்கு நான் இருந்தால், நான் கோபத்தால் நிலை குலைந்து ஏதாவது செய்து விடுவேன் என உணர்ந்து வெளியே சென்றான்.
  
  அந்த மனிதர் வீட்டுக்குத் திரும்பியதில் இருந்தே, அவரால் புத்தரின் புன்சிரிப்பான அந்த முகத்தோற்றத்தை, அவரது மனதில் இருந்து அழிக்கவே முடியவில்லை. அவமரியாதையான செயலுக்கு வழக்கத்திற்கு மாறான எதிர்செயலை செய்த ஒருவரை, தன் வாழ்க்கையில் முதன் முறையாக இப்போதுதான் அந்த மனிதர் சந்தித்தார்.
  
 இரவு முழுவதும் அவரால் தூங்க முடியவில்லை ; அவரது இதயம் முழுவதுமாக தன்மை மாற்றம் அடைந்தது.

 தூக்கம் வராமல் நடுங்கிக் கொண்டும், அசைந்து கொண்டும் இருந்தார். இந்த உலகமே தகர்ந்து விழுவது போல உணர்ந்தார்.
  
 எனவே அடுத்த நாள் புத்தரிடம் சென்று அவர் பாதங்களில் விழுந்து,“தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்! நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை” என்றார். 
 
 இதற்கு புத்தர், “என்னால் உன்னை மன்னிக்க முடியாது” என்று பதில் கூறினார்.
புத்தரின் இந்த பதிலைக் கேட்டு அவரது சீடர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். புத்தர், தன் வாழ்நாள் முழுவதும் எல்லோரிடமும் மிகவும் இரக்கத்தோடு இருந்தார்.

 ஒருவன் தன் கடந்த காலத்தில், எப்படி இருந்த போதிலும், அவனை தன் ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். அப்படிப்பட்ட சிறந்த மகான், ஏன் இந்த வியாபாரியிடம், அவனை மன்னிக்க முடியாது என்று கூறுகிறாரே என்று அதிர்ச்சி அடைந்தனர். 
புத்தர் தன்னை சுற்றிலும் உள்ள தன் சீடர்களைப் பார்த்தார்.

 ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு பிடித்தார். ஆகவே புத்தர் அந்த வியாபாரியைப் பார்த்து,“நான் எதற்காக உங்களை மன்னிக்க வேண்டும் ? நீங்கள் எதுவுமே செய்யாமல் இருக்கும் போது, எதற்கு இந்த மன்னிப்பு ? நீங்கள் என்ன தப்பு செய்தீர்கள் ? நான் எதற்காக உங்கள் நடத்தைக்கு மன்னிக்க வேண்டும் ? என்றார்.

அந்த வியாபாரி, “நேற்று நான் இங்கு வந்தேன்; என்னுடைய கோபத்தால் உங்கள் மீது எச்சில் உமிழ்ந்தேன்; அந்த மனிதன்தான் நான்; அந்த செயல் செய்ததும் நான்தான்” என்று பதில் கூறினான். 
    
புத்தர்,“நேற்று உன்னால் அவமானப்பட்ட அந்த மனிதர் இப்போது இங்கு இல்லை ; நான் எப்போதாவது உன்னால் எச்சில் உமிழப்பட்ட அவரை சந்திக்க நேர்ந்தால், அவரிடம் உன்னை மன்னிக்கும்படி கூறுகிறேன்“ என்றார்.

 எனக்கு இந்தக் கணத்தில் என் முன் நிற்கும் இந்த மனிதன் நீ வியக்கத்தக்க வகையில் எந்த தவறும் செய்யாதவன்.

நம் வாழ்க்கையில், எப்போது ஒருவரை நாம் உண்மையாக மன்னிப்போம் ?
 உண்மையான மன்னிப்பு என்பது, நாம் ஒருவரை மன்னிக்கும் போது, அவர் மன்னிக்கப்பட வேண்டியவர் என்பதை யாரும் அறியாமல் மன்னிக்க வேண்டும். தன் செயலுக்கான குற்றவுணர்வு, அவரைப் பாதிக்காதவாறும் இருக்க வேண்டும். இதுதான் மன்னிக்கும் தன்மையின் சரியான வழிமுறையாகும்.
  நாம் ஒருவரை மன்னித்து விட்டு, அந்த தவறை அவருக்கு திரும்பவும் ஞாபகப்படுத்தி ; எப்போதும் அவரை குற்றவுணர்வுக்கு ஆளாக்குவது என்பது, உண்மையிலேயே நாம் அவரை இதுவரை மன்னிக்கவில்லை என்றாகி விடும்.
 ஒருவர் செய்த தவறை, அவர் உணரச் செய்வது மட்டுமே அவருக்கு நாம் கொடுக்கும் போதுமான தண்டனையாகும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல். – என்ற வள்ளுவரின் வாக்கும்,

“மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில்" என்ற கூற்றும் இந்த மன்னிக்கும் தன்மையின் சிறப்பைப் பற்றியே கூறுகின்றன. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது

*ப்ளீஸ்*  என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..  ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!  கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..  இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..*  *எப்ப பாரு என்ன டிவி?*  *புக் எடுத்து படி...* *வீட்டு வேலை செய்*, ...

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

ஆடி ஒன்று

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதம் 2024 :-* *வருகின்ற 17-07-2024 புதன்கிழமை* *ஆடி மாதம் பிறக்கின்றது* *ஆடி மாதம் என்றாலே...* *"உலகை ஆளும் ஆதிபராசக்தி அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு தெய்வீக மாதம்"* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷         *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘* *ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், மேலும் சிறப்பு பூஜைகள் ஊர் முழுவதும் களைகட்டும்....* *ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஆடி மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன...* 💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷 தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது... தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும்.  இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது. 🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதத...