முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளின் மீதுள்ள நம்பிக்கை

ஒரு மனிதன் தன் மகனுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தான். அவர்கள் இருவரும் சமுத்திரத்தில், ஒரு படகில் பயணம் செய்து கொண்டு இருந்தனர். திடீரென்று மிகப்பெரிய புயல் ஒன்று வந்தது. அந்த மனிதர் ஒரு போர் வீரர். அவர் அப்படியே அமைதியாக இருந்தார். ஆனால் அவரது மகனோ, மிகவும் பயந்து போய்விட்டார். கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்து விட்டவர் போல தோற்றமளித்தார்.அவர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்த படகு மிகவும் சிறியது; மேலும் அந்தப் புயல் உண்மையிலேயே வலிமையுடையதாக இருந்தது. எந்தக் கணத்திலும் அவர்கள் புயலில் மூழ்கி விடுவதற்கான வாய்ப்பில் இருந்தார்கள்.   

  .அதிகமான அளவில் மகன் பயந்து கொண்டு இருக்கும் போது, அவனது அப்பா அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். எதுவுமே நடக்காதது போல, முழுவதுமாக அமைதியோடு சலனமற்று இருந்தார்.   


   அந்த நடுங்கிக் பயத்தால் நடுங்கிக் கொண்டே அப்பாவைப் பார்த்து, 
“நீங்கள் பயப்படவில்லையா ? நமது வாழ்க்கையின் கடைசி நேரம் இதுவாகத்தான் இருக்கும்.   

    நாம் இருவரும் கரையை சென்று அடைவோம் என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு அதிசயம் இந்தக் கணத்தில் நடந்து நம்மைக் காப்பாற்றினால் மட்டுமே உண்டு. இல்லையெனில் நாம் மரணமடைவது உறுதி.  

   அவன் தொடரும் போது, ஒரு அலை வேகமாக வந்து படகைத் தாக்கியது. அவன் பயத்தில் கத்தினான். “உனக்கு பயமே இல்லையா ?”

  தன்னுடைய மகனை கவனித்துக் கொண்டிருந்த பிறகு, அப்பா சிரித்தார். அவருடைய வாளை உறையில் இருந்து வெளியே எடுத்தார்.

   அவனுடைய அப்பா செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, இப்போது மகனுக்கு மேலும் வியப்பாக இருந்தது.   


   அப்பா, மகனின் கழுத்துக்கு மிக நெருக்கமாக வாளைக் கொண்டு சென்றார். மிக நெருக்கமாக, வாளுக்கும் கழுத்துக்கும் இடையே மயிரிழை அளவு தூரம்தான் இருந்தது. அந்த வாள் கிட்டத்தட்ட அவன் கழுத்தை தொட்டுக் கொண்டு இருந்தது.    

  இப்போது, அப்பா மகனைப் பார்த்து, “நீ பயப்படுகிறாயா ?” என்று கேட்டார். 

  மகன் சிரித்துக் கொண்டே, “நான் ஏன் பயப்பட வேண்டும்? நீங்கள் என்னுடைய அப்பா. வாள் உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் ஒரு போதும் என்னை துன்புறுத்த மாட்டீர்கள். மேலும், நீங்கள் என்னை நேசிக்கின்றீர்கள்” என்பதுவும் எனக்குத் தெரியும்.  

   அப்பா வாளை மீண்டும் உறையில் போட்டு விட்டு கூறினார், “இதுதான் என்னுடைய பதில், என் அன்பு மகனே! எனக்குத் தெரியும் கடவுள் என்னை நேசிக்கிறார்; இந்த புயலும் அவர் கையில்தான் இருக்கிறது.    

  ஆகவே எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும். நாம் உயிரோடு இருப்பதுவும் நல்லதே, அல்லது இல்லாமல் இருப்பது என்றால் அதுவும் நல்லதே. ஏனென்றால் அனைத்துமே கடவுளின் கைகளில்தான் உள்ளது. அவர் தவறானதை எப்போதுமே செய்ய மாட்டார்.   

  நம்பிக்கையை உருவாக்கிக் கொள். இதுவே வாழ்க்கை முழுவதும் உன்னை தன்மை மாற்றம் அடைய செய்ய தகுதியானது ஆகும். நம்பிக்கை என்றால் முழுமையாக வேண்டும். காரணம் என்னவெனில், அதற்குக் குறைவான எந்த ஒன்றும் பயன் இல்லாதது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது

*ப்ளீஸ்*  என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..  ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!  கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..  இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..*  *எப்ப பாரு என்ன டிவி?*  *புக் எடுத்து படி...* *வீட்டு வேலை செய்*, ...

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

ஆடி ஒன்று

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதம் 2024 :-* *வருகின்ற 17-07-2024 புதன்கிழமை* *ஆடி மாதம் பிறக்கின்றது* *ஆடி மாதம் என்றாலே...* *"உலகை ஆளும் ஆதிபராசக்தி அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு தெய்வீக மாதம்"* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷         *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘* *ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், மேலும் சிறப்பு பூஜைகள் ஊர் முழுவதும் களைகட்டும்....* *ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஆடி மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன...* 💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷 தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது... தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும்.  இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது. 🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதத...