முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோதுமை தானியத்தின் மந்திரம்

முன்னொரு காலத்தில் அமர்சென் என்ற ஒரு புத்திசாலி மனிதர், ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார்.     அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.  அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவரவர் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து  வந்தனர்.

 அமர்சென்னுக்கு வயதாகி விட்டது.   அவரது மனைவியும் இறந்து விட்டாள்.  தன்னுடைய பணம்  சொத்துக்களை  முறைப்படி,  கொடுக்க தீர்மானித்தார்.     இந்த முடிவுக்கு வந்த பிறகு,  தன்னுடைய மகன்கள், மருமகள்களை அழைத்தார்.  ஒவ்வொரு ஜோடிக்கும்  அதாவது ( ஒரு மகன், மருமகள் இவ்வாறு நான்கு ஜோடிகள்). 

  ஒவ்வொருவருக்கும் ஐந்து கோதுமை தானியங்களைக் கொடுத்தார்.  எண்ணி  ஐந்தே ஐந்து  கோதுமைகள் தான்.  நான் இப்போது, தீர்த்த  யாத்திரை செல்கிறேன்.   நான்கு வருடங்கள் கழித்து  திரும்பி வருவேன்.  நான் திரும்பி வரும் வரை இந்த கோதுமைத் தானியங்களை யார் முறைப் படி, கவனமாக வைத்துள்ளார்களோ,  அவர்களுக்குத்தான் என்னுடைய சொத்து முழுவதும் சேரும்,  என கூறி விட்டு சென்றார்.  

 முதல் மகனும், மருமகளும்  இந்த வயதான கிழவருக்கு என்ன வாயிற்று.   நான்கு வருடங்களாக இந்த ஐந்து கோதுமைகளைப் பற்றி யார் ஞாபகம் வைத்துக் கொள்ளப் போகிறார்கள்.  எப்படியும்  நாம்தான்  மூத்தவர்கள்.  சொத்துக்கு முதல் உரிமை நமக்குத்தான் என்ற எண்ணத்துடன்,  அந்த கோதுமைத் தானியங்களை தூக்கி எறிந்து விட்டனர். 

இரண்டாவது மகனும், மருமகளும்  இந்த தானியங்களைப் பாதுகாத்து வைப்பது  மிகவும் கஷ்டம் இந்த தானியங்களை நாம் சாப்பிட்டால் இதில் ஏதோ நல்லது இருக்கும். அப்பாவும் மகிழ்ச்சி அடைவார்.  திரும்பி வந்ததும்  நம்மை வாழ்த்தி,  சொத்து முழுவதும்  நமக்குக் கொடுப்பார் என முடிவு செய்து, அந்த தானியங்களை இருவரும் சாப்பிட்டனர்.
மூன்றாவது மகனும், மருமகளும் மிகவும் மத நம்பிக்கையும்,  கடவுள் நம்பிக்கையும் உடையவர்கள்.    கோவிலில் இருக்கும்  கடவுள் சிலைகளை பாதுகாப்பது போல், இந்த தானியங்களையும்  நாம் பாதுகாத்து  வைத்து,  அப்பா வந்தவுடன் பத்திரமாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தனர்.  
 
 நான்காவது மகனும் மருமகளும்  இதைப் பற்றி அறிவு பூர்வமாக சிந்தனை செய்தார்கள்.  அவ்விருவரும்  அந்த ஐந்து கோதுமை தானியங்களையும், பூமியில் விதைத்தனர்.     செடிகள் வளர்ந்தன.  கொஞ்சம் கோதுமைகள் கிடைத்தன.  அதையும் அவர்கள்  விதைத்தனர்.  இவ்வாறு  ஒவ்வொரு வருடமும்,  கோதுமை தானியங்களின் அளவை  அதிகரித்தனர். 

  அந்த ஐந்து கோதுமைகள்,  இப்போது  ஐந்து   சாக்குகள் ஆகி,  இருபத்தைந்து சாக்குகள் ஆகி,  பிறகு  ஐம்பது சாக்குகளாக அதிகரித்து விட்டன.
நான்கு வருடங்கள் கழிந்தன.  அமர் சென் திரும்பி வந்தார்.  நான்கு ஜோடிகளையும் அழைத்தார்.  கோதுமையை அவர்கள் என்ன செய்தனர்,  என்பதைப் பற்றி கேட்டார். 

 நான்காவது மகனிடமும் மருமகளிடமும் அவர் கேட்ட போது  அந்த மகன், “அப்பா,  நீங்கள் கொடுத்த அந்த கோதுமைகள்,  இப்போது 50 சாக்கு மூட்டை கோதுமைகளாக  மாறிவிட்டன.  அவற்றை பத்திரமாக உணவுக் களஞ்சியத்தில் வைத்து இருக்கின்றோம்.   அவை இப்போது, உங்களுக்குத்தான் என்றனர். 

 இதைக் கேட்டவுடன் அமர்சென்  மகிழ்ச்சி அடைந்து உடனே பணப் பெட்டியின் சாவிகளை நான்காவது  மகன், மருமகளிடம் கொடுத்தார்.  நீங்கள் இருவரும்தான்  என்னுடைய சொத்துக்கு உண்மையான வாரிசு என்றார்.

ஒரு சின்னஞ்சிறு ஆரம்பம்,  எந்த அளவு ஒரு பெரிய நிலையில் தன்மை மாற்றம் அடையச் செய்ய முடியும் என்பதற்கு இந்த ஐந்து தானிய விதைகள், ஒரு அடையாளம்.  அதே போல, சின்னஞ்சிறு பொறுப்பு,  என்பதை  கையில்  இருக்கும் ஆதாரத்தை வைத்து, மிகச் சிறந்த அளவுக்கு நிறைவேற்ற முடிகிறது என்றால், அது அற்புதமான விளைவுகளை எடுத்துக் கொண்டு வரும் என்பதுதான். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...