கிருஷ்ண பகவான் - உத்தவா உரையாடல்.
உத்தவா அவருடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, கிருஷ்ண பகவானுடைய தேரோட்டியாக அவரோடு இருந்து வந்தார். மேலும் அவருக்கு பல்வேறு வழிகளில் சேவை செய்து வந்தார். அவர் ஒரு போதும், கிருஷ்ணரிடம் இருந்து எந்த விதமான விருப்பத்தையோ அல்லது வரத்தையோ நாடியது இல்லை. கிருஷ்ண பகவான் அவரது இந்த அவதாரத்தை முடிக்கும் எல்லைக் கோட்டில் இருக்கும் போது, அவர் உத்தவரை அழைத்தார். “அன்பு உத்தவா, என்னுடைய இந்த அவதாரத்தில் நிறைய மக்கள், என்னிடம் இருந்து நிறைய வரங்களைக் கேட்டும், பெற்றும் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு போதும், என்னிடம் எதுவுமே கேட்டது இல்லை. இப்பொழுதாவது நீங்கள் ஏதாவது கேட்கலாம் அல்லவா? நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். இந்த அவதாரத்தை நிறைவு செய்திடும் போது, உங்களுக்கும் ஏதாவது செய்திட்ட திருப்தி எனக்கு கிடைத்திடும்.“ உத்தவா அவருக்கு என்று எதுவுமே, கேட்காமல் இருந்த போதிலும், அவர் அவருடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே, கிருஷ்ணரை உற்றுக் கவனித்துக் கொண்டே இருக்கிறார். அவர் எப்போதும் ஆச்சரியம் கொள்வதுண்டு. அதாவது கிருஷ்ணருடைய போதனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் வெளிப்படையாகவே, வேறுபாடு இருப்பது பற்ற