முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேறு பட்ட கண்ணோட்டம்

ஒரு ஏழை மனிதன் தன்னுடைய குடும்பத்தினருக்காக, கடினமான முயற்சி எடுத்து ஒரு வீட்டைக் கட்டினான். ஒவ்வொரு ரூபாயாக சிறுகச் சிறுக சேர்த்து, 20 வருடங்களுக்குப் பிறகு வீட்டைக் கட்டி முடிக்கிறான். எனவே, அவரது குடும்பம் அந்த குடிசையில் இருந்து வெளியேறி பெரிய வீட்டில் குடியேறி மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள்.     

   இறுதியாக ஒரு நாள் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு தயார் ஆனது. எல்லோரும் சேர்ந்து ஆலோசித்து, ஒரு விஷேசமான நாளை, புதுமனை புகுவிழாவிற்காக முடிவு செய்தார்கள்.    

   ஆனால், விழாவுக்கு 2 நாட்களுக்கும் முன்னால், ஏற்பட்ட நில நடுக்கத்தால், அந்த வீடு முழுவதுமாக இடிந்து விழுந்து போய் விட்டது.    

   இந்த சம்பவத்தைப் பற்றி தெரிந்தவுடன், அந்த ஏழை மனிதர் மார்க்கெட்டுக்கு ஓடிச் சென்று இனிப்புகள் வாங்கி வந்தார். வீடு இடிந்து கிடந்த இடத்திற்கு இனிப்புகளோடு சென்றார். அங்கு நிறைய பேர் திரண்டு நின்று, அவர்களது வருத்தத்தை வெளிப்படுத்திக் கொண்டு நின்றனர். இந்த சம்பவம் நடந்ததற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.     

  “ஓ, இந்த ஏழை மனிதருக்கு இப்படி ஒரு துரதிர்ஷ்டமான செயல் நடந்து விட்டதே? மிகவும் கஷ்டப்பட்டு ஒவ்வொரு ரூபாயாக சேர்த்து அல்லவா இந்த வீட்டைக் கட்டி இருக்கிறார்!    

  மக்கள் தங்களுக்குள் வித்தியாசமான கருத்தை விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.    

  அந்த ஏழை மனிதர் அங்கு வந்தார். தனது பையில் இருந்து, இனிப்புகளை எடுத்து எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்தார்.    

  இவரது இந்த செயலைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்!   

   முடிவாக, அவரது நண்பர்களில் ஒருவர் அவரிடம் கேட்டார், “ உனக்கு பைத்தியம் ஏதும் பிடித்து விட்டதா? உன்னுடைய வீடு முழுவதுமாக இடிந்து போய் விட்டது; உன்னுடைய வாழ்நாள் முழுவதுமாக நீ சம்பாதித்த வருமானமும் அப்படியே வீணாகப் போய் விட்டது. ஆனால், நீயோ மகிழ்ச்சியாக இனிப்புகளை கொடுத்துக் கொண்டு இருக்கிறாயே!?” 

   அந்த மனிதர் புன்முறுவலோடு பதில் அளித்தார் ,” நீங்கள் இந்த நிகழ்ச்சியின் எதிர்மறைப் பக்கத்தினை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். நேர்மறைப் பக்கத்தை அல்ல. இந்த வீடு இன்றே இடிந்து விழுந்தது நல்லதுதான். இப்படி இல்லாமல், வேறு மாதிரி எண்ணிப் பாருங்கள் –இந்த வீடு இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு இடிந்து விழுந்தால், முழு குடும்பமும் அதாவது நான், எனது மனைவி, குழந்தைகள் அனைவருமே அல்லவா இறந்து இருப்போம். அது எவ்வளவு பெரிய இழப்பு ?

  எந்த நிகழ்ச்சியோ, அல்லது விஷயமோ அவற்றிற்கு இரண்டு பக்கங்கள் உண்டு –நேர்மறை அம்சமும், எதிர்மறை அம்சமும். அதை நாம் எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ அதைப் பொறுத்து, அது நம்மை சார்ந்து இருக்கிறது. நமது வாழ்க்கையின் விதியும் அதைப் பொறுத்துதான் அமைகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...