முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நேர்த்தியான எலுமிச்சம்பழ பானம் தயாரித்தல்

என் வாழ்க்கையில் நான் முதன் முதலாக தயாரித்த எலுமிச்சம் பழ ஜுஸ் பற்றி நான் இப்போதும் முழுமையாக, தெளிவாக ஞாபகத்தில் வைத்து இருக்கிறேன்!     

  எவ்வளவு சாறு தேவையோ, அதே போல் 5 மடங்கு சாற்றினை தண்ணீரில் கலந்து விட்டேன். முடிவில் அது முழுவதுமாக வீணாகப் போய் விட்டது. ஆனால் எப்படியாவது அதை சரியாக்க வேண்டும் என முடிவெடுத்தேன்!    

  தண்ணீரில் இருந்து எப்படி எலுமிச்சம் பழச் சாற்றினை எடுத்து அந்த பானத்தை நேர்த்தியான சுவைக்குக் கொண்டு வருவது என விரும்பி முயன்றேன். ஆனால் ஐயோ, என்னால் முடியவே இல்லை …..சில விஷயங்களை எப்போதுமே செய்ய முடிவது இல்லை. சிலவற்றை ஒரு போதுமே மாற்ற முடியாது. தண்ணீரில் இருந்து அதிகப்படியான எலுமிச்சம்பழச் சாறை எடுப்பது பற்றி நான் சிந்திப்பதற்கான வழியே இல்லை.

  ஆகவே, இதற்கான தீர்வுதான் என்ன? இந்த ஜுஸை சம நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், அதனுடன் 5 கிளாஸ் தண்ணீரை சேர்த்து, அதிகப் படியான எலுமிச்சம்பழச் சாறை நீர்க்கும்படி செய்து, 5 கிளாஸ் எலுமிச்சம்பழச் சாறை புத்தம் புதியதாக கொண்டு வரலாம். இது ஒன்றுதான் சரியான வழி.

  மேலும் இது என்னை சிந்திக்க வைத்தது……… இந்த மாதிரியான நேரங்கள் வரும் போது, அப்போது நம்மால் சிலவற்றை பழைய நிலைக்கு கொண்டு வர முடியாமல் போகலாம், சிலவற்றை மாற்ற முடியாமல் போகலாம், அல்லது நமது வழிக்கு வரவைக்க முடியாமல் போகலாம். நாம் எவ்வளவுதான், முயற்சி செய்தாலும் பரவாயில்லை, நாம் எவ்வளவுதான் விரும்பினாலும் பரவாயில்லை. சில தவறான முடிவுகள், தவறான தெரிவுகள், தவறான முதலீடுகள், தவறான செயல்கள், தவறான தொடர்புகள், தவறான வார்த்தைகள் அல்லது தவறாக செய்து கொண்டு இருப்பவை என்று எப்போதும் அங்கே இருக்கத்தான் செய்யும்; நாம் மனிதர்களாக இருக்கிறோம், மேலும் தவறு செய்வது மனிதப் பண்பு!

 பிறகு அடுத்தது என்ன?

   சிலவற்றை மாற்ற முடியாத போது, முன்பு நடந்ததைப் பற்றியே புலம்பிக் கொண்டு இருப்பது பயனற்றது. இது தண்ணீரில் இருந்து எலுமிச்சம்பழச் சாறை எடுக்க முயன்றது போன்ற தோல்வியான முயற்சியாகும்! இந்த மாதிரியான நிகழ்வுகளில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அதை ஏற்றுக் கொண்டு அப்படியே சென்று கொண்டு இருக்க வேண்டும். பதிலாக, நாம் நம் வாழ்வில் மிக நல்ல செயல்களை செய்வதில் சுறுசுறுப்பாக ஈடுபடும் போது இந்த தவறான செயல்கள் முக்கியத்துவமற்றதாகப் போய்விடும்! நம்மிடம் அழகான எதிர்மறைகள் நமக்கே என உள்ளன. நம்மிடம் உள்ள குறைபாடுகளை நம்மால் இல்லாமல் ஆக்க முடிவதில்லை. ஆனால் ,
நம்மால் உறுதியாக நேர்மறைகளை நம் வாழ்வில் சேர்த்துக் கொள்ள முடியும். அதன் பிறகு நம்மையும், நம்மைச் சுற்றியும் உள்ள எதிர்மறைகளை நீர்த்துப் போகச் செய்ய முடியும்.  

  நாம் நமது வாழ்க்கையில், சாதாரண மனிதர்களுடனும், குழப்பமான மனிதர்களுடனும் பழகும் சந்தர்ப்பம் நமக்கு கிடைக்கிறது. நம்மை மாதிரியே அடுத்தவர்களையும் மாற்ற முயற்சி செய்வதில், நம் நேரத்தை வீணாக்கக் கூடாது பிறகு நாம் உணர்ச்சிகளுக்கு ஆளாகி நம் சக்தி முழுவதும் வீணாகிப் போய்விடும். இதற்குப் பதிலாக, நமக்கு நல்ல மதிப்பு உள்ளதையும், ஒளிமிக்க பாதையையும் காட்டும் மக்களை நோக்கி நம் கவனத்தை குவித்து, அவர்களுடன் நமது நேரத்தை அதிகமாக செலவிட வேண்டும்.  

  வாழ்க்கையில் எல்லாமே முழுமையாக, நேர்த்தியாக இருக்க முடியாது. அதைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டே, நம் சக்தியை வீணாக்குவதை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக நமது சக்தியை நம்புவதற்கு, உருவாக்குவதற்கு, பற்றுறுதியை வளர்ப்பதற்கு, ஒளிரச் செய்வதற்கு, வெளிப்படுத்துவதற்கு, மேலும் குணப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும்.

   நல்லவற்றை செய்து கொண்டு இருப்பதில் நாம் சுறுசுறுப்பாக இருப்போம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...