முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைதியின் ஆற்றல் - புத்தரும், தத்துவ ஞானியும்

ஒரு முறை ஒரு சிறந்த தத்துவ ஞானி புத்தரைப் பார்ப்பதற்காக வந்தார். புத்தரிடம் கேட்பதற்காக அவர் நிறைய கேள்விகளை தன் வசம் வைத்திருந்தார். அவர், புத்தரிடம் வந்து கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.    

 புத்தர் அவரைக் கவனமாகப் பார்த்துவிட்டு,“ உண்மையாகவே உங்களுக்குப் பதில் தேவையா?” என்று கேட்டார். அப்படி என்றால் அதற்குரிய விலையை உங்களால் கொடுக்க முடியுமா ? 

  அந்த தத்துவஞானி,“ என் வாழ் நாள் முழுவதுமாக நான் விடைகளைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். நிறைய விடைகளைப் பெற்றேன்; ஆனால் ஒவ்வொரு விடைக்கும் பின்னால், புதிய கேள்விகள் எழுந்தன. நீங்கள் என்ன விலை கேட்கின்றீர்கள்? நான் முழு விலையையும் தருவதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். இந்த கேள்விகளுக்கான விடைகளுக்காக நான் ஏக்கத்தோடு இருக்கிறேன். இந்த கேள்விகளுக்கான பதில்களோடுதான் நான் இந்த உலகை விட்டு செல்ல வேண்டும் என ஆவல் கொண்டுள்ளேன்” என்று பதில் கூறினார்.    

 புத்தர் கூறினார், “ மிக நல்லது. நிறைய மக்கள் விடைகளைத் தெரிய ஆசைப் படுகிறார்கள். ஆனால், அதற்குரிய விலையைக் கொடுக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால்தான், நான் உங்களிடம் இப்படிக் கேட்டேன்” .

 ஒரு வருடம் நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். இதுதான் விலை. என் அருகே அமைதியாக ஒரு வருடம் அமர வேண்டும். ஒரு வருடம் சென்ற பிறகு, நானே உங்களிடம் கேள்விகளை சொல்லும் படி கேட்பேன். பிறகு உங்களுக்கு ஏதாவது கேள்வி என்னிடம் கேட்க விரும்பினால், நான் எல்லாவற்றிற்கும் விடை அளிப்பேன் என்று புத்தர் உறுதி மொழி கொடுத்தார். உங்களுடைய அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து விடுகிறேன் என்றார்.

 ஆனால், ஒரு வருடம் முழுவதுமாக, அமைதியாக இருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு உங்களுடைய கேள்விகளை என்னிடம் கொண்டு வரக்கூடாது.

 அந்த தத்துவ ஞானி யோசித்துக் கொண்டிருந்தார். சரி என்று சொல்லவா? அல்லது வேண்டாமா! ஒரு வருடம் என்பது மிகவும் நீண்ட காலம். இவர் உண்மையில் ஒரு வருடத்திற்குப் பிறகு கேள்விகளுக்கு பதில் தருவாரா? என தனக்குள் நினைத்துக் கொண்டார்.

அவர் புத்தரிடம்,“ ஒரு வருடத்திற்குப் பிறகு என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் விடை தருவீர்கள் என்பதற்கு முழு உறுதி மொழி கொடுக்க முடியுமா ?“ என்று கேட்டார். 

“ நான் உங்களுக்கு முழுவதுமாக உறுதி மொழி தருகிறேன் “ என்று புத்தர் பதில் கூறினார். நீங்கள் கேட்பீர்கள் என்றால் நான் பதில் தருவேன், ஆனால் நீங்கள் கேட்கவில்லை என்றால், நான் யாருக்கு விடை கூற முடியும். 

அந்த நேரத்தில், அருகில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்த சீடர் ஒருவர் சிரிக்கத் தொடங்கினார்.

அந்த தத்துவஞானி புத்தரிடம், “ஏன் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் ?” என்று கேட்டார். புத்தர்,“நீங்கள் அங்கு சென்று அவரிடம் கேளுங்கள்.” என்று பதில் கூறினார்.

தத்துவஞானி அந்த சீடரிடம் சென்று, ஏன் சிரிக்கிறீர்கள், என்று கேட்டார்.

அந்த சீடர்,“ உங்களுக்கு ஏதாவது கேட்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால், இப்போதே கேட்டு விடுங்கள். அவர் இதையேதான் எனக்கும் செய்தார். ஆனால், உண்மையைத்தான் சொல்கிறார் என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். ஒரு வருடத்திற்குப் பிறகு நீங்கள் என்ன கேட்டாலும், அவர் பதில் சொல்வார். ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகு யார் கேட்கப் போகிறார்கள் ?” என்று பதில் கூறினார்.

நான் ஒரு வருடமாக இங்கு மவுனமாக உட்கார்ந்து இருக்கிறேன். இப்போது புத்தர் என்னிடம் “கேள்வி கேளுங்கள், சகோதரரே” என்று என்னை உத்வேகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒரு வருட காலமாக அமைதியாக உட்கார்ந்த பிறகு, எதுவுமே கேட்பதற்கு இப்போது இல்லை; எல்லா விடைகளும் பெறப்பட்டு விட்டன. உங்களுக்கு கேட்கவேண்டும் என்ற ஆசை இருந்தால், இப்போதே கேளுங்கள்; அப்படி இல்லை எனில், ஒரு வருடத்திற்குப் பிறகு, எதுவுமே கேட்பதற்கு இருக்காது.

பதில்கள் தெரிய வேண்டும் என விரும்பியதால், அந்த தத்துவஞானி புத்தருடன் அங்கே தங்கினார். தினமும் அமைதியாக அமர்ந்து கொள்வார். காலத்தைப் பற்றி அவர் மறந்து விட்டார்; ஏனென்றால் அவரது எண்ணங்களின் வேகம் குறைந்து விட்டன; காலம் பற்றிய விழிப்புணர்வை அவர் இழந்து விட்டார். 

ஆனால், புத்தர் காலம் பற்றி முழு விழிப்புணர்வோடு இருந்தார். ஒரு வருடம் முடிந்தது. புத்தர், அந்த தத்துவ ஞானியிடம் சென்று, “இப்போது உங்களுக்கு என்ன தேவையோ, அதைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உறுதி மொழி கொடுத்த படி ஒவ்வொரு கேள்விக்கும் விடை தருகிறேன். உங்களிடம் கேட்பதற்கு ஏதாவது இருக்கிறதா ?’ என்று கேட்டார்.
அந்த தத்துவஞானி சிரித்துக் கொண்டே கூறினார்,“அந்த சீடர் கூறியது மிகவும் சரி. ஒரு வருடமாக நான் இங்கு அமர்ந்து கொண்டிருந்த பிறகு, எனக்கு கேட்பதற்கென்று இப்போது எதுவுமே இல்லை. உங்களுடைய அருளாசியின் மூலமாக, அனைத்து பதில்களும் என்னிடம் வந்து விட்டன “.
பதில்கள் கொடுக்கப் படவில்லை, ஆனால் பெறப்பட்டன.
பதில்கள் வெளியே இருந்து வரவில்லை, ஆனால் அவை உள் இருந்து வந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது

*ப்ளீஸ்*  என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..  ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!  கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..  இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..*  *எப்ப பாரு என்ன டிவி?*  *புக் எடுத்து படி...* *வீட்டு வேலை செய்*, ...

பெண் குழந்தைகளுக்கான அழகான 68 முருகன் பெயர்கள்

1. சஷ்டிகா - Sastika 2. விசாகா - Visaka 3. க்ரித்திகா - Krithika 4. சக்திதாரா - Sakthithara 5. கார்த்திகா - Karthika 6. மயூரி - Mayuri 7. எழில்வெண்பா - Ezhilvenba 8. மயிலினி - Mayilini 9. விசாலினி - Visalini 10. வேலவர்ஷினி - Velavarshini 11. நித்ரா - Nithra 12. அகநேத்ரா - Aganethra 13. அகமித்ரா - Agamithra 14. சஷ்டிப்ரதா - Sastiprada 15. சஷ்டிப்ரகதா - Sastipragatha 16. ப்ரணவி- Pranavi 17. மகிழ்வதனா - Magizhvadana 18. எழில்நேத்ரா - Ezhilnethra 19. யுகஸ்ரீ - Yugashree 20. பிரபவா - Prabhava 21. ஆத்மபுவிகா - Atmabhuvika 22. குகஸ்ரீ - Guhasree 23. மேகதர்ஷினி - Megadharshini 24. இளமயிலி - Ilamayili 25. வினுமித்ரா - Vinumithra 26. ஜயத்சேனா - Jeyatsena 27. வினுப்ரியா- Vinupriya 28. முகில்வெண்பா - Mukilvenba 29. எழில்மித்ரா - Ezhilmithra 30. யுகநேத்ரா - Yuganethra 31. கந்தஸ்ரீ - Kandashri 32. ஸ்கந்தவி - Skandavee 33. தணிகைவேதா - Thanigaiveda 34. தமாயா - Thamaya 35. நேத்ரா - Nethra 36. க்ரித்திக்ஷா - Krithiksha 37. விசாலினி - Vishalini 38. யுகப்ரதா - Yugapradha 39. வினுநேத்ரா - Vinun...