முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கேள்வி

 *வாசிப்பதற்கு முன்பாக… அன்போடு உங்கள் கண்களை மென்மையாக மூடுங்கள்… உங்களுடைய இதயத் துடிப்பானது ஒழுக்கத்தை விட்டு வெளியேறினால், என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்யுங்கள்....தொடர்ந்து வாசியுங்கள்.*


**


 முன்னொரு காலத்தில் ஒரு குருகுலத்தில், ஆச்சார்யா சுமத், தமது சீடர்களோடு வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் அறிவுத் திறமை கொண்டு, மேலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கக் கூடியவராகவும் இருந்து வந்தார். 

 ஒரு நாள் பாடம், முடிந்த பிறகு, அவருடைய சீடர்களுள் ஒருவரான வர்ட்டெண்ட் என்பவர் குருவிடம் கேட்டார், “ஆச்சர்யா! அறிவுத் தன்மையின் கூர்மை என்பது கற்றுக் கொண்டு இருப்பதன் அடிப்படையைச் சார்ந்த ஒன்று. இது இப்படி இருந்த போதிலும், நீங்கள் ஏன், எப்போதும், நமது வாழ்க்கை முழுவதுமே கடுமையான ஒழுக்கத்தை திடமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று, பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்?“

 ஆச்சார்யா சுமத் பதிலளித்தார்,“ நேரம் வரும் போது, உங்களுக்குரிய பதில் கிடைக்கும்.”

 சில நாட்களுக்குப் பிறகு, ஆச்சார்யாவும், அவரது எல்லா சீடர்களும், நடை பயிற்சிக்காக வெளியே போனார்கள். நடந்து கொண்டு இருக்கும் போது, அவர்கள் அனைவரும், கங்கை ஆற்றின் கரையை அடைந்தார்கள். கங்கை ஆறு ஓடுவதையும், அதன் அலைகள் தெறிப்பதையும் பார்த்துக் கொண்டு இருந்த அனைவரும், அவற்றால் கவரப்பட்டார்கள்.  

 இதைப் பார்த்துக் கொண்டு இருந்த ஆச்சார்யா வார்டெண்டிடம் கேட்டார்,“ உனக்குத் தெரியுமா? எங்கே இருந்து இந்த கங்கை ஆறு தனது பயணத்தை ஆரம்பிக்கிறது; மேலும் எங்கே இது முடிவுறுகிறது?

 வார்டெண்ட் உடனே பதிலளித்தார்,“ ஆமாம் ஆச்சார்யா! கங்கா கோமுக்கில் இருந்து வருகிறது. மேலும் முடிவில் கங்கா சாகரில் ஐக்கியம் ஆகிறது.“

 பிறகு ஆச்சார்யா ஆற்றின் கரையை நோக்கி சுட்டிக் காட்டிக் கொண்டு கேட்டார்,” சரிதான். கங்கையின் இந்த இரண்டு கரைகளும் அங்கே இல்லாமல் இருந்தால், அதனால், இவ்வளவு நீண்ட தூரம் பயணித்திருக்க முடியுமா?”

 “ வார்ட்டண்ட் உடனே பதிலளித்தார்,“ இல்லை! நிச்சயமாக இயலாது. ஏனென்றால், ஆற்றின் இந்த கரைகள் இல்லா விட்டால், பிறகு அங்கே, கங்கையின் தண்ணீர் எல்லா இடமும் சிதறிப் போய் விடும்; மேலும் மக்களுக்கு, கங்கையில் இருந்து கிடைக்கும் நன்மைகள், கிடைக்காமலேயே போய் விடும். கங்கை ஆறு அதன், இரண்டு கரைகளுக்கும் உள்ளாக ஓடும் போது மட்டுமே, மக்கள், அதனிடம் பயன் பெற்றிட முடியும். “

 வாராண்டின் பதிலால் மகிழ்ச்சி அடைந்த ஆச்சார்யா கூறினார்,“நீ அன்று கேட்ட கேள்விக்கான பதில் இதுதான். மாணவப் பருவத்தில் அங்கே ஒழுக்கம் இல்லாமல் இருந்தால், பிறகு அவனது வாழ்க்கையின் சக்தி முழுவதும் சிதறடிக்கப் பட்டு விடும்; மேலும் அவனுடைய ஆற்றல் வளம் முழுவதும், பயன்படாமலேயே போய் விடும். அந்த மாதிரியான மனிதனின் உடல் மற்றும் மனம் சோர்வுற்று, உயிரற்ற ஒன்றாக மாறிடலாம்.

 ஒழுக்கம் இல்லாமல், வாழ்க்கையின் நோக்கத்தை சாதிப்பது முடியாத ஒன்றாகும்; ஏனென்றால், அந்த மாணவனுக்கு படிப்பது என்றால், அது ஒழுக்கத்தில் இருந்து மட்டுமே கிடைக்கும் ஒன்றாகும்.”

 உங்களுடைய அன்பை ஒழுங்கு செய்யுங்கள்; உங்கள் ஒழுங்கு அன்பாக வேண்டியது இல்லை.

 *(தாஜியின் ‘விஸ்டம் பிரிட்ஜ்’ ஆங்கில நூல்).*

*தாஜி மகராஜ்:*


 *“ஒழுக்கம் என்பது, அதாவது நமக்கு உள்ளே இருந்து வரும், ஏதோ ஒன்றாகும். இது வெளிப்புறத்தில் இருந்து திணிக்கப்படுதல் கூடாது.“*



*ஹார்ட்ஃபுல்னெஸ் தியானம்.*💌
*HFN கதைக் குழு. ஜோத்பூர்.*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...