முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீவில் வசிக்கின்ற பருந்துகள்


  கடலின் நடுவில் இருக்கும் தீவு ஒன்றில், ஒரு முறை ஒரு கூட்டமாக பருந்துகள் வந்து சேர்ந்தன. அந்தக் கடலில் நிறைய மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்தன. இந்தக் காரணத்தால், அந்தப் பருந்துகளுக்கு உணவு, தண்ணீர் பற்றாக்குறை இல்லவே இல்லை. அந்தத் தீவில் பருந்துகளைத் தாக்கும் கொடூரமான வனவிலங்குகளும் இல்லை. இது அந்த பருந்துகளுக்கு மிகவும் சிறந்ததாக இருந்தது.    

   இந்த மாதிரியான வசதியான வாழ்க்கையை அந்தப் பருந்துகள் ஒரு போதும் இதற்கு முன்னால் வாழ்ந்தது இல்லை. எனவே பருந்துகள் மிகவும் மகிழ்ச்சியாக அங்கு இருந்தன. அந்தப் பருந்துக் கூட்டத்தில் அதிகமானவை இளம் பருந்துகள்தான். இந்த மாதிரியான ஒரு வசதியான வாழ்க்கையை நாம் எங்கு சென்றாலும், கண்டு பிடிக்க முடியாது. எனவே, நம் வாழ்க்கையின் மீதிப் பகுதியை இங்கேயே கழித்து விடுவோம் என்று அந்த இளம் பருந்துகள் நினைத்தன.    

   அந்தக் கூட்டத்தில் ஒரு வயதான பருந்து இருந்தது. அந்த இளம் பருந்துகளையும், அவர்கள் எண்ணத்தையும் அறிந்த போது, அந்த வயதான பருந்து வருத்தம் அடைந்தது. ஒரு நாள், அந்த வயதான பருந்து எல்லா இளம் பருந்துகளையும் அழைத்து, தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியது. “நாம் இந்த தீவுக்கு வந்து, வாழ்ந்து கொண்டு இருப்பது வெகு காலம் ஆகி விட்டது. நாம் எந்த காட்டில் இருந்து, வந்தோமோ, அதற்கே திரும்பப் போய்விடலாம் என்று நான் நினைக்கின்றேன். எந்தவிதமான சவால்களும் இல்லாமல் நாம் இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அப்படிப் பட்ட சூழ்நிலைகளில் நம்மால் கஷ்டத்தை ஒரு போதும் எதிர்கொள்ள முடியாமல் ஆகி விடும்.   

  அந்த வயதான பருந்து கூறிய வார்த்தைகளுக்கு அந்த இளம் பருந்துகள் செவி சாய்க்கவே இல்லை. வயதானதால், முட்டாள்தனமாக ஏதோ கூறுவதாக நினைத்துக் கொண்டன. வசதியான இந்த வாழ்க்கையை விட்டுவிடுவதற்கு அந்த இளம் பருந்துகள் மறுத்தன.  

  அந்த வயதான பருந்து அந்த இளம் பருந்துகள் அனைவரிடமும் விளக்கமாகக் கூற முயற்சி செய்தது, மேலும் கூறியது: “ நீங்கள் அனைவரும் நான் சொல்வதைக் கவனிக்கா விட்டால், நீங்கள் பறப்பதைக் கூட மறந்து விடுவீர்கள். ஏனெனில், நீங்கள் வசதியான வாழ்க்கைக்கு மாறிவிட்டீர்கள். அதற்கு பழக்கப்பட்டு விட்டீர்கள். சில சமயங்களில் உங்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் என்னுடன் வந்து விடுங்கள். “ ஆனால் யாருமே இதைக் கவனிக்கவே இல்லை. அந்த வயதான பருந்து தனியாகக் கிளம்பியது. மேலும், அந்த பழையக் காட்டிற்கு தன்னந்தனியாகவே திரும்பி வந்தது.  

    சில மாதங்கள் கடந்தன. அந்த தீவில் வாழும் பருந்துகளைப் போய்ப் பார்க்கலாம் என்று அந்த வயதான பருந்து நினைத்தது. அந்த இளம் பருந்துகள் வசித்துக் கொண்டு இருக்கும், அந்த தீவை அடைந்தது. அங்கு சென்றதும், முற்றிலும் மாறுபட்ட காட்சியை அந்த வயதான பருந்து பார்த்தது. பருந்துகளின் இறந்த உடல்கள் அங்கே எல்லா இடங்களிலும் சிதறிக் கிடந்தன. அவற்றின் நிறைய உடல்கள் இரத்தத்தால் சூழப்பட்டும், மேலும் நிறைய உடல்கள் காயம் அடைந்தும் கிடந்தன.   

  இதைப் பார்த்து அந்த வயதான பருந்து, அதிர்ச்சிக்கு உள்ளாகியது. காயம் அடைந்த ஒரு பருந்திடம் சென்று, “என்ன நடந்தது?” என்று விசாரித்தது. அந்தப் பருந்து, “நீங்கள் இங்கிருந்து போன பிறகு, நாங்கள் இந்த தீவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்தோம். ஆனால், ஒரு நாள் ஒரு கப்பல் இங்கு வந்தது. அந்தக் கப்பலில் இருந்து சிறுத்தைகள் இந்த தீவில் விடப்பட்டன. முதலில் சிறுத்தைகள் ஒன்றுமே செய்ய வில்லை. ஆனால் ஒரு சில நாட்கள் சென்ற பிறகு, நாங்கள் பறப்பதை மறந்து இருப்பதும், மேலும் எங்கள் நகங்கள் மிகவும் மெலிந்து இருப்பதையும் எங்களால் யாரையும் தாக்கவும் முடியாது மேலும் எங்களால் எங்களையே காப்பாற்றிக் கொள்ளவும் முடியாமல் இருப்பதையும் அந்த சிறுத்தைகள் உணர்ந்து கொண்டன. ஆகவே, அவைகள் எங்களை தாக்க ஆரம்பித்தன, எங்களை சாப்பிடத் தொடங்கின. அப்படி இருப்பதால், எங்களுக்கு இந்த நிலைமை வந்து விட்டது. நீங்கள் கூறியதை கவனிக்காமல் இருந்ததால், நாங்கள் இந்த கதிக்கு ஆளாகி விட்டோம்”என்று கூறியது.    

  இப்போதுள்ள கால கட்டத்தில், நாம் எப்போதும் வசதியான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டும், அதிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறோம். நமக்கும், நமது குடும்பத்திற்கும் வசதியான நிலையைக் கொடுக்க நாம் எல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால், நாம் ஒன்றைப் பற்றி, எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த வசதியான வாழ்க்கையிலேயே எப்போதும் தங்கி இருக்கும் நம் குடும்பத்தினருக்கு நாம் உண்மையில் அவர்களை, தயார் பண்ணி இருக்கின்றோமா? எதற்கென்றால், எதிர்காலத்தில் வரும் சவால்களை சமாளிக்க! இல்லை என்றால், வசதியான வாழ்க்கையால் அவர்களை வலுவிழக்கச் செய்து விட்டோமா?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அட்சய திருதியை 2024 - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

ஹரிஓம்  அட்சய திருதியை 2024: மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். அட்சய திருதியை -  வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை? அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்? மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம்.  12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்...  செய்ய வேண்டிய தானங்கள் மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும். ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும். கடகம்: நீர்மோர் த...

குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*      𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝟬𝟴, 𝐃𝐞𝐜. 𝟮𝟬𝟮𝟰 *╚════★🄲🅁🄺★════╝* *🔹🔸இன்றைய சிந்தனை..* *🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️* *🧿'' குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.* *🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️* . *🌹✍️* *♻️குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள், அவர்களுக்குச் சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.* *♻️குழந்தைகளைப் பெற்றுப் போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;* *♻️பெற்றக் குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழக் கற்றுத் தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும்.* *♻️ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞரின் வாழ்வில் நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்.* *♻️உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்யைப் பார்த்த அவரது தாயார் மிகவும் துடிதுடித்து விட்டார்..* *மிகுந்த வேதனையுடன் தன் மகனைப் பார்த்து,* *♻️'' யார் உன்னை இப்படிக் காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..* *♻️அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்...

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...