முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிகமுக்கியமான படிப்புகள்..!

தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப, நாமும் நம்மை அப்டேட் செய்து கொள்வது நல்லது. அப்போதுதான், முன்னேறி வரும் தொழில்நுட்ப உலகில் நமக்கான அங்கீகாரத்தை பெற முடியும். உதாரணத்திற்கு... 20 ஆண்டுகளுக்கு முன்பு, பணம் கொட்டும் ஐ டி துறை படிப்பாக இருந்த சி மற்றும் சி++ மென்பொருள் திறன்கள் இன்று, அடிப்படை படிப்புகளாக மாறிவிட்டன. அதேசமயம் 20 வருடங்களுக்கு முன்பு, ஐ டி துறையே அறிந்திராத ஏ ஐ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று ஐ டி துறையையும், ஒட்டுமொத்த தகவல் உலகையுமே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த முன்னேற்றம், சிலரது வேலைகளை பறித்துவிடுகிறது. பலருக்கும் புதுமையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. இத்தகைய போட்டி உலகில், உங்களை நிலைநிறுத்த எதிர்கால சிந்தனை அவசியம். குறிப்பாக, எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் தொழில்நுட்பங்களை கற்றறிந்து, அது சார்ந்த துறையில் முன்னேற வேண்டும். அப்போதுதான், வளமான எதிர்காலம் அமையும். அப்படி, எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கும் சில துறைகளை பற்றியும், அதில் இருக்கும் படிப்புகளை பற்றியும் அறிந்து கொள்வோம். ஏ ஐ செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ ஐ (A

தீவில் வசிக்கின்ற பருந்துகள்

  கடலின் நடுவில் இருக்கும் தீவு ஒன்றில், ஒரு முறை ஒரு கூட்டமாக பருந்துகள் வந்து சேர்ந்தன. அந்தக் கடலில் நிறைய மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்தன. இந்தக் காரணத்தால், அந்தப் பருந்துகளுக்கு உணவு, தண்ணீர் பற்றாக்குறை இல்லவே இல்லை. அந்தத் தீவில் பருந்துகளைத் தாக்கும் கொடூரமான வனவிலங்குகளும் இல்லை. இது அந்த பருந்துகளுக்கு மிகவும் சிறந்ததாக இருந்தது.        இந்த மாதிரியான வசதியான வாழ்க்கையை அந்தப் பருந்துகள் ஒரு போதும் இதற்கு முன்னால் வாழ்ந்தது இல்லை. எனவே பருந்துகள் மிகவும் மகிழ்ச்சியாக அங்கு இருந்தன. அந்தப் பருந்துக் கூட்டத்தில் அதிகமானவை இளம் பருந்துகள்தான். இந்த மாதிரியான ஒரு வசதியான வாழ்க்கையை நாம் எங்கு சென்றாலும், கண்டு பிடிக்க முடியாது. எனவே, நம் வாழ்க்கையின் மீதிப் பகுதியை இங்கேயே கழித்து விடுவோம் என்று அந்த இளம் பருந்துகள் நினைத்தன.        அந்தக் கூட்டத்தில் ஒரு வயதான பருந்து இருந்தது. அந்த இளம் பருந்துகளையும், அவர்கள் எண்ணத்தையும் அறிந்த போது, அந்த வயதான பருந்து வருத்தம் அடைந்தது. ஒரு நாள், அந்த வயதான பருந

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை

🙏மச்ச அவதாரம்: தாயின் வயிற்றிலிருந்து ரத்தமோடு ரத்தமாய் நீந்தி பிறப்பது...   🙏கூர்ம அவதாரம்: மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது...   🙏வராக அவதாரம்: ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது...   🙏நரசிம்ம அவதாரம்: எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது...   🙏வாமண அவதாரம்: ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது...   🙏பரசுராம அவதாரம்: வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது...   🙏ராம அவதாரம்: திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது...   🙏பலராம அவதாரம்: இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர் உலகோர்க்கு கடமையாற்றுவது...   🙏கிருஷ்ண அவதாரம்: முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது...   🙏கல்கி அவதாரம்: இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்  👏 தெரிந்தவர்கள் அமைதியாய் இர

சரியான தெரிவு

நம் அனைவருக்குமே, வாழ்க்கையில் சில சமயங்களில் மகிழ்ச்சி, மேலும் சில சமயங்களில் வருத்தம், சில நேரங்களில் கஷ்டங்கள், மேலும் சில நேரங்களில் அமைதி ……… இவை எல்லாம் போய்க் கொண்டே இருக்கும். ஆனால் எல்லா சூழ் நிலைகளிலும், நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது.     ஒரு இனிமையான காலைப் பொழுதில், ஒரு வயதான மனிதரும், அவரது பேரனும் ஒரு ஏரியின் அருகில் உட்கார்ந்து இருந்தார்கள். அவர்கள் இருவரும் பாசத்தோடு பேசிக் கொண்டு இருந்தார்கள். அந்த வயதான தாத்தா, சாதாரண உரையாடல் மூலமாக, தன்னுடைய பேரனுக்கு, வாழ்க்கையின் பாடத்தை கற்பித்துக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். மிக அன்போடு அந்தப் பேரன் தாத்தாவிடம், “தாத்தா, தயவு செய்து ஒரு கதை கூறுங்கள்”என்று கேட்டான். அந்த வயதான மனிதர் புன் சிரிப்போடு கூறினார், “ இன்று, என்னுடைய மனதில், ஒரு சிறிய கதை ஓடிக் கொண்டு இருக்கிறது. “    அந்தப் பேரன் மிகவும் ஆர்வத்தோடு கேட்டான், “அது என்ன? “பிறகு தாத்தா பதில் கூறினார், “ எனக்குள் ஒரு போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது”.     இரண்டு ஓநாய்களுக்கு இடையே…

வெற்றிலை மாலை சாற்றினால்

 எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்..... வெற்றிலையின் மகிமை : வெற்றிலை என்பது இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமான மங்கள பொருளாகும். சுப நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, அசுப நிகழ்ச்சிகளிலும் கூட வெற்றிலை, பாக்கு சேர்ந்த தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. கோவில்களில் சுவாமிக்கு அத்தனை நைவேத்தியங்கள், பழங்கள் படைத்தாலும், கடைசியாக வெற்றிலை தாம்பூலம் சமர்பித்த பிறகு தான் தீபாராதனை காட்டுவார்கள். தடபுடலாக விருந்திற்கு பிறகு வெற்றிலை பாக்கு போட்டால் மனம் மகிழ்ச்சி அடையும் என்பது ஐதீகம். அதனால் சுவாமியின் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக கடைசியாக தாம்பூலம் சமர்பிக்கும் வழக்கம் உள்ளது. தாம்பூலம் மங்களத்தின் அடையாளமாகும். வெற்றிலை என்பது மகாலட்சுமியின் சொரூபம். இது வெற்றியை தரக் கூடிய பொருளாகும். எந்த தெய்வத்திற்கு வெற்றிலை மாலை ஏற்றது? எந்த தெய்வத்திற்கு வெற்றிலை மாலை ஏற்றது? கோவில்களில் சுவாமிக்கு வெற்றிலை மாலை சாற்றுவதை பார்த்திக்கிறோம். பலரும் பரிகாரமாக வெற்றிலை மாலை சாற்றுவது உண்டு. ஆனால் முதலில் எந்தெந்த கடவுள்களுக்கு வெற்றிலை மாலை சாற்ற வேண்டும்,

ஆடி ஒன்று

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதம் 2024 :-* *வருகின்ற 17-07-2024 புதன்கிழமை* *ஆடி மாதம் பிறக்கின்றது* *ஆடி மாதம் என்றாலே...* *"உலகை ஆளும் ஆதிபராசக்தி அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு தெய்வீக மாதம்"* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷         *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘* *ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், மேலும் சிறப்பு பூஜைகள் ஊர் முழுவதும் களைகட்டும்....* *ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஆடி மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன...* 💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷 தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது... தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும்.  இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது. 🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️ *ஆடி மாதத்தில்தான் விரத

ஒரு நேர்த்தியான எலுமிச்சம்பழ பானம் தயாரித்தல்

என் வாழ்க்கையில் நான் முதன் முதலாக தயாரித்த எலுமிச்சம் பழ ஜுஸ் பற்றி நான் இப்போதும் முழுமையாக, தெளிவாக ஞாபகத்தில் வைத்து இருக்கிறேன்!        எவ்வளவு சாறு தேவையோ, அதே போல் 5 மடங்கு சாற்றினை தண்ணீரில் கலந்து விட்டேன். முடிவில் அது முழுவதுமாக வீணாகப் போய் விட்டது. ஆனால் எப்படியாவது அதை சரியாக்க வேண்டும் என முடிவெடுத்தேன்!       தண்ணீரில் இருந்து எப்படி எலுமிச்சம் பழச் சாற்றினை எடுத்து அந்த பானத்தை நேர்த்தியான சுவைக்குக் கொண்டு வருவது என விரும்பி முயன்றேன். ஆனால் ஐயோ, என்னால் முடியவே இல்லை …..சில விஷயங்களை எப்போதுமே செய்ய முடிவது இல்லை. சிலவற்றை ஒரு போதுமே மாற்ற முடியாது. தண்ணீரில் இருந்து அதிகப்படியான எலுமிச்சம்பழச் சாறை எடுப்பது பற்றி நான் சிந்திப்பதற்கான வழியே இல்லை.   ஆகவே, இதற்கான தீர்வுதான் என்ன? இந்த ஜுஸை சம நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், அதனுடன் 5 கிளாஸ் தண்ணீரை சேர்த்து, அதிகப் படியான எலுமிச்சம்பழச் சாறை நீர்க்கும்படி செய்து, 5 கிளாஸ் எலுமிச்சம்பழச் சாறை புத்தம் புதியதாக கொண்டு வரலாம். இது ஒன்றுதான் சரியான வழி.   மேலும் இ

சிதம்பரம் நடராஜர்

** இந்த உலகத்தின் ஒட்டு மொத்த மையப்புள்ளி அமைத்திருக்கும் இடமாக, தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையை கண்டு, இன்றைய நவீன விஞ்ஞான உலகம் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளது. சிதம்பரம் நடராஜர்கோவில், இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற் கூறுடன் பொருத்துவதும் அதிசயமே, ஆகவே தான் நம்மை, அங்கு சென்று வழிபட வைத்து, உலகத்தின் காந்தசக்திக்கு கட்டுப்பட்டு, நோயின்றி வாழ, நம் முன்னோர் வழிகாட்டியுள்ளனர் இக்கோவிலின் அற்புதங்களும், ரகசியங்களும், ஆச்சர்யங்களும் ஏராளம் இன்னும், மனித ஆற்றலினால் கண்டுபிடிக்க இயலாத, பேருண்மைகள் இக்கோவிலின் அமைப்பில் புதைந்துபோய் உள்ளன. *சிதம்பரம் நடராஜர் தெரிந்ததும் தெரியாததும்*    சர்வதேச ஆன்மிக அமைப்புகள், கடந்த எட்டு ஆண்டுகளாக, சில கோடி டாலர்கள் செலவு செய்து,தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால்பெருவிரலில்தான், மொத்தபூமியின் காந்தமையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளன.  இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிந்து, இக்கோவிலை, நம் முன்னோர் கட்டினர் அவர்கள், ஆன்மிகத்தின் உள் அறிவியலை நவீன ஆய்வகங்கள், விலை உயர்ந்த

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர்கள் பெருமைக்குறியவர்களே! மகிழ்ச்சி! Today is Tirunelveli ‘s 226 year anniversary. In the year 1790 the British created Tirunelveli.  Thiru- Respect  Nel- Rice grain  Veli- Security  இன்று.... திருநெல்வேலி நகரத்தின் 226 வது மலர்ந்த தினம். 1790ம் ஆண்டு இதே நாளில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது தான் திருநெல்வேலி. திரு=மதிப்பு  நெல்=உணவு வேலி=பாதுகாப்பு *திருநெல்வேலி* பிரசித்தம் பெற்றது; ஏன் தெரியுமா? 10 சிறப்பம்சங்களை கொண்டது. 1) முதல் ஈரடுக்கு மேம்பாலம் பெற்ற *இந்திய நகரம்* 2) தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிவதலம் பெற்ற நகரம். 3) தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேரை கொண்ட மாநகரம். 4) நான்கு ரத வீதிகளில் இருந்து வளர ஆரம்பித்த நகரம். 5) ஐந்து வகையான *நிலங்கள்* பெற்ற தமிழகத்தின் ஒரே மாவட்டத்தின் தலைநகரம். 6) தமிழ்நாட்டின் ஆறாவது மிகப் பெரிய நகரம். 7) சரிகமபதநிச என்ற ஏழு ஸ்வரங்கள் பாடும் இசைத்தூண்களை கொண்ட ஒரே நகரம். தினசரி எட்டு லட்சம் மக்களால் இயங்கிக் கொண்டிருக்கும் பெருநகரம். 9) ஒன்பது கி.மீ சுற்றளவு கொண்ட மாநகரம். 10)

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது

*ப்ளீஸ்*  என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..  ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!  கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..  இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..*  *எப்ப பாரு என்ன டிவி?*  *புக் எடுத்து படி...* *வீட்டு வேலை செய்*, கல்யாணம் பண்ணி போற இடத்துல என

நம்பிக்கை மற்றும் பற்றுறுதி

 நம்பிக்கை மற்றும் பற்றுறுதி இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம்:    இந்த உலகமே பற்றுறுதியின் அடிப்படையில்தான் இருக்கிறது. இந்தப் பழமொழியை நாம் அனைவருமே கேட்டு இருப்போம், ஆனால் நாம் இந்த சிறிய கதையின் மூலமாக, பற்றுறுதியின் உண்மையான மற்றும் பொருத்தமான எடுத்துக் காட்டைப் புரிய முயற்சி செய்கிறோம்.       ஒரு முறை, தெருக் கூத்து ஒன்றில், இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடங்களின் இடையில் கட்டப்பட்டு இருக்கும் ஒரு கயிற்றின் மேல், கையில் ஒரு நீளமான ஒரு மூங்கில் கம்புடன், ஒரு கழைக் கூத்தாடி நடந்து கொண்டு இருந்தார். அவருடைய மகனையும் கூட தோள்களில் சுமந்து கொண்டிருந்தார். நூறு மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ச்சியோடு இதைக் கவனித்துக் கொண்டு இருந்தனர். தன்னுடைய மற்றும் தன் மகன் உயிரையும் பணயம் வைத்து கடுமையான காற்றோடு போராடிக் கொண்டு, நிலையான அடிகளை எடுத்து வைத்து, அந்தக் கழைக் கூத்தாடி அந்த தூரத்தைக் கடந்து கொண்டிருந்தார்.   அவர் கடந்து முடிந்ததும், அந்தக் கூட்டம் மகிழ்ச்சியாலும், ஆச்சரியத்தாலும் குதித்தது. அங்கு நிறைய கை தட்டல்களும், விசில் சத்தங்களும் இருந்