முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனம் குவித்து செய்கின்ற வேலை மிகச் சிறந்த முடிவுக்குக் கொண்டு செல்கிறது

 இங்கிலாந்து நாட்டின் வரலாற்றில் ஆல்பர்ட் ஒரு புகழ் பெற்ற அரசராக இருந்தார். அவர் தன் நாட்டு மக்களின் நன்மைக்காக, மிகச் சிறந்த நலத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். இதனால் அவர் “மகா ஆல்பர்ட் *(Alfred the Great )”* என்றும் அழைக்கப்பட்டார்.

  ஆரம்ப காலத்தில், சாதாரணமான எல்லா அரசர்களையும் போல, ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை மேற்கொண்டார். குருட்டுத் தனமான மனப்போக்குடன், அது நல்லதா அல்லது கெட்டதா என ஆராய்ந்து பார்க்காமல், தன் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அதன் படியே, நடக்கலானார். அவரது வாழ்க்கை சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், மேலும் களியாட்டங்களில் ஈடுபடுவதிலும் மூழ்கித் திளைத்தது.

  சமுத்திரத்தில் விழுந்த ஒரு வைக்கோல் குச்சி மேலே எழும்பியும், கீழே விழுந்தும் அலைகளால் அடித்துச் செல்லப்படுவதைப் போல, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கையை மேற்கொண்டார். இறுதியில் அது அவரை ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது. பொறுப்பில்லாத இவரது வாழ்க்கை எதிரிகளுக்கு பயன் தருவதாக அமைந்தது. பகைவர்களால் இவரது ராஜ்ஜியம் கைப்பற்றப் பட்டு, இவர் அரச பதவியை இழந்தார்.  

  இங்கும் அங்குமாக அலைந்து கொண்டு போராடிக் கொண்டு இருந்தார். ஒரு விவசாயி வீட்டில் வேலை செய்தார். பாத்திரங்கள் கழுவுவது, தண்ணீர் நிரப்புவது, சமையல் அறையில் உள்ள இதர வேலைகளைச் செய்வது – இவை அனைத்தும் ஆல்பர்ட்டுக்கு கொடுக்கப்பட்டன. அந்த விவசாயின் மனைவி இவர் செய்யும் வேலையை கண்காணிப்பாள். ஆல்பர்ட் தலைமறைவாகவே தன் வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

  ஒரு நாள், அந்த விவசாயின் மனைவி சில முக்கியமான வேலை நிமித்தம் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அடுப்பில் கறிக் குழம்பு கொதித்துக் கொண்டு இருந்தது. நான் திரும்பி வரும் வரை அதைக் கொஞ்சம் கவனித்துக் கொள் என்று ஆல்பர்ட்டிடம் கேட்டுக் கொண்டார்.

  அவள், தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு திரும்பும் போது, ஆல்பர்ட் சோம்பேறித்தனமாக உட்கார்ந்து கொண்டு, பகல் கனவு கண்டு கொண்டு இருந்தார். அடுப்பில் இருந்த கறிக் குழம்பு முழுவதும் புகைந்து போய் விட்டது.

  “ முட்டாள் தனமான வாலிபனே! நீயும் ஆல்பர்ட் போலவே இருக்கிறாயே ! உனக்குக் கொடுக்கப் பட்ட எந்த வேலையையும் நீ முழுக் கவனத்துடன் செய்து முடிப்பது இல்லை. நீயும் அவரைப் போல அலைந்து திரிந்து போராட வேண்டியதுதான் “ என்று அந்தப் பெண் கூறினாள்.  

  ஐயோ, பாவம் அந்தப் பெண்மணி! அரசன் ஆல்பர்ட்டுடனேதான் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்பது அவளுக்குத் தெரியாது. ஆனால், ஆல்பர்ட் தன்னுடைய தவறை உணர்ந்தார். இப்போது அவர் ஒரு முடிவுக்கு வந்தார். -- “இனிமேல் எந்த வேலையைச் செய்தாலும் முழுமையான கவனத்துடன் மனதை ஈடுபடுத்தி செய்வேன். கற்பனைக் கோட்டைகளை கட்டிக் கொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை !”

  ஆல்பர்ட் திரும்பவும் தன் நாட்டை சுற்றியுள்ள நேச நாடுகளை ஒன்று சேர்த்தார். பொருள் திரட்டினார். தன்னுடைய படையை ஒன்று திரட்டி பகைவனைத் தாக்கி, லண்டன் மாநகரை திரும்பவும் கைப் பற்றினார். இந்த சமயத்தில் அவர் இங்கிலாந்து முழுவதையும் ஒரு குடையின் கீழ், அதாவது தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். தன்னுள் மீண்டும் எழுந்த ஒரு புதிய உற்சாகத்துடன் வேலை செய்தார். முழு கவனத்தோடும், புரிதலோடும் நாட்டை முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டு சென்றார்.  

  ஒரு நாள் அரசர் ஆல்பர்ட் அந்த விவசாயியின் வீட்டுக்குத் திரும்பவும் சென்றார். விவசாயியின் மனைவிக்கு அதிக அளவில் பொருளுதவி செய்தார். “மரியாதைக்குரிய எஜமானியே, நீங்கள் அன்று எனக்குப் பாடம் கற்பிக்காவிட்டால், நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது.” தனக்குக் கிடைக்கப் பெற்ற நல்ல அறிவுரையை மரியாதையோடு ஏற்றுக் கொள்ளும் நல்ல குண நலனும், அந்த அறிவுரை தன்னை விட கீழானவர்களிடம் இருந்து வந்த போதிலும், அதனை ஏற்றுக் கொண்டதும், இப்போதும் புகழப்படக் கூடிய ஒன்றாகும்.    

 அந்த நாளில் அவர் யார் என்று தெரியாமல், அந்த மாதிரியான கடுமையான வார்த்தைகளால் பேசி விட்டோமே என்று அந்தப் பெண்மணி அதிர்ச்சி அடைந்தாள்.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...