முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூஃபி ஞானியின் பிரார்த்தனையும் சீடரின் கேள்வியும்

முன்னொரு காலத்தில் சூஃபி மறைஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வழக்கமாக தன் பிரார்த்தனையை இப்படி செய்வார் –“கடவுளே, நீ எனக்கு செய்யும் அனைத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் செய்யும் நன்மைகளை என்னால் எப்போதாவது திருப்பிக் கொடுக்க முடியுமா? நான் நன்றியுணர்வை மிகவும் உணர்கிறேன்”.  

   ஒரு முறை அவர் வெகு தூரம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து மூன்று நாட்களாக அங்கிருந்த மக்கள் இவருக்கு தங்க இடம் கொடுக்க மறுத்தனர். இவர் நல்ல மனிதர் என அவர்கள் நம்பவும் மறுத்தனர். அவருக்கு உணவும், தண்ணீரும் கூட கொடுக்க மறுத்தனர். அந்த மூன்று நாட்கள் முழுவதும் பசியோடும், தாகத்தோடும் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்.   

  மூன்று நாட்களாக பசியும், தாகமும் வாட்டிய போதும் கூட பிரார்த்தனையைத் தொடர்ந்தார். அவர் இரவில்,“ கடவுளே நன்றி ! என்னால் எப்படித் திருப்பிக் கொடுக்க முடியும் ? நான், நன்றியுணர்வை மிகவும் உணர்கிறேன்.”
   
 அவருடன் பயணம் செய்த சீடர்களில் ஒருவர், இவர் இவ்வாறு பிரார்த்தனை செய்வதை பார்த்து விட்டு, குருவே, தயவு செய்து நான் சிறிது பேசலாமா? என்றார். நீங்கள் எதற்காக நன்றி கூறிக் கொண்டு இருக்கிறீர்கள்? மூன்று நாட்களாக நாம் தங்குவதற்கு இடமும் இல்லாமல், பசியோடும், தாகத்தோடும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறோம். இந்த காட்டு விலங்குகளின் கருணையினால் நாம் இருக்கிறோம். ஆகவே என்ன காரணத்திற்காக நீங்கள் நன்றியுணர்வோடு இருக்கிறீர்கள்?    

   அந்த மறை ஞானி புன்சிரிப்போடு கூறினார், “உன்னால் இதைப் புரிந்து கொள்ள முடியாது - மூன்று நாட்களாக உண்ணவும், குடிக்கவும் ஏதும் இல்லாமல் இருப்பது என்பது, எனக்குக் கண்டிப்பாகத் தேவைப்பட்டு இருக்கிறது. கடவுள் எனக்கு என்ன தேவையோ அதை எப்போதும் கொடுப்பார். இந்த பசியும், தாகமும் எனக்குத் தேவைப் பட்டதால் அதையும் கொடுத்து விட்டார். 

  இந்த மூன்று நாட்களும் எனக்குத் தேவைப் பட்ட நேரமாக இருந்திருக்கிறது, இல்லை எனில் ‘அவர்’ இதை எனக்கு கொடுத்திருக்க மாட்டார். இதற்காக நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.   

 கடவுள் எப்போதுமே என்னைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார். என்னுடைய ஆசைகளைப் பற்றி அவர் கவலைப் படுவது இல்லை. எனக்கு எது சரியான தேவை என்பதை உணர்ந்து அதை எனக்குக் கொடுப்பார். 

  நான் அவருக்கு நன்றி கூறிக் கொண்டு இருக்கிறேன். ஏனென்றால், உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல், தங்க இடம் இல்லாமல், மூன்று நாட்களாக பாலை வனத்தில், திறந்த வெளியில், வானத்து நட்சத்திரங்களின் அடியில், தூங்கிக் கொண்டு இருக்கும் போதும் கூட, நம்மை எந்த காட்டு விலங்குகளும் தாக்கவில்லை.

  நீ வருத்தப்படுகிறாயா? எதற்காக? இதுதான் நமது உண்மையான தேவையாக இருந்திருக்கிறது!

  இதுதான், உண்மையான பற்றுறுதி என்பது. இது இதயபூர்வமான நன்றியுணர்வு. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு சூழலையும் மகிழ்ச்சியாக்கிக் கொண்டு வாழ்வதுதான் ஒரு உண்மையான இதயத்தின் பெருந்தன்மையாகும். பெருந்தன்மையான இதயம் கொண்ட ஒரு மனிதனால், தன் வாழ்க்கையின் உண்மையான லட்சியத்தை நோக்கி முன்னேற முடியும்.    

  இப்போது அந்த சீடரின் முகத்தில் திருப்தி தென்பட்டது. லட்சியத்தை நோக்கி முன்னேறுவதற்கான ரகசியத்தை குருவின் இந்த வார்த்தைகள் அவருக்கு வெளிப்படுத்தின. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்தல் பணி

ஒதுக்கப்பட்ட ஊருக்குள் பேருந்து  இறக்கிவிட்டதும் எங்களுக்குள் ஏறிக் கொண்டது தேர்தல் பணி.. Zonal offficer கொடுத்துப் போன கோணிமூட்டையை கொட்டியதும் கொத்து கொத்தாய் வந்து விழுந்தன ஃபாரங்கள்.. EVM எந்திரங்களை பிறந்த குழந்தை  போல பாதுகாத்தோம்.. சின்ன  வகுப்பறை ஒரே ட்யூப்லைட்.. ஓரமாய் ஓடும்  மின்விசிறி.. இப்படி கொடுத்ததற்குள் வாழ கற்றுக் கொடுத்தது தேர்தல் பணி.. குழாய் இருந்தது  தண்ணீர் இல்லை.. பாத்ரூம் கதவு உடைந்திருந்தது.. சில இடங்களில் பாத்ரூமே  இல்லை என்று கேள்விபட்ட போது மனம் தானாக ஆறுதலடைந்தது.. புரண்டு புரண்டு படுத்தும் இமைகளில் தூக்கம் அமரவில்லை.. பக்கத்தில் P3 படுத்ததும் தூக்கம் அவரை வாரி அணைத்துக் கொண்டது.. P1 'குபீர் குபீர்' என்று  எழுந்து மீண்டும் படுத்துக் கொண்டார்.. வந்த  தண்ணீரை நெய் போல ஊற்றி குளித்து ஐந்து மணிக்கே தயாரானோம்.. ஆறுமணிக்கு வந்த ஏஜெண்டுகள்.. அவர்கள் கூட வந்த குளிக்காத  ஆட்கள் என்று Mockpoll  தொடங்கியது.. ஆயிரம் முறை வீடியோ பார்த்தாலும் அங்கு ஒருமுறை சீல் வைப்பதில் தடுமாறி  சரிசெய்து தொடங்கியது உண்மை  வாக்குப்பதிவு.. ஏழு மணிக்கு துவங்கிய  வரிசை ரயில் பெட்ட

பெண் குழந்தைகளுக்கான அழகான 68 முருகன் பெயர்கள்

1. சஷ்டிகா - Sastika 2. விசாகா - Visaka 3. க்ரித்திகா - Krithika 4. சக்திதாரா - Sakthithara 5. கார்த்திகா - Karthika 6. மயூரி - Mayuri 7. எழில்வெண்பா - Ezhilvenba 8. மயிலினி - Mayilini 9. விசாலினி - Visalini 10. வேலவர்ஷினி - Velavarshini 11. நித்ரா - Nithra 12. அகநேத்ரா - Aganethra 13. அகமித்ரா - Agamithra 14. சஷ்டிப்ரதா - Sastiprada 15. சஷ்டிப்ரகதா - Sastipragatha 16. ப்ரணவி- Pranavi 17. மகிழ்வதனா - Magizhvadana 18. எழில்நேத்ரா - Ezhilnethra 19. யுகஸ்ரீ - Yugashree 20. பிரபவா - Prabhava 21. ஆத்மபுவிகா - Atmabhuvika 22. குகஸ்ரீ - Guhasree 23. மேகதர்ஷினி - Megadharshini 24. இளமயிலி - Ilamayili 25. வினுமித்ரா - Vinumithra 26. ஜயத்சேனா - Jeyatsena 27. வினுப்ரியா- Vinupriya 28. முகில்வெண்பா - Mukilvenba 29. எழில்மித்ரா - Ezhilmithra 30. யுகநேத்ரா - Yuganethra 31. கந்தஸ்ரீ - Kandashri 32. ஸ்கந்தவி - Skandavee 33. தணிகைவேதா - Thanigaiveda 34. தமாயா - Thamaya 35. நேத்ரா - Nethra 36. க்ரித்திக்ஷா - Krithiksha 37. விசாலினி - Vishalini 38. யுகப்ரதா - Yugapradha 39. வினுநேத்ரா - Vinun

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் தானம் செய்வது நன்மை