முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருப்பு பெல்ட்

*கருப்பு பெல்ட் வாங்குவதன் பொருள் என்ன?*

 ஒரு தற்காப்பு கலைஞன் பல வருடங்களாக கடினமாக பயிற்சி செய்தான். அவன் கருப்பு பெல்ட் வாங்குவதற்கு தகுதியுடையவனாக தேர்ந்தெடுக்கப் பட்டான். அந்த பெல்ட் அவனுக்கு ஒரு கராத்தே ஆசிரியரால் (Sensei – Karate Teacher in Japanese ) விழா ஒன்றில் கொடுக்கப் படுவதாக இருந்தது. அந்த விழா அன்று அந்த இளம் கலைஞன் கருப்பு பெல்டை பெறுவதற்காக அந்த ஆசிரியர் முன்பு வந்தான்.
பெல்டைப் பெறுவதற்கு முன்பு, உனக்கு மற்றொரு தேர்வு வைக்கப் போகிறேன் என்றார் ஆசிரியர்.  

“நான் தயாராக இருக்கிறேன்” என்று அந்த இளைஞன் எந்தவித தயக்கமும் இன்றி, முழுமையான நம்பிக்கையுடன் பதில் கூறினான். யாருடனாவது போட்டியிடச் சொல்வார் என அவன் நினைத்தான். ஆசிரியர் மனதில் வேறு ஏதோ இருப்பதை அவன் அறியவில்லை.  

 தேர்வு என்னவென்றால், ஆசிரியர் அவன் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் என விரும்பினார். இந்த கருப்பு பெல்டை பெறுவதன் உண்மையான பொருள் என்ன? --இதுதான் கேள்வி.

 “என்னுடைய பயணத்தின் முடிவில், என்னுடைய கடின உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி “ என்று இளைஞன் பதில் கூறினான்.   

 இந்த பதிலுக்கு ஆசிரியர் திருப்தி அடையவில்லை. அவர் சொன்னார், “நீ இன்னும் கருப்பு பெல்ட் வாங்குவதற்கு தகுதியுடையவன் ஆகவில்லை. ஒரு வருடம் கழித்து திரும்பி வா“ என்றார்.

 ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த இளைஞன் திரும்பவும் கருப்பு பெல்ட் பெறுவதற்காக வந்தான். இந்த முறையும் ஆசிரியர் அதே கேள்வியை திரும்பவும் கேட்டார். “இந்த கருப்பு பெல்டை வாங்குவதன் உண்மையான பொருள் என்ன?” . 

 “இது இந்த கலையின் சிறந்த சாதனைக்கான அடையாளம் “ என்று இளைஞன் பதில் கூறினான்.     

 ஆசிரியர் இப்போதும் திருப்தி அடையவில்லை. அவர் அந்த இளைஞனிடம் இருந்து கூடுதலான பதிலை எதிர்பார்த்தார்; அந்த இளைஞன் அமைதியாக இருந்தான்.

 “நீ இன்னும் கருப்பு பெல்ட் வாங்குவதற்கு தயாராக இல்லை. இப்போது போய் விட்டு அடுத்த வருடம் வா” என்று கூறி அந்த இளைஞனைத் திருப்பி விட்டார். 

 ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த இளைஞன் திரும்பவும் ஆசிரியர் முன் வந்தான். அந்த ஆசிரியர் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார்.   

 “ இந்த கருப்பு பெல்டை வாங்குவதன் உண்மையான பொருள் என்ன? “. 

 “ஒரு போதுமே முடிவுறாத ஒரு பயணத்தின் தொடக்கமே இந்த கருப்பு பெல்ட். ஒழுக்கம், கடின உழைப்பு, முன்னால் இருந்ததை விட மேலும் சிறந்ததாக ஆவதற்கு வலுயுறுத்துவது – ஆகிய மூன்றும் இதில் அடங்கியுள்ளன என்று முழு நம்பிக்கையுடன் இளைஞன் பதில் கூறினான்.

 இறுதியாக, ஆசிரியரின் கண்களின் பிரகாசம் தெரிந்தது; அவர் எதிர்பார்த்த பதிலை அந்த இளம் கலைஞரிடம் இருந்து பெற்று விட்டார். முகத்தில் புன் சிரிப்போடு ஆசிரியர் கூறினார்,“ மிகவும் சரியான பதில்! இப்போது கருப்பு பெல்டை வாங்குவதற்கு நீ தகுதியுடையவனாகி விட்டாய். இப்போது இந்த மதிப்பு மிக்க பரிசை எடுத்துக் கொண்டு, உன்னுடைய வேலையை நன்கு செய்வாயாக” என்று வாழ்த்தினார்.    

 நண்பர்களே, சில சமயங்களில் மிகப்பெரிய சாதனைக்குப் பிறகு, நாம் ஒரு சிறிய அளவு அகங்காரத்திற்கு ஆளாகி அமைதி அடைகிறோம். புகழ் அல்லது சாதனையின் உச்சியை சென்று அடைவது எளிது; ஆனால் அந்த வெற்றியில் நிலையாகத் தங்கி இருப்பது எளிதல்ல. இதற்குக் காரணம் அந்த அகங்காரம்தான். வெற்றியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்றால் கடின உழைப்பு மட்டும் போதாது. அத்துடன் ஒழுக்கம், உள்ளார்ந்த பணிவை வளரச் செய்தல், இதயத்தில் நன்றியுணர்வு இவையாவும் இன்றியமையாதவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...