முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கதை

ஐன்ஸ்டீனின் "சார்பியல் கோட்பாடு" மிகவும் புகழ் வாய்ந்தது. அப்போது, இந்த கோட்பாட்டைப் பற்றி விளக்கம் தருவதற்காக, அவரை ஒவ்வொரு இடமாக வருவதற்கு அழைப்பு விடுத்தனர். வழக்கமாக, ஐன்ஸ்டீன் காரில்தான் செல்வார். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அவரது டிரைவரும் கூடவே செல்வார். ஐன்ஸ்டீனின் விளக்கக் கூட்டங்கள் நடக்கும் போது, டிரைவர் கடைசி வரிசையில், வழக்கமாக உட்கார்ந்து இருப்பார்.  

 ஒரு விளக்கக் கூட்டத்திற்காக ஒரு நாள் காரில் போய்க் கொண்டு இருக்கும் போது, அவரது டிரைவர், “சார், உங்களுடைய ‘சார்பியல் கோட்பாடு’ மிகவும் எளிமையானது. அதற்கு நான் கூட விளக்கம் கொடுக்க முடியும். நான் இதை நிறைய தடவைகள் கேட்டு இருக்கின்றேன். நீங்கள் உங்கள் கோட்பாட்டை விளக்கும் போது, கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஞாபகம் இருக்கிறது” என்றார்.    

 இதைக் கேட்டவுடன் மனக்குழப்பம் அடைவதற்குப் பதிலாக, ஐன்ஸ்டீன் அதை தனக்குக் கிடைத்த ஒரு பாராட்டாக எடுத்துக் கொண்டார். அறிவியலைப் பற்றி ஏதும் தெரியாமல் இருந்தாலும், தனது டிரைவர் கூட தன்னுடைய கோட்பாட்டை புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி அடைந்தார்.

 தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத அந்த கால கட்டத்தில், ஐன்ஸ்டீன் எப்படி இருப்பார் என்பது மக்களுக்கு உண்மையிலேயே தெரியாது.

 “எனது அடுத்த விளக்கக் கூட்டத்தில் நீதான் கோட்பாட்டை விளக்க வேண்டும்” என்று ஐன்ஸ்டீன் கூறிய போது, டிரைவரும் அதற்கு சம்மதித்தார்.   

 விளக்கக் கூட்டம் நடைபெறும் இடத்தை அடைந்தவுடன், அவர்கள் இருவரும் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டனர். டிரைவர் ஒரு விஞ்ஞானி போல, உடை உடுத்திக் கொண்டார். ஐன்ஸ்டீன் தன்னைத் தானே ஒரு டிரைவர் போல் மாற்றிக் கொண்டு ஹால் உள்ளே சென்றனர்.

 இறுதியாக, அவரது டிரைவர் மேடைக்குச் சென்று, “சார்பியல் கோட்பாடு “ பற்றி விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். யாருமே அவரை சந்தேகம் கொள்ள இயலாத அளவில், விளக்கக் கூட்டம் நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது.    

 விளக்கம் முடிந்த பிறகு, கேள்வி பதில் சுற்று, வந்தது. கேள்விகளில் நிறைய கேள்விகள் ஏற்கனவே நடந்த கூட்டங்களில் கேட்கப்பட்டவை. எனவே எல்லா கேள்விகளுக்கும் உரிய பதில்களை டிரைவர் மிகவும் இலகுவாகக் கூறி விட்டார்.    

 கேள்வி பதில் சுற்று அனேகமாக முடியும் தருணத்தில், பார்வையாளர்களில் ஒருவர் கடைசிக் கேள்வியைக் கேட்டார். இந்த கேள்வி இதுவரை நடந்த விளக்கக் கூட்டங்களில் கேட்கப்படாத கேள்வியாக இருந்ததால், டிரைவருக்கு பதில் கூற இயலவில்லை. 

 இந்த கேள்விக்கு தவறாக பதில் கொடுத்தால், அவரது எஜமானர் கற்றறிந்த அறிஞர்கள் முன்னிலையில் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பது டிரைவருக்குத் தெரியும். நான் ஐன்ஸ்டீன் அல்ல; நான் ஒரு சாதாரண டிரைவர் என்று கூறினால், மிகப் பெரிய மகான்கள் இதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

 ஆகவே, டிரைவர் ஒரு கணம் தனக்குள் ஸ்திரப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு,“ உங்களுடைய கேள்வி, மிகச் சாதாரணமானது. இதற்கு என் டிரைவர் கூட விடை தருவார்” என்று பதில் கூறினார். அவர் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.

 தன் டிரைவரின் இந்த பதிலைக் கேட்டு ஐன்ஸ்டீன் ஆச்சரியம் அடைந்தார். ஆனால், உள்ளுக்குள் முழுவதுமாக மகிழ்ச்சி அடைந்தார். அந்த கேள்விக்கு விடை கூறினார். எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல், விளக்கக் கூட்டம் முடிவுக்கு வந்தது.  

 இந்த உண்மையான சம்பவம் நமக்கு போதிப்பது என்னவெனில், “ஆழ்ந்த அமைதியும் மேலும் விழிப்புணர்வும் மனதில் இருக்கும் போது, இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து, நாம் வெளியே வந்து விடலாம் “ .  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...