முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவை நிம்மதி

*💐💐🙏🏻💐💐💐"இன்றைய சிந்தனை'..(18.04.2024)..*
...............................

*"’’*
..................................

செல்வம், அதிகாரம், பணம், புகழ், மதிப்பு ஆகியவை மன அமைதியை அழிப்பன. வாழ்வில் என்ன என்ன அடைய வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றி மனதை அலைக்கழிக்கும். 

தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவன், அதிகமான சொத்து, செல்வம் அடைந்தவன்,  ஆகியோருக்கு நிம்மதி கெட்டு விடும்.உறக்கம் வராது.

*மனநிம்மதி இருந்தால் தான் எந்த செயலையும் பதட்டம் இல்லாமல் ஒருவரால் எளிதில் செய்ய முடியும்..* தன் தகுதியை உணர்ந்து அதற்குரிய செயலில் ஈடுபட வேண்டும்.

மனதில் நிம்மதியும் தூக்கமும் இன்றித் தவித்த ஒருவன் அருகில் இருந்த ஆசிரமத்தில் பெரியவரை சந்தித்து எனக்கு எல்லாம் இருந்தும் மன நிம்மதி மட்டும் இல்லை என்றான். அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்றான்..

அதற்கு அந்தப் பெரியவர் *தேவையில்லா சுமைகளை சுமப்பதும், தெரியக் கூடாத ரகசியங்களைத் தெரிந்துக் கொள்வதாலும் நிம்மதி போய் விடுகின்றது.* 

நீ முதலில் ஆசிரமத்தில் சாப்பிடு என்றார். சாப்பிட்டப் பின் ஒரு படுக்கையைக் காண்பித்து படுக்கச் சொன்னார்
அவனிடம் ஒரு கதை சொன்னார் பெரியவர். 
"ரயில் புறப்படும் போது அவசரமாக தலையில் சுமையுடன் ஒருவன் ஓடி வந்து ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டான். ரயில் புறப்பட்டது. 

ஆனால் அவன் தன் தலையில் இருந்த சுமையை மட்டும் கீழே இறக்கி வைக்கவில்லை.  சுமையைத் தலையில் சுமந்து வந்த ஆளைப் பார்த்து அதைக் கீழே இறக்கி வைக்கச் சொன்னார் அவன் அருகில் இருந்தவர்..

அவன் வேண்டாம். ரயில் என்னை மட்டும் சுமந்தால் போதும். என் சுமையை நான் சுமந்து கொள்வேன் என்றான்.

இதைக் கேட்ட அங்கு இருந்தவர்கள் சிரித்து விட்டு,

'பைத்தியக்காரன், இரயிலை விட்டு இறங்கும் போது மூட்டையை தூக்கிக்கிட்டு இறங்கினால் போதாதா?
என்றான்'. 

அந்தப் பெரியவர் பணக்காரனைப் பார்த்து, உன்னைப் போல் அவனுக்கும் அது தெரியவில்லை என்றார் .என்ன சொல்கிறீர்கள் என்றவனிடம், 

"வாழ்க்கை என்பது ரயில் பயணம் போன்றது. பயணம் முழுவதும் சுமையை சுமந்து கொண்டு செல்பவர்கள் நிம்மதியாக வாழ முடியாது, 

தேவைப்படுபனவற்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். என்றார்..

*ஆம்.தோழர்களே.*

*உங்களுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்றால்,உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.* 

*அது அறிவாக இருந்தாலும் சரி, பணம், பொருளாக இருந்தாலும் சரி.* 

*அந்த மனித நேயம் நீங்கள் கொண்டால், மன நிம்மதி அடைவதோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை நீங்கள் வாழலாம்....✍🏼🌹*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...