முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரத்தன் டாடா பிசினஸ் சாம்ராஜ்யம் கடந்து வந்த பாதை

குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் 1937ம் ஆண்டு நாவல் டாடா - சுனு தம்பதியினருக்கு பிறந்தவர் ரத்தன் டாடா.

தனது 10 வயதில் பெற்றோரை பிரிந்து பாட்டியின் வீட்டில் வளர்ந்தவர், மும்பையின் கேம்பியன் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். கதீட்ரல் மற்றும் ஜான் கோனன் பள்ளிகளில் தனது படிப்பை முடித்தார். தொடர்ந்து ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தனது நிர்வாக மேற்படிப்பை 1975ம் ஆண்டு படித்து முடித்தார். படித்து முடித்ததும் இவருக்கு IBMல் வேலை கிடைத்தது. ஆனால், அவருக்கு அமெரிக்காவில் பணிபுரிவதில் விருப்பம் இல்லை. இந்தியாவில் தான் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த ரத்தன் டாட்டா அதே ஆவலுடன் தாய்நாடு திரும்பினார்.

அதனையடுத்து தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். சொந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட்டோம் என உடனே அவர் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அடிப்படையான சிறிய பொறுப்புகளிலிருந்தே தன்னை வளர்த்துக்கொண்டவர். சிறிய பொறுப்புகளில் பணிபுரிந்து நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டதால், உழைப்பின் அருமையும், அதிலிருக்கும் கஷ்டத்தையும் அடிமட்டத்தில் அறிந்துகொண்டார். ஏறக்குறைய 30 வருடம் உழைத்தார். டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தார். 1991ல் நிறுவனர் ஜே.ஆர்.டி டாடாவால், டாடா குழுமங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார் ரத்தன் டாடா. அன்றைக்குத் தொடங்கி இன்றைக்கு வரை, டாடா குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரைக் கண்டு உலகமே வியக்கும் தலைவராக உருவெடுத்துள்ளார். டாடா நிறுவனத்தில் அவர் பொறுப்பேற்பதற்கு முன்புவரை, டாடா குழுமம் என்பது இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனம் மட்டுமே.
அதனை உலக அரங்கில் கொண்டு சென்றவர் ரத்தன் டாட்டா. உலக மார்கெட்டில் மிகப்பெரிய அடிகளை எடுத்து வைத்து டாடா குழுமம் உலகின் மூலை முடுக்கெங்கிலும் தனக்கான வாய்ப்புகளைத் தேடி அலைந்தவர். ஒவ்வொரு நாட்டின் சந்தையிலும் தனி முத்திரை பதித்தார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்து துறையிலும் தடம் பதித்தார். இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது டாடா குழுமத்தைச் சார்ந்த டிசிஎஸ். கார்களை தயாரிப்பதில் ஆர்வம் அதிகரிக்க, 2008ல் லேன்ட்ரோவர், ஜாக்குவார் நிறுவனங்களின் இந்திய உரிமையை வாங்கினார்.அதே நேரத்தில் வெளிநாட்டில் இந்திய கார்களுக்கு டிமாண்டை உருவாக்கியவரும் இவரே என்றால் அது மிகையில்லை. உலகின் மிகப்பெரிய இரும்பு நிறுவனமான கோரஸ்-ஐ வாங்கி, இரும்பு உற்பத்தியில் உலக அளவில் முண்ணனியில் கொண்டு வந்தார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பு வகித்ததால் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருதும், பத்ம விபூஷன் விருதும் வழங்கி கௌரவித்தது. சாமானியனும் காரில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றி அழகு பார்த்தவர் . அதன் எதிரொலியாக உதித்தது தான் டாடா நானோ திட்டம். வெறும் 1 லட்ச ரூபாயில் கார்களை வெளியிட முன்வந்தது டாடா. ஆனால், அவரின் இந்த முயற்சியை பார்த்து உலகமே சிரித்தது. 1லட்சத்தில் காரா? குறைந்த தரத்துடன், சிறிய விபத்தில் அப்பளமாக நொறுக்கும் வகையில்தான் இருக்கப்போகிறது என பலரும் கேலி பேசினர். அவர்களின் வார்த்தைகளை பொய்யாக்கி இந்திய சாலைகளில் நானோ கார்கள் ஓடத் தொடங்கின. அவர் அறிவித்ததை காட்டிலும் சற்றே விலை அதிகம் தான். நானோ காரின் விலை 1.25 லட்சம். சற்று கூடுதலாக இருந்தாலும், உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையுடன், நல்ல தரத்துடன் வெற்றிகரமான மாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. பிசினசில் வெற்றிப் பெறுபவர்கள் பெரும்பாலும் பணத்தின் பின் ஓடுபவர்களாகவே இருக்கின்றனர்.

ரத்தன் டாடா பலருக்கும் முன்மாதிரியாய் தொழிலில் பல துறைகளில் சிறக்க நினைத்தாலும் பணம் ஈட்டுவதை முதன்மையாகக் கொண்டு இவற்றை செய்யாததே அவரின் தனிச்சிறப்பு. அதேபோல், டாடா ட்ரஸ்ட் மூலமாக ரத்தன் டாடா முன்னெடுத்துள்ள தொண்டு பணிகள் மற்றும் நன்கொடைகள் சொல்லில் அடங்காதவை. கொரோனாவால் உலகமே திணறிக்கொண்டிருந்த நிலையில், அதை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளுக்காக ரத்தன் டாடா 500 கோடி நிதி ஒதுக்கினார். மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நோயாளிகளின் சிகிச்சைக்காக சுவாசிக்க உதவும் உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள் என பார்த்து பார்த்து நிதியுதவி வழங்கினார்.

தமிழகத்துக்கும் டாடா குழுமம், கொரோனா கண்டறிவதற்காக சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரத்து 32 பிசிஆர் கிட் கருவிகளை வழங்கியுள்ளது. உலகத்தையே தன்னை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தவர் இன்று வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒருமுறை ரத்தன் டாடாவிடம், 'நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை?' எனக் கேட்டதற்கு, சிரிப்புடன் இப்படிக்கூறினார், "4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேறாமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளன" என்றார். உலகச் சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்த்தை ஏற்படுத்திக் கொடுத்ததில் பெரும்பங்கு ரத்தன் டாடாவிற்கு உரியது எனக் கூறினால் மிகையில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்தல் பணி

ஒதுக்கப்பட்ட ஊருக்குள் பேருந்து  இறக்கிவிட்டதும் எங்களுக்குள் ஏறிக் கொண்டது தேர்தல் பணி.. Zonal offficer கொடுத்துப் போன கோணிமூட்டையை கொட்டியதும் கொத்து கொத்தாய் வந்து விழுந்தன ஃபாரங்கள்.. EVM எந்திரங்களை பிறந்த குழந்தை  போல பாதுகாத்தோம்.. சின்ன  வகுப்பறை ஒரே ட்யூப்லைட்.. ஓரமாய் ஓடும்  மின்விசிறி.. இப்படி கொடுத்ததற்குள் வாழ கற்றுக் கொடுத்தது தேர்தல் பணி.. குழாய் இருந்தது  தண்ணீர் இல்லை.. பாத்ரூம் கதவு உடைந்திருந்தது.. சில இடங்களில் பாத்ரூமே  இல்லை என்று கேள்விபட்ட போது மனம் தானாக ஆறுதலடைந்தது.. புரண்டு புரண்டு படுத்தும் இமைகளில் தூக்கம் அமரவில்லை.. பக்கத்தில் P3 படுத்ததும் தூக்கம் அவரை வாரி அணைத்துக் கொண்டது.. P1 'குபீர் குபீர்' என்று  எழுந்து மீண்டும் படுத்துக் கொண்டார்.. வந்த  தண்ணீரை நெய் போல ஊற்றி குளித்து ஐந்து மணிக்கே தயாரானோம்.. ஆறுமணிக்கு வந்த ஏஜெண்டுகள்.. அவர்கள் கூட வந்த குளிக்காத  ஆட்கள் என்று Mockpoll  தொடங்கியது.. ஆயிரம் முறை வீடியோ பார்த்தாலும் அங்கு ஒருமுறை சீல் வைப்பதில் தடுமாறி  சரிசெய்து தொடங்கியது உண்மை  வாக்குப்பதிவு.. ஏழு மணிக்கு துவங்கிய  வரிசை ரயில் பெட்ட

பெண் குழந்தைகளுக்கான அழகான 68 முருகன் பெயர்கள்

1. சஷ்டிகா - Sastika 2. விசாகா - Visaka 3. க்ரித்திகா - Krithika 4. சக்திதாரா - Sakthithara 5. கார்த்திகா - Karthika 6. மயூரி - Mayuri 7. எழில்வெண்பா - Ezhilvenba 8. மயிலினி - Mayilini 9. விசாலினி - Visalini 10. வேலவர்ஷினி - Velavarshini 11. நித்ரா - Nithra 12. அகநேத்ரா - Aganethra 13. அகமித்ரா - Agamithra 14. சஷ்டிப்ரதா - Sastiprada 15. சஷ்டிப்ரகதா - Sastipragatha 16. ப்ரணவி- Pranavi 17. மகிழ்வதனா - Magizhvadana 18. எழில்நேத்ரா - Ezhilnethra 19. யுகஸ்ரீ - Yugashree 20. பிரபவா - Prabhava 21. ஆத்மபுவிகா - Atmabhuvika 22. குகஸ்ரீ - Guhasree 23. மேகதர்ஷினி - Megadharshini 24. இளமயிலி - Ilamayili 25. வினுமித்ரா - Vinumithra 26. ஜயத்சேனா - Jeyatsena 27. வினுப்ரியா- Vinupriya 28. முகில்வெண்பா - Mukilvenba 29. எழில்மித்ரா - Ezhilmithra 30. யுகநேத்ரா - Yuganethra 31. கந்தஸ்ரீ - Kandashri 32. ஸ்கந்தவி - Skandavee 33. தணிகைவேதா - Thanigaiveda 34. தமாயா - Thamaya 35. நேத்ரா - Nethra 36. க்ரித்திக்ஷா - Krithiksha 37. விசாலினி - Vishalini 38. யுகப்ரதா - Yugapradha 39. வினுநேத்ரா - Vinun

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் தானம் செய்வது நன்மை