முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விசிலை அடிக்காதீர்

நான் ஒரு பள்ளியில், விளையாட்டு மைதானத்தில் நடக்கும் ஒரு சாதாரண கால் பந்து போட்டியை கவனித்தேன்.
நான் உட்கார்ந்தவுடன், அங்கிருந்த பையன் ஒருவனிடம் ஸ்கோர் என்ன என்று கேட்டேன்.
ஒரு புன்சிரிப்போடு அவன் பதில் கூறினான், “அவர்கள் எங்களை விடவும், 3-0 என்ற கணக்கில் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் நான் சொன்னேன்,” உண்மையாகவா !”
“ நான் கூறினேன், உன்னைப் பார்த்தால் தைரியத்தை இழந்தவன் போல தெரியவில்லையே! அவனை, ஆறுதல் படுத்த முயற்சி செய்யும் விதமாக, நான் இதனை கூறினேன்.  
“தைரியத்தை இழக்க வேண்டுமா?” அந்த பையன் என்னைப் பார்த்து திகைப்பான பார்வை கொண்டு கேட்டான்.
“ நான் ஏன் தைரியத்தை இழக்க வேண்டும்; அந்த நடுவர் இன்னமும் கடைசி விசிலை அடிக்கவில்லையே?”
அந்த குழுவின் மீதும், மேலும் அங்கு பங்கேற்கும் மேனேஜர்களிடமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் நிச்சயமாக முறியடித்திடுவோம்.“
உண்மையாகவே, அந்த போட்டி ஒரு முடிவுக்கு வந்தது. 5-4 என்ற கணக்கில் ஸ்கோர்; அந்த பையனுடைய குழு வெற்றி பெற்றது.
அவன் போகும் போது, அழகான புன்சிரிப்புடன் சென்றான்; அவன் என்னைப் பார்த்து, கைகளை மென்மையாக அசைத்தான். நான் அகலமாகத் திறந்த வாயோடு, ஆச்சரியம் அடைந்தேன். என்னவிதமான நம்பிக்கை; என்னவிதமான அழகு மிளிரும் நம்பிக்கை!
அன்று இரவு நான் வீட்டிற்கு திரும்பிய பிறகும் கூட, அவனது கேள்வி, என்னிடம் திரும்பதிரும்ப வந்து கொண்டு இருந்தது.“நான் ஏன் தைரியம் இழக்க வேண்டும்? அந்த நடுவர் கடைசி விசிலை அடிக்கவில்லை எனும் போது?“
வாழ்க்கை என்பதும் ஒரு விளையாட்டு தான். இறுதி வரைக்கும் இதனோடு போராட்டம் செய்தே ஆக வேண்டும்.
ஏன் தைரியம் இழக்க வேண்டும், இன்னும், அங்கே வாழ்க்கை இருக்கின்ற ஒரு நிலையில்?
ஏன் தைரியம் இழக்க வேண்டும், அங்கே இன்னமும் உங்களது இறுதி விசில் அடிக்கவில்லை என்னும் போது?
அதில், உண்மை என்னவென்றால், பெரும்பாலான மக்கள், தாமாகவே, அந்த கடைசி விசிலை அடித்து விடுகின்றார்கள் என்பதுதான்.
ஆனால், அங்கே வாழ்க்கை என்ற ஒன்று இருக்கின்றது என்னும் வரைக்கும், முடியாதது என்று எந்த ஒன்றுமே இல்லை; மேலும் உங்களுக்கு எந்த ஒரு பொழுதுமே, அது தாமதமானது கிடையாது.
பாதி நேரம் என்றால், அது, முழுமையான நேரம் அல்ல.
நீங்களாகவே, அந்த விசிலை அடிக்காதீர்கள்!
அன்பில், அங்கே எதிர்பார்ப்புக்கு இடமே இல்லை; ஆனால் நன்றி மட்டுமே இருக்கிறது. அதனால் தான் அன்பு மனித இனத்தின் பெருந்தன்மையின் உச்சம் என்றாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது

*ப்ளீஸ்*  என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..  ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!  கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..  இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..*  *எப்ப பாரு என்ன டிவி?*  *புக் எடுத்து படி...* *வீட்டு வேலை செய்*, ...

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

ஆடி ஒன்று

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதம் 2024 :-* *வருகின்ற 17-07-2024 புதன்கிழமை* *ஆடி மாதம் பிறக்கின்றது* *ஆடி மாதம் என்றாலே...* *"உலகை ஆளும் ஆதிபராசக்தி அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு தெய்வீக மாதம்"* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷         *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘* *ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், மேலும் சிறப்பு பூஜைகள் ஊர் முழுவதும் களைகட்டும்....* *ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஆடி மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன...* 💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷 தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது... தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும்.  இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது. 🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதத...