இடுகைகள்

கிருஷ்ண பகவான் - உத்தவா உரையாடல்.

 உத்தவா அவருடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, கிருஷ்ண பகவானுடைய தேரோட்டியாக அவரோடு இருந்து வந்தார். மேலும் அவருக்கு பல்வேறு வழிகளில் சேவை செய்து வந்தார். அவர் ஒரு போதும், கிருஷ்ணரிடம் இருந்து எந்த விதமான விருப்பத்தையோ அல்லது வரத்தையோ நாடியது இல்லை.  கிருஷ்ண பகவான் அவரது இந்த அவதாரத்தை முடிக்கும் எல்லைக் கோட்டில் இருக்கும் போது, அவர் உத்தவரை அழைத்தார். “அன்பு உத்தவா, என்னுடைய இந்த அவதாரத்தில் நிறைய மக்கள், என்னிடம் இருந்து நிறைய வரங்களைக் கேட்டும், பெற்றும் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு போதும், என்னிடம் எதுவுமே கேட்டது இல்லை. இப்பொழுதாவது நீங்கள் ஏதாவது கேட்கலாம் அல்லவா? நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். இந்த அவதாரத்தை நிறைவு செய்திடும் போது, உங்களுக்கும் ஏதாவது செய்திட்ட திருப்தி எனக்கு கிடைத்திடும்.“  உத்தவா அவருக்கு என்று எதுவுமே, கேட்காமல் இருந்த போதிலும், அவர் அவருடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே, கிருஷ்ணரை உற்றுக் கவனித்துக் கொண்டே இருக்கிறார். அவர் எப்போதும் ஆச்சரியம் கொள்வதுண்டு. அதாவது கிருஷ்ணருடைய போதனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் வெளிப்படையாகவே, வேறுபாடு இருப்பது பற்ற

இது இயற்கையின் அற்புதம்! படத்தை பெரிது படுத்திப் பாருங்கள்...

படம்

விசிலை அடிக்காதீர்

நான் ஒரு பள்ளியில், விளையாட்டு மைதானத்தில் நடக்கும் ஒரு சாதாரண கால் பந்து போட்டியை கவனித்தேன். நான் உட்கார்ந்தவுடன், அங்கிருந்த பையன் ஒருவனிடம் ஸ்கோர் என்ன என்று கேட்டேன். ஒரு புன்சிரிப்போடு அவன் பதில் கூறினான், “அவர்கள் எங்களை விடவும், 3-0 என்ற கணக்கில் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் நான் சொன்னேன்,” உண்மையாகவா !” “ நான் கூறினேன், உன்னைப் பார்த்தால் தைரியத்தை இழந்தவன் போல தெரியவில்லையே! அவனை, ஆறுதல் படுத்த முயற்சி செய்யும் விதமாக, நான் இதனை கூறினேன்.   “தைரியத்தை இழக்க வேண்டுமா?” அந்த பையன் என்னைப் பார்த்து திகைப்பான பார்வை கொண்டு கேட்டான். “ நான் ஏன் தைரியத்தை இழக்க வேண்டும்; அந்த நடுவர் இன்னமும் கடைசி விசிலை அடிக்கவில்லையே?” அந்த குழுவின் மீதும், மேலும் அங்கு பங்கேற்கும் மேனேஜர்களிடமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் நிச்சயமாக முறியடித்திடுவோம்.“ உண்மையாகவே, அந்த போட்டி ஒரு முடிவுக்கு வந்தது. 5-4 என்ற கணக்கில் ஸ்கோர்; அந்த பையனுடைய குழு வெற்றி பெற்றது. அவன் போகும் போது, அழகான புன்சிரிப்புடன் சென்றான்; அவன் என்னைப் பார்த்து, கைகளை மென்மையாக அசைத்தான். நான் அ

மரம்

இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்போ நம்மால் தாங்க இயலாது குழந்தைகள் காப்பாற்றுவதற்கு சிரமம் இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பலம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது, நம்ம வீட்டை சுற்றி இடமிருப்பின் முடிந்த அளவிற்கு மரங்களை நடுங்கள், *மரம் நடுவோம் இயற்கையை காப்போம்* வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம் மர கன்றுகள் உற்பத்தியாளர்கள்,  வன துறை,  பள்ளி தாளாளர்கள்,  உயர் பதவிகளில் இருப்போர்,  பிரபலங்கள்,   ஆன்மீக தலைவர்கள்,  அனைத்து மதங்களின் குருமார்கள்,  கிராம தலைவர்கள்,  ஊர் தலைவர்கள்,  அனைத்து கட்சி தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம்.  அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகி கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மர கன்றிற்கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.  இதே போல் சில வருடங்கள் செய்தால், 2030 ககுள் தமிழகமும் குளிர்ந்து போகும் அவரவர் ஊர்களில் சி

ஸ்ரீதர் வேம்பு

படம்
ஸ்ரீதர் வேம்பு..  உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான “ஸோஹோ கார்ப்பரேஷனின் (Zoho Corporation ) ”, தலைமை நிர்வாக அதிகாரி ( C E O) . ஏதோ, இந்த மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் இப்போது இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அங்கு தான் இருந்தது. அதன் தலைமையகத்தை, 2019ஆம் ஆண்டு அக்டோபரில், தென்காசிக்குப் பக்கம் இருக்கும் “மத்தளம்பாறை” என்னும் தன் கிராமத்துக்குக் கொண்டு வந்து விட்டார் இந்த மஹாமனிதர். இப்போது, ஒரே வருஷத்தில், இந்த நிறுவனம், சுமார் 3410 கோடி டாலர் லாபம் அடைந்ததைக் கண்டு, தொழில் நுட்ப வல்லுநர்கள், வியந்து போய் இருக்கிறார்கள். மிகப் பெரிய தொழில் ஸ்தாபனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்ரீதர் வேம்பு போவது சைக்கிளில் தான். சாப்பிடுவதும், டீ அருந்துவதும், கிரிக்கெட் விளையாடுவதும் கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளுடன் தான். கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளைத் திரட்டி, 4 ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு நவீன கணினிப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார். நவீன மருத்துவமனை, சாக்கடைகள், குடிநீர்வசதி, நீர்ப்பாசன

திருமணம்...சில நம்பிக்கைகள்

படம்
சடங்குகள் நம்பிக்கைகள் அம்மி மிதிப்பது அம்மி போன்று மன வலிமை கிடைக்குமென்று. அரிசி தூவி வாழ்த்துவது உணவிற்கு பஞ்சமின்றி வாழ்வீர்கள் என்பதற்காக மூன்று மூடிச்சு அறம்,பொருள், இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருளில் நிற்பதற்காக வாழை மற்றும் தென்னங்கிற்று தோரணம் வாழை தென்னை அழியாத பயிர்கள். இவை எல்லா காலங்களிலும் வளரும் அதன் எல்லா பாகங்களும் நமக்கு பயன்தரும். அதுபோல் மணமக்கள் வாழ வேண்டும் என்பதற்காக மெட்டி அணிவிப்பது வாழ்வின் பொறுப்புகளை சுட்டிக்காட்டும் | கால்கட்டின் அடையாளம் கெட்டி மேளம் கொட்டுவது அனைவரையும் திருமணம் பத்தி மட்டுமே சிந்திக்க வைக்க. அமங்கலமான அபசகுணமான வார்த்தைகளை கேளாதிருக்க மாலை மாற்றுதல் உள்ளத்தால் ஒன்றுபட மன மாற்றம் தேவை. அதை உணர்த்த மாலை.. பத்து பொருத்தங்களைப் பார்த்து. ஒன்பது கோள்நிலைகளை அறிந்து. எட்டு திசையிலிருந்தும் உறவை அழைத்து, ஏழு அடி எடுத்து வைத்து. அறுசுவை உணவு படைத்து. பஞ்ச பூதங்கள் சாட்சியாக, நான்கு வேதங்கள் முழங்க. மூன்று முடிச்சுகளால், இரு மனங்கள் ஒன்று சேரும்.  ஓர் அற்புத பந்தத்தின் உறவே.  திருமண உறவு🙏🏼

ஒருபோதும் நீ தன்னந்தனியாக இல்லை

*465 நாட்கள் ✈️HFN கதை 🌍 குழுவினரோடு."* *♥️ கதை-82♥️*  *“வாசிப்பதற்கு முன்பாக … உங்கள் கண்களை இதமாக மூடுங்கள்… உங்கள் கவனத்தை உங்கள அந்த சிறிய பையன் குளிருக்கான அவனுடைய ஆடைகளை போட்டு விட்டு பிறகு அவனுடைய அப்பாவிடம் கூறினான்:  “ ஓ. கே. அப்பா, நான் தயாராகி விட்டேன்.”  அவனுடைய அப்பா, ஒரு போதகர், அவர் கூறினார்: “தயார், என்றால் அது எதற்காக?”  “அப்பா, இப்போது நாம் வெளியே செல்ல வேண்டிய நேரம்; அங்கே நம்முடைய துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ய வேண்டும்.“  அப்பா பதில் கூறினார்: “ மகனே, வெளியே இப்போது மிகவும் குளிராக இருக்கிறது. மேலும் மழையும் தூற்றிக் கொண்டே இருக்கிறது.”  அந்தக் குழந்தை அவனுடைய அப்பாவை ஆச்சரியத்துடன் பார்த்தான், மேலும் கூறினான்: “ஆனால், அப்பா, மழைக் நாட்களில் கூட மக்கள் கடவுளைப் பற்றி அறிந்து கொள்வது தேவைப்படுகிறது. “  அப்பா பதில் அளித்தார், “மகனே, என்னால் இந்த சீதோஷ்ண நிலையில் வெளியே போக முடியாது.“  விரக்தியோடு, அந்த குழந்தை கூறியது” “அப்பா, நான் தனியாகப் போகலாமா? தயவுசெய்து!“  அவனுடைய அப்பா ஒரு கண நேரம் செல்ல விட்டு, பிறகு மேலும் கூறினார்,“ மகனே, நீ போக முடியும்.