முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோடீஸ்வர மனிதர்



ஜான். டி. ராக்ஃபெல்லர் என்பவர்தான் உலகத்திலேயே முதல் கோடீஸ்வர மனிதர்; மிகப்பெரிய பணக்காரரும் ஆவார். 

 அவரது 25 வது வயதிலேயே, அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொண்டார். 31 வது வயதில், உலகத்திலேயே மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனர் ஆனார். 38 வது வயதில் அமெரிக்காவின் 90% சுத்திகரிப்பின் நிறுவனர் ஆனார். தனது 50 வது வயதில் அந்த நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார்.    

 அவருடைய மரணம் வரைக்கும், ராக்ஃபெல்லர்தான் உலகிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரராக இருந்தார். அவர் இளைஞனாக இருக்கும் போது, அவர் எடுக்கும் முடிவு; அவரது மனப்பாங்கு; அவர் மற்றவர்களுடன் வைத்திருந்த உறவு முறை – இவைதான் அவருடைய தனித்துவமான சக்தியையும், செல்வத்தையும் பெறுவதற்கு அவரை வடிவமைத்தன.
 ஆனால் அவருடைய 53 வது வயதில், அவர் மிகவும் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டார். அவரது உடல் முழுவதும் தாங்க முடியாத வலியால் வேதனைக்கு உள்ளானார்; அவரது தலைமுடி முழுவதுமாக உதிர்ந்து விட்டது.

 உலகிலேயே ஒரே கோடீஸ்வரரான அவர், இந்த உலகில் எதை வேண்டுமானாலும் வாங்கும் சக்தி படைத்தவர் அவர்! முழுவதுமாக வேதனையால் துடித்துக் கொண்டு இருக்கும் அவரால், வெறும் காய்கறி சூப் மற்றும் பிஸ்கட் போன்ற மென்மையான பொருட்களைத் தவிர வேறு எதையும் அவரால் சாப்பிட்டு ஜீரணிக்க முடியவில்லை.   

 ராக்ஃபெல்லருடன் இருக்கும் அவர் உதவியாளர் அவரது நிலைமையைப் பற்றி, பின் வருமாறு எழுதினார்.
“அவரால் தூங்க முடியவில்லை; சிரிக்கவும் கூட முடியவில்லை; எதுவுமே செய்யமுடியாமல் ஒரு நடைபிணம் போல இருந்தார்.”

 ராக்ஃபெல்லருடைய திறமைவாய்ந்த சொந்த மருத்துவர்கள் அவர் இன்னும் ஒரு வருட காலம்தான் உயிரோடு வாழமுடியும் என முன்கணிப்பு செய்தனர்.

 வலியோடும், வேதனையோடும் அந்த ஒரு வருடம் மெதுவாகக் கடந்தது.

 அவருடைய முடிவு நெருங்கிக் கொண்டிருக்கும் தருவாயில், ஒரு நாள் காலை விழித்தெழுந்ததும் அவருக்கு ஒரு மெய்யுணர்தல் ஏற்பட்டது. அதாவது, தான் சேர்த்து வைத்திருக்கும் இந்த செல்வத்தை தன்னுடன் அடுத்த உலகத்துக்கு கொண்டு செல்ல முடியாது என உணர்ந்தார்.

 ஒட்டு மொத்த இந்த வணிக உலகத்தையே அடக்கி ஆண்ட இந்த மனிதனால், தன்னுடைய உடல் நலத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பதை உணர்ந்தார்.

 அவருக்கு இப்போது ஒரே ஒரு வழிதான் இருந்தது. அவர் தன்னுடைய சட்ட நிபுணர்கள், கணக்காளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் அழைத்தார். அவர்களிடம், தன்னுடைய சொத்துக்களை மருத்துவ மனைகள், ஆராய்ச்சி மையங்கள், தரும செயல்களுக்குக் கொடுக்கப் போவதாக அறிவித்தார்.

 இவ்வாறாக ராக்ஃபெல்லர் அவருடைய அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளையின் உதவியால் பென்சிலின் கண்டுபிடிக்கப் பட்டு, அது மலேரியா, காச நோய் மற்றும் டிப்தீரியா முதலிய நோய்களை குணப்படுத்தியது.
   

 ராக்ஃபெல்லரின் கதையில், மிகவும் வியக்கத்தக்க பகுதி இதுதான். அதாவது அவரது வருமானத்தில் ஒரு பகுதியை மற்றவர்களுக்காக திருப்பிக் கொடுத்த அந்த சமயத்திலேயே, அவரது உடலின் இயக்கங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் நல்ல முறையில் குணமடையத் தொடங்கினார்.

 அந்த நிலையில், 53 வயதில் இறந்திருக்க வேண்டிய அவர் 98 வயது வரை உயிர் வாழ்ந்தார்.
  

 நன்றியறிதலைக் கற்று அறிந்தவுடன் ராக்ஃபெல்லர் தனது செல்வத்தின் மிகப் பெரும் பகுதியைத் திருப்பிக் கொடுத்தார். இப்படி செய்தது அவரைக் குணப்படுத்த மட்டும் செய்யவில்லை; அவரை ஒரு பூரணத்துவமான மனிதனாகவும் மாற்றியது. குணப்படுத்துவதற்கான வழியை அவர் கண்டு பிடித்தார்; மேலும் முழுமையாக உணரவும் ஆரம்பித்தார்.

 விவேகானந்தருடனான அவரது சந்திப்பு, முதன் முதலாக ஒரு பெரிய அளவிலான நன்கொடையை பொதுமக்களுக்கு கொடுக்கும்படி செய்தது. படிப்படியாக அவர் ஒரு சிறந்த நன்கொடையாளர் ஆனார். ராக்ஃபெல்லரின் கொடைத்தன்மையானது ஏழை மக்களுக்கும்; கஷ்டத்தில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கும் ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று விவேகானந்தர் குறிப்பிட்டார்.

 தன்னுடைய மரணத்திற்கு முன்பாக ராக்ஃபெல்லர் தன் நாட்குறிப்பில் பின் வருமாறு எழுதினார்.
 “வேலை செய்வதற்கும், விளையாடுவதற்கும்  
நான் கற்பிக்கப் பட்டேன்.
என்னுடைய வாழ்க்கை, நீண்ட வாழ்க்கை, மகிழ்ச்சியான விடுமுறை; முழுவதும் பணி முழுவதும் விளையாட்டு.
இந்த வழியாக என் கவலைகளை முற்றிலுமாக விட்டு விட்டேன். ஒவ்வொரு நாளும் கடவுள் எனக்கு நல்லதையே செய்தார்.“

பிறருக்குக் கொடுக்கும் மகிழ்ச்சியில்தான் வாழ்க்கையின் மகிழ்ச்சி இருக்கிறது.

தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்.
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்  
ஆனந்த பூந்தோப்பு.
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை 
இது நான்கு மறை தீர்ப்பு – என்ற கவிஞரின் பாடல் வரிகளும் ராக்ஃபெல்லரின் கதையை நிரூபணம் ஆக்குகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...