முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சரியான தெரிவு

நம் அனைவருக்குமே, வாழ்க்கையில் சில சமயங்களில் மகிழ்ச்சி, மேலும் சில சமயங்களில் வருத்தம், சில நேரங்களில் கஷ்டங்கள், மேலும் சில நேரங்களில் அமைதி ……… இவை எல்லாம் போய்க் கொண்டே இருக்கும். ஆனால் எல்லா சூழ் நிலைகளிலும், நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது.  

  ஒரு இனிமையான காலைப் பொழுதில், ஒரு வயதான மனிதரும், அவரது பேரனும் ஒரு ஏரியின் அருகில் உட்கார்ந்து இருந்தார்கள். அவர்கள் இருவரும் பாசத்தோடு பேசிக் கொண்டு இருந்தார்கள். அந்த வயதான தாத்தா, சாதாரண உரையாடல் மூலமாக, தன்னுடைய பேரனுக்கு, வாழ்க்கையின் பாடத்தை கற்பித்துக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். மிக அன்போடு அந்தப் பேரன் தாத்தாவிடம், “தாத்தா, தயவு செய்து ஒரு கதை கூறுங்கள்”என்று கேட்டான். அந்த வயதான மனிதர் புன் சிரிப்போடு கூறினார், “ இன்று, என்னுடைய மனதில், ஒரு சிறிய கதை ஓடிக் கொண்டு இருக்கிறது. “  

 அந்தப் பேரன் மிகவும் ஆர்வத்தோடு கேட்டான், “அது என்ன? “பிறகு தாத்தா பதில் கூறினார், “ எனக்குள் ஒரு போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது”. 

   இரண்டு ஓநாய்களுக்கு இடையே…….. ஒரு கொடூரமான சண்டை ……. அந்தப் பேரன் கேட்டான், “தாத்தா, அது எந்த மாதிரியான சண்டை நடந்தது ?”

  பிறகு தாத்தா விளக்கினார், “ ஒரு ஓநாய் முழுவதுமாக தீமை, கோபம், வருத்தம், பேராசை மேலும் அகங்காரம் இவற்றால் நிறைந்திருந்தது. அடுத்த ஓநாய் நல்லவை, ஆனந்தம், அமைதி, அன்பு, இரக்கம் மேலும் பற்றுறுதி இவற்றால் நிறைந்திருந்தது. இவை இரண்டுக்கும் நடுவில் சண்டை நடந்து கொண்டே இருந்தது. “

  தாத்தா தொடர்ந்தார், “பேரனே, இந்த மாபெரும் யுத்தம் உன்னுள்ளேயும் போய்க் கொண்டு இருக்கிறது, மேலும் உலகத்தில் உள்ள அனைவருள்ளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது”. பிறகு அவர் சிறிது நேரம், அமைதியாக இருந்தார்.   
  திடீரென்று, அந்தப் பேரன் ஒன்றுமே அறியாதவனாக, மேலும் ஆர்வத்துடன், “தாத்தா, எந்த ஓநாய் யுத்தத்தில் வெற்றி பெற்றது?” என்றான்.    

 தாத்தா, புன் சிரிபோடு கூறினார், நாம் எதை ஊட்டி மேலும் எதை வளர்த்துக் கொண்டு இருக்கிறோமோ, அதுதான் வெற்றி பெறும், என் அன்புப் பேரனே. 

  நல்லது, தீயது என்ற இரண்டு ஓநாய்களில் நாம் எதை வளர்க்கிறோமோ அது வெற்றி பெறும். நாம் அனைவருமே வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளின் வழியாக போய்க் கொண்டு இருக்கிறோம். அப்போது நாம் எது நல்லது, எது கெட்டது, என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும், நாம் எந்த சூழ்நிலையை வளர்த்து, நமக்காக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை, முடிவாக நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...