முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிகமுக்கியமான படிப்புகள்..!

தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப, நாமும் நம்மை அப்டேட் செய்து கொள்வது நல்லது. அப்போதுதான், முன்னேறி வரும் தொழில்நுட்ப உலகில் நமக்கான அங்கீகாரத்தை பெற முடியும். உதாரணத்திற்கு... 20 ஆண்டுகளுக்கு முன்பு, பணம் கொட்டும் ஐ டி துறை படிப்பாக இருந்த சி மற்றும் சி++ மென்பொருள் திறன்கள் இன்று, அடிப்படை படிப்புகளாக மாறிவிட்டன. அதேசமயம் 20 வருடங்களுக்கு முன்பு, ஐ டி துறையே அறிந்திராத ஏ ஐ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று ஐ டி துறையையும், ஒட்டுமொத்த தகவல் உலகையுமே ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்த முன்னேற்றம், சிலரது வேலைகளை பறித்துவிடுகிறது. பலருக்கும் புதுமையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. இத்தகைய போட்டி உலகில், உங்களை நிலைநிறுத்த எதிர்கால சிந்தனை அவசியம். குறிப்பாக, எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் தொழில்நுட்பங்களை கற்றறிந்து, அது சார்ந்த துறையில் முன்னேற வேண்டும். அப்போதுதான், வளமான எதிர்காலம் அமையும். அப்படி, எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் சில துறைகளை பற்றியும், அதில் இருக்கும் படிப்புகளை பற்றியும் அறிந்து கொள்வோம்.

ஏ ஐ செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பல்வேறு ஆச்சரியத்தக்க மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வடிவமைப்பில் தொடங்கி, உற்பத்தி தொழிற்சாலைகள், டிசைனிங் துறை, சினிமா துறை, தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் லைவ் வரை... எல்லா வேலைகளையும் எளிதாக்க, மனிதர்களை விட சிறப்பாக செய்து முடிக்க... ஏ ஐ தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. பல்வேறு பணிகளுக்கும் ஏ ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதால், பலரும் பணி பாதுகாப்பின்றி வெளியேற்றப்படும் சூழல் நிலவுகிறது.

இத்தகைய சூழலில் செயற்கை நுண்ணறிவு ஏ ஐ தொடர்பான கல்வி, வேலையை காப்பாற்றுவதோடு, வருமானத்தை பல மடங்கு பெருக்கவும் உதவி புரிகிறது. வழக்கமான பி டெக், எம் டெக், படிப்புகள் தவிர, செயற்கை நுண்ணறிவு குறித்து கற்பிக்கப்படும் படிப்புகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்த வழியாகும். அதாவது, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றுடன் கூடிய பி டெக், மற்றும் எம் டெக், படிப்புகள் மிகவும் சிறந்தது. இதையும் தாண்டி, தற்போது வேலையில் இருப்பவர்கள் செயற்கை நுண்ணறிவு குறித்து படிக்க விரும்பினால், தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் 5 செயற்கை நுண்ணறிவு சான்றிதழ் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துப் படிக்கலாம்.

1. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலின் அடித்தளம் (Foundation of Artificial Intelligence and Machine Learning)
2. இயந்திர கற்றல் மற்றும் AI-ல் முதுகலை பட்டயம் (PG Program in Machine Learning and AI)
3. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆழமான கற்றலில் முதுகலை பட்டயம் (Post Graduate Certificate Program in Artificial Intelligence and Deep Learning)
4. முழு அடுக்கு இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டம் (Full Stack Machine Learning and Artificial Intelligence Program)
5. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலில் முதுகலை பட்டயம் (Post Graduate Program in Artificial Intelligence and Machine Learning) தற்போதைய சூழலில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், டேட்டா சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் இருப்பதால், அதனுடன் செயற்கை நுண்ணறிவு படிப்பையும் படித்துக்கொண்டால், கண்டிப்பாக சம்பளம் பல மடங்கு உயருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

விண்வெளி அறிவியல்

ஏ ஐ தொழில்நுட்பம் போன்றே விண்வெளி அறிவியலும் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த இருக்கும் படிப்பாகும். ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்தல் ஆகியவற்றுக்கும் பயன்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சித்துறை மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு, வானவெளியில் நிலை நிறுத்தப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இத்துறையில் நல்ல வேலை வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.

அதனால் அது சம்பந்தமான படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது. மத்திய அரசின் விண்வெளித்துறையின் கீழ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு பல்வேறு பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன. விண்வெளித்துறை தொடர்பான படிப்புகளை மாணவர்கள் படிக்கலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் நடத்தப்படும் பாட பிரிவுகள்...

இளநிலை:

பி டெக் ஆவியானிக்ஸ்,
பி டெக் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் இரு பட்டங்கள்:
பி.டெக் படிப்புடன் (மாஸ்டர் ஆப் சயின்ஸ்/மாஸ்டர் ஆப் டெக்னாலஜி)

முதுகலை:

எம் டெக் ஏரோடைனமிக்ஸ் அண்ட் பிளைட் மெக்கானிக்ஸ்,
எம் டெக் ஸ்ட்ரக்சர் அண்ட் டிசைன்,
எம்.டெக் தெர்மல் அண்ட் புரோபெல்ஷன்,
எம் டெக் கண்ட்ரோல் சிஸ்டம்,
எம் டெக் டிஜிட்டல் சிக்னல் புராசசிங்,
எம் டெக் மைக்ரோவேவ் என்ஜினீயரிங்,
எம் டெக் பவர் எலெக்ட்ரானிக்ஸ்,
எம் டெக் எர்த் சிஸ்டம் சயின்ஸ்,
எம் டெக் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்,
எம் டெக் மெஷின் லேர்னிங் அண்ட் கம்யூட்டிங்...
இப்படி விண்வெளி தொடர்பான படிப்புகள் நிறைய இருக்கின்றன. இவற்றை படிப்பதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...