முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணாடி - உண்மையான அழகு

ஒரு காலத்தில் ஒரு பயணி, பயணம் செய்த களைப்பால் ஓய்வெடுக்க விரும்பினார். சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்கு தகுந்த ஒரு இடத்தை பார்த்துத் தேடிக் கொண்டு இருந்தார்.

 திடீரென்று அவர் கண்களுக்கு ஒரு ‘ஆஷ்ரமம்’ தென்பட்டது. அது மிகச் சிறந்த தத்துவ ஞானியான சாக்ரடீஸின் ஆஷ்ரமம் ஆகும். மிகவும் நல்லது. நான் இங்கு சில நாட்கள் தங்குவதற்கும், உள்ளார்ந்த சிந்தனைகளையும், பேருரைகளையும் கவனித்துக் கேட்பதற்கும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார்.

  இந்த எண்ணத்தோடு அவர் சாக்ரடீஸை சென்று பார்த்தார். அவர் அங்கு தங்குவதற்கு சாக்ரடீஸ் உடனே சம்மதித்தார். அவர் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அவரது சொந்த அறைக்கு எதிர் பக்கத்தில் இருந்த அறையை அந்த பயணி தங்குவதற்குக் கொடுத்தார்.    

  ஒரு நாள் அந்தப் பயணி அவர் அறையில் இருந்து வெளியே வரும்போது, எதிர் அறையில் சாக்ரடீஸ் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அதற்கு மிகுந்த கவனமும் கொடுக்கவில்லை.அதைப் பார்த்ததற்காக எந்த வித முக்கியத்துவமும் கொடுக்காமல் தன் வேலையை தொடர்ந்தார்.

   ஆனால், இதே நிகழ்ச்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை நடந்த போது, அவரால் அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மேலும் அவர், சாக்ரடீஸ் அப்படி ஒன்றும் அழகானவர் அல்ல. ஏன் இவர் தினமும் தன்னை வெகு நேரமாக கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்? என்று நினைக்கத் தொடங்கினார். 

  இந்த எண்ணப்புயல் அவர் மீது தாக்குதலை ஏற்படுத்தியது. இறுதியாக அவரை அவரால் நிறுத்த முடியாமல், சாக்ரடீஸின் அறைக்கு நேராகச் சென்றார், “ தயவு செய்து நீங்கள் ஏதும் மனதில் தவறாக எடுக்காமல் இருந்தால், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் அந்த கண்ணாடி முன் வெகு நேரம் ஏன் நிற்கின்றீர்கள்? இருந்த போதிலும் நீங்கள் .. … என்று தொடராமல் நிறுத்தினார். 

  சாக்ரடீஸ் அவரது கேள்வியைப் புரிந்து கொண்டு தொடர்ந்தார், “ஆமாம். நான் அழகில்லாதவன்தான்; பார்ப்பதற்கும் நான் நன்றாக இல்லை. என்னுடைய அழகின்மையை விழிப்புணர்வோடு இருப்பதற்காகத்தான், நான் தினமும் கண்ணாடி முன்னே நின்று வெகு நேரம் பார்க்கிறேன்” என்றார்.

   பயணி – ஏன் உங்கள் அழகின்மையைப் பற்றி தினமும் ஞாபகப் படுத்திட வேண்டும்? அது உங்களுக்கு, ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும் அல்லவா?     

  சாக்ரடீஸ் – இல்லை! நான் எதிர் மறையாக எண்ணவில்லை. என்னுடைய அழகின்மை என்னை விழிப்புணர்விற்கு ஆளாக்கும்.

  பயணி – விழிப்புணர்வா? அது எப்படி?

   சாக்ரடீஸ் – இது என்னை விழிப்புணர்விற்கு இட்டுச் செல்கிறது. என்னுடைய புனிதமான மற்றும் நல்ல செய்கைகள் மூலம் என் அழகின்மையை நான் ஈடு செய்கிறேன்.     

  உயர்ந்த எண்ணங்களும், நல்ல செய்கைகளும் ஒரு மனிதனின் உள் அழகை மேம்படுத்துகின்றன. உள்முக அழகு விழிப்படைந்தால், வெளிப்புற அழகின்மையால் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. 

  மிகச் சிறந்த போதகரான சாக்ரடீஸின் இந்த எண்ணங்களைக் கேட்டு, அந்த பயணி அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து அவரது பாதங்களில் குனிந்து, விழுந்து வணங்கினார். பிறகு எழுந்து அறையை விட்டு வெளியேற புறப்படும் போது சாக்ரடீஸின் குரல் அவரைத் தடுத்து நிறுத்தியது. “மகனே கவனி, நீயும் கூட கண்ணாடியைப் பார்க்க வேண்டும்” என்றார்.    

  அந்தப் பயணி மிகவும் மென்மையான குரலில் ‘ஆம்’ என்றார்.

   சாக்ரடீஸ், “ஏன் என்று தெரிந்திட நீ விரும்பவில்லையா? ஏனென்றால் நீ மிகவும் அழகாக இருக்கிறாய்; நன்றாகவும் இருக்கிறாய். அந்தக் கண்ணாடி உனக்கும் கூட பாடம் கற்றுத் தரும்!” என்றார்.    

  நீ தோற்றத்தில் அழகாக இருப்பதால், அழகான செயல்களை செய்யும்படி, அது உனக்கு ஞாபகப்படுத்தும்.

  உண்மையான அழகு வெளியேயும் இருக்கிறது, உள்ளேயும் இருக்கிறது. உள்முகமான அழகு இல்லை எனில், வெளியே இருக்கும் அழகு அர்த்தம் இல்லாதது மற்றும் நிறைவு அடையாதது என்பதாகும்.     

   வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் இருக்கின்ற போதிலும், நாம் விரும்பினால், நாம் நம்மையே உத்வேகப்படுத்திட இயலும்; உண்மையில் வேண்டியது என்னவெனில், நேர்மறையான எண்ணங்களும், உணர்வுகளும்தான்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது

*ப்ளீஸ்*  என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..  ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!  கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..  இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..*  *எப்ப பாரு என்ன டிவி?*  *புக் எடுத்து படி...* *வீட்டு வேலை செய்*, ...

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

ஆடி ஒன்று

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதம் 2024 :-* *வருகின்ற 17-07-2024 புதன்கிழமை* *ஆடி மாதம் பிறக்கின்றது* *ஆடி மாதம் என்றாலே...* *"உலகை ஆளும் ஆதிபராசக்தி அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு தெய்வீக மாதம்"* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷         *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘* *ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், மேலும் சிறப்பு பூஜைகள் ஊர் முழுவதும் களைகட்டும்....* *ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஆடி மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன...* 💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷 தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது... தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும்.  இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது. 🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதத...