ஒரு மனிதன் தன் மகனுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தான். அவர்கள் இருவரும் சமுத்திரத்தில், ஒரு படகில் பயணம் செய்து கொண்டு இருந்தனர். திடீரென்று மிகப்பெரிய புயல் ஒன்று வந்தது. அந்த மனிதர் ஒரு போர் வீரர். அவர் அப்படியே அமைதியாக இருந்தார். ஆனால் அவரது மகனோ, மிகவும் பயந்து போய்விட்டார். கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்து விட்டவர் போல தோற்றமளித்தார்.அவர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்த படகு மிகவும் சிறியது; மேலும் அந்தப் புயல் உண்மையிலேயே வலிமையுடையதாக இருந்தது. எந்தக் கணத்திலும் அவர்கள் புயலில் மூழ்கி விடுவதற்கான வாய்ப்பில் இருந்தார்கள்.
.அதிகமான அளவில் மகன் பயந்து கொண்டு இருக்கும் போது, அவனது அப்பா அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். எதுவுமே நடக்காதது போல, முழுவதுமாக அமைதியோடு சலனமற்று இருந்தார்.
அந்த நடுங்கிக் பயத்தால் நடுங்கிக் கொண்டே அப்பாவைப் பார்த்து,
“நீங்கள் பயப்படவில்லையா ? நமது வாழ்க்கையின் கடைசி நேரம் இதுவாகத்தான் இருக்கும்.
நாம் இருவரும் கரையை சென்று அடைவோம் என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு அதிசயம் இந்தக் கணத்தில் நடந்து நம்மைக் காப்பாற்றினால் மட்டுமே உண்டு. இல்லையெனில் நாம் மரணமடைவது உறுதி.
அவன் தொடரும் போது, ஒரு அலை வேகமாக வந்து படகைத் தாக்கியது. அவன் பயத்தில் கத்தினான். “உனக்கு பயமே இல்லையா ?”
தன்னுடைய மகனை கவனித்துக் கொண்டிருந்த பிறகு, அப்பா சிரித்தார். அவருடைய வாளை உறையில் இருந்து வெளியே எடுத்தார்.
அவனுடைய அப்பா செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, இப்போது மகனுக்கு மேலும் வியப்பாக இருந்தது.
அப்பா, மகனின் கழுத்துக்கு மிக நெருக்கமாக வாளைக் கொண்டு சென்றார். மிக நெருக்கமாக, வாளுக்கும் கழுத்துக்கும் இடையே மயிரிழை அளவு தூரம்தான் இருந்தது. அந்த வாள் கிட்டத்தட்ட அவன் கழுத்தை தொட்டுக் கொண்டு இருந்தது.
இப்போது, அப்பா மகனைப் பார்த்து, “நீ பயப்படுகிறாயா ?” என்று கேட்டார்.
மகன் சிரித்துக் கொண்டே, “நான் ஏன் பயப்பட வேண்டும்? நீங்கள் என்னுடைய அப்பா. வாள் உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் ஒரு போதும் என்னை துன்புறுத்த மாட்டீர்கள். மேலும், நீங்கள் என்னை நேசிக்கின்றீர்கள்” என்பதுவும் எனக்குத் தெரியும்.
அப்பா வாளை மீண்டும் உறையில் போட்டு விட்டு கூறினார், “இதுதான் என்னுடைய பதில், என் அன்பு மகனே! எனக்குத் தெரியும் கடவுள் என்னை நேசிக்கிறார்; இந்த புயலும் அவர் கையில்தான் இருக்கிறது.
ஆகவே எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும். நாம் உயிரோடு இருப்பதுவும் நல்லதே, அல்லது இல்லாமல் இருப்பது என்றால் அதுவும் நல்லதே. ஏனென்றால் அனைத்துமே கடவுளின் கைகளில்தான் உள்ளது. அவர் தவறானதை எப்போதுமே செய்ய மாட்டார்.
நம்பிக்கையை உருவாக்கிக் கொள். இதுவே வாழ்க்கை முழுவதும் உன்னை தன்மை மாற்றம் அடைய செய்ய தகுதியானது ஆகும். நம்பிக்கை என்றால் முழுமையாக வேண்டும். காரணம் என்னவெனில், அதற்குக் குறைவான எந்த ஒன்றும் பயன் இல்லாதது.
கருத்துகள்
கருத்துரையிடுக