முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்பிக்கை மற்றும் பற்றுறுதி


 நம்பிக்கை மற்றும் பற்றுறுதி இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம்: 


  இந்த உலகமே பற்றுறுதியின் அடிப்படையில்தான் இருக்கிறது.
இந்தப் பழமொழியை நாம் அனைவருமே கேட்டு இருப்போம், ஆனால் நாம் இந்த சிறிய கதையின் மூலமாக, பற்றுறுதியின் உண்மையான மற்றும் பொருத்தமான எடுத்துக் காட்டைப் புரிய முயற்சி செய்கிறோம்.    

  ஒரு முறை, தெருக் கூத்து ஒன்றில், இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடங்களின் இடையில் கட்டப்பட்டு இருக்கும் ஒரு கயிற்றின் மேல், கையில் ஒரு நீளமான ஒரு மூங்கில் கம்புடன், ஒரு கழைக் கூத்தாடி நடந்து கொண்டு இருந்தார். அவருடைய மகனையும் கூட தோள்களில் சுமந்து கொண்டிருந்தார். நூறு மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ச்சியோடு இதைக் கவனித்துக் கொண்டு இருந்தனர். தன்னுடைய மற்றும் தன் மகன் உயிரையும் பணயம் வைத்து கடுமையான காற்றோடு போராடிக் கொண்டு, நிலையான அடிகளை எடுத்து வைத்து, அந்தக் கழைக் கூத்தாடி அந்த தூரத்தைக் கடந்து கொண்டிருந்தார்.

  அவர் கடந்து முடிந்ததும், அந்தக் கூட்டம் மகிழ்ச்சியாலும், ஆச்சரியத்தாலும் குதித்தது. அங்கு நிறைய கை தட்டல்களும், விசில் சத்தங்களும் இருந்தன. மக்கள் கழைக் கூத்தாடியைப் படம் எடுத்துக் கொண்டனர். அவரோடு சேர்ந்து ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். அவரது கைகளை குலுக்கினர். அந்தக் கழைக் கூத்தாடி மைக் முன் சென்று, நின்று கூட்டத்தைப் பார்த்து, “நான் இதை திரும்பவும் செய்வேன் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.

  அந்தக் கூட்டத்தினர், சத்தமாகக் கூறினர், “ ஆமாம், ஆமாம்” உங்களால் முடியும்.   

  அவர் திரும்பவும் கேட்டார், “நீங்கள் உண்மையாக இதை நம்புகிறீர்களா?" 

  அந்தக் கூட்டத்தினர், முழு உற்சாகத்தோடு சத்தமிட்டனர், “எங்களுக்கு, முழு நம்பிக்கை இருக்கிறது”. நீங்கள் திரும்பவும் வெற்றிகரமாக செய்வீர்கள் என்பதற்கு நாங்கள் ‘பெட்’ கட்டக் கூட தயாராக இருக்கிறோம் என்று கூட்டத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.    

  அந்தக் கழைக் கூத்தாடி கூறினார், “உங்களுக்கு முழு பற்றுறுதி இருக்கிறது, அப்படித்தானே? “ அந்தக் கூட்டம் ‘ஆமாம்’ என்று கத்தியது. பிறகு அந்த கழைக் கூத்தாடி அமைதியாகக் கூறினார், “ ஓ.கே. தயவு செய்து யாராவது ஒருவர் உங்கள் குழந்தையை என்னிடம் தாருங்கள். நான் அந்தக் குழந்தையை என் தோள்களில் சுமந்தவாறே கயிற்றில் நடக்கப் போகிறேன்.”

  கழைக் கூத்தாடி இந்த வார்த்தைகளைக் கூறிய அந்த நேரத்திலேயே, உடனடியாக அங்கு முழுமையான அமைதி நிலவியது. அந்தக் கழைக் கூத்தாடி கூறினார், பயப்பட்டு விட்டீர்களா? ஒரு கணத்திற்கு முன்னால், நீங்கள் அனைவரும் நான் இதை செய்து முடிப்பேன் என்ற பற்றுறுதியோடு இருந்தீர்கள். ஆனால், இப்போது என்ன நடந்து விட்டது? உண்மையிலேயே, நீங்கள் என்னை நம்புகிறீர்கள். ஆனால், உங்களுக்கு முழுமையான பற்றுறுதி இல்லை. இந்த இரண்டுக்கும் இடையே வேறு பாடு உண்டு. 

  இந்தக் கதையின் மூலமாக, நாம் நம்பிக்கைக்கும், பற்றுறுதிக்கும் இடையே உள்ள சூட்சுமமான வேறுபாட்டை புரிந்து கொள்ள முடிகிறது. 

  மக்கள் அதிகமானோர் வலியுறுத்திக் கூறுகிறார்கள். என்னவென்றால், அவர்களுக்கு அவர்களது குரு அல்லது வழிகாட்டியின் மேல் முழுமையான பற்றுறுதி இருக்கிறது. ஆனால், இது உண்மையான, முழுமையான பற்றுறுதியா? நாம், உண்மையிலேயே நமது குரு அல்லது வழிகாட்டியை தொடர்ந்து கொண்டு வருகிறோம் என்றால், பிறகு ஏன் நமக்கு அதிக அளவில் கோபம் மற்றும் டென்ஷன் வருகிறது?    

  ஒரு சிறிய குழந்தை தன் அம்மா அல்லது அப்பாவுடன் இருக்கும் போது, அவனுக்கு அவர்கள் மீது முழு பற்றுறுதி இருக்கிறது. ஆகவே அந்தக் குழந்தை ஒவ்வொரு கணத்திலும், பேரானந்த நிலையில் இருக்கிறது. முழு பற்றுறுதி வைத்திருக்கும், நமது குரு அல்லது வழிகாட்டி இவர்களுடன் நாம் இருந்தும், பிறகு நமது மகிழ்ச்சி எங்கே போனது?

சிறிது சிந்தியுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது

*ப்ளீஸ்*  என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..  ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!  கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..  இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..*  *எப்ப பாரு என்ன டிவி?*  *புக் எடுத்து படி...* *வீட்டு வேலை செய்*, ...

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

ஆடி ஒன்று

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதம் 2024 :-* *வருகின்ற 17-07-2024 புதன்கிழமை* *ஆடி மாதம் பிறக்கின்றது* *ஆடி மாதம் என்றாலே...* *"உலகை ஆளும் ஆதிபராசக்தி அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு தெய்வீக மாதம்"* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷         *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘* *ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், மேலும் சிறப்பு பூஜைகள் ஊர் முழுவதும் களைகட்டும்....* *ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஆடி மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன...* 💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷 தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது... தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும்.  இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது. 🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதத...