முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயணம்

ஒரு ஞாயிறு காலை, ஒரு பெரிய மனிதர் தனது பால் கனியில் அமர்ந்து, சூரிய ஒளியை ரசித்துக் கொண்டே, காஃபி குடித்துக் கொண்டிருந்தார்.  
 
அவரது கவனத்தை ஒரு சிறிய எறும்பு ஈர்த்தது. தன்னை விட எத்தனையோ மடங்கு  பெரியதாக இருக்கும் இலை ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்த பால்கனியின்  ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு,  சென்று கொண்டிருந்தது.    இந்த மனிதர்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதனை கவனித்துக் கொண்டு இருந்தார்.  அந்த எறும்பு தன்னுடைய பயணத்தில்,  நிறைய இன்னல்களை சந்திக்க வேண்டி இருந்தது. அது பல தடவைகள்  நின்றும்,  திரும்பியும்  தன்னுடைய இடத்தை அடைய, தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருந்தது.
 
அந்த பால் கனி தரையில் ஒரு இடத்தில் ஒரு சிறிய கீறல் இருந்தது.  அந்த இடம் வந்தவுடன்  எறும்பு சிறிது நேரம் நின்றது. அந்த சூழ்நிலையை  அதாவது அந்தக் கீறலைத் தாண்டுவது எப்படி என்பது பற்றி, ஆராய்ந்தது.

   பிறகு  அந்த இலையை  அந்த கீறலின் மேல் வைத்தது;  அந்த இலையின் மேல் ஏறி அடுத்த பக்கம் வந்தது.   பிறகு இலையை எடுத்துக் கொண்டு, மீண்டும் தொடர்ந்தது.
 
கடவுளின் படைப்பில்,  அந்த மிகச் சிறிய எறும்பின் புத்தி சாலித்தனம்  அந்த மனிதரின் கவனத்தை ஈர்த்தது.  
இந்த சம்பவம் அந்த மனிதரை பயபக்தியோடு,  படைப்பின் அதிசயத்தைப் பற்றி சிந்திக்க வைத்தது.
இது படைத்தவனின் திறமையைக் காட்டியது. 
உருவத்தில் மிகமிகச் சிறியதாக உள்ள  இந்த எறும்புக்கும், ஒரு மூளை இருக்கிறது.     சிந்தனை செய்ய; சூழ் நிலையை சமாளிக்க; காரணங்களைக் கண்டறிய; வெளிப்படுத்த;  அதற்கு மேலாக கஷ்டங்களை எதிர்கொண்டு முன்னேற அந்த மூளை வேலை செய்கிறது.
சிறிது நேரம் கழிந்ததும், அந்த எறும்பு தன் இருப்பிடத்தை நெருங்கியது.  தரையில் இருக்கும் ஒரு மிகச் சிறிய துவாரம் வழியாக, அது தன் இருப்பிடத்தின் உள்ளே நுழைய வேண்டும். அதன் இருப்பிடம் தரையில் அடியில் இருந்தது.  
 
  இந்த சின்னஞ் சிறிய துவாரத்தின் வழியாக  இந்த எறும்பால், எப்படி இந்த இலையைக் கொண்டு செல்ல முடியும்?  இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு தன் இருப்பிடம் வரை கொண்டு வந்ததை உள்ளே கொண்டு போக முடியவில்லையே என நினைத்தார்.

 அந்த சிறிய எறும்பு, நிறைய துன்பங்களை அனுபவித்து,  கஷ்டப்பட்டு,  தன்னுடைய திறமையைக் காட்டி, அறிவைப் பயன்படுத்தி அந்த இலையை எடுத்து வந்த பின்பும்,  கடைசியில்  தன் வீட்டிற்கு  வெறும் கையோடுதான் திரும்பியது.     
அந்த எறும்பு இவ்வளவு பெரிய இலையை, தன் வீட்டு சின்னஞ் சிறு துவாரம் வழியாக  கொண்டு செல்ல முடியுமா என்பதை முதலில் நினைத்துப் பார்க்கவில்லை.    தன்னுடைய சவால்கள் நிறைந்த பயணத்தின் முடிவு இப்படி ஆகும் என்றும்  அது எதிர்பார்க்கவில்லை. 

 அந்த இலை அதற்கு உதவாமல் ஒரு சுமையாகவே மாறி விட்டது.  அதைப் பற்றி  எறும்புக்கு  எவ்விதமான கவலையும் இல்லை.
சவால்களும், கஷ்டங்களும் நம் வாழ்க்கையில் வரும்போது,  இந்த சிறிய எறும்பு போல், நம்மால் முழு நம்பிக்கையோடும்,தைரியத்தோடும், அவற்றை எதிர்கொள்ள முடியுமா? என்று வியப்படைந்தார்.  
தன்னுடைய பயணத்தின் இறுதியில் அந்த எறும்பு இந்த இலையால் தனக்கு எந்த பயனும் இல்லை.  அது வெறும் சுமையாகத்தான் இருந்தது என்று  அதை விட்டுவிட்டு  வேகமாகச் சென்றது.  
நாம், நமது வாழ்க்கை எனும் பயணத்தில் அதிகமான ஆசைகளை சுமக்கிறோம்.  அதனை நிறைவேற்றவும் முயற்சி செய்கிறோம்.

 ஆசைகளை பூர்த்தி செய்வதில்தான் நம் மகிழ்ச்சி இருக்கிறது.    ஆசைகள் நிறைவேறாத போது நமக்கு ஏமாற்றம் வருகிறது. சில நேரங்களில்,  இந்த ஆசைகள் நமக்கு சுமையாகி, நமது பயணத்தின் முடிவை நாம் அடையும் வழியில், தடைகளாக இருக்கின்றன.  அந்த எறும்பைப் போல, இதனை நாம் எளிதாக விட்டுவிட்டு முன்னேறிச் செல்ல முடியுமா?
நமது வாழ்க்கையின் நோக்கம் என்ன?  
நமது வாழ்க்கையில் நாம் என்ன விரும்புகிறோம்?
இந்த எண்ணங்களில்,  அவர் ஆழ்ந்து மூழ்கி இருக்கும் போது, திடீரென்று வாசல் மணி ஒலித்தது.  காஃபி கப்புடன் அவர், உள்ளே சென்றார்.
வெளியில் இருந்து பார்க்கும் போது, எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறது. ஆனால் அவருள்ளே சுழல் காற்று போல,  புதிய எண்ணங்கள் எழுந்து கொண்டு இருந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது

*ப்ளீஸ்*  என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..  ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!  கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..  இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..*  *எப்ப பாரு என்ன டிவி?*  *புக் எடுத்து படி...* *வீட்டு வேலை செய்*, ...

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

ஆடி ஒன்று

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதம் 2024 :-* *வருகின்ற 17-07-2024 புதன்கிழமை* *ஆடி மாதம் பிறக்கின்றது* *ஆடி மாதம் என்றாலே...* *"உலகை ஆளும் ஆதிபராசக்தி அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு தெய்வீக மாதம்"* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷         *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘* *ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், மேலும் சிறப்பு பூஜைகள் ஊர் முழுவதும் களைகட்டும்....* *ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஆடி மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன...* 💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷 தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது... தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும்.  இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது. 🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதத...