முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேறு பட்ட கண்ணோட்டம்

ஒரு ஏழை மனிதன் தன்னுடைய குடும்பத்தினருக்காக, கடினமான முயற்சி எடுத்து ஒரு வீட்டைக் கட்டினான். ஒவ்வொரு ரூபாயாக சிறுகச் சிறுக சேர்த்து, 20 வருடங்களுக்குப் பிறகு வீட்டைக் கட்டி முடிக்கிறான். எனவே, அவரது குடும்பம் அந்த குடிசையில் இருந்து வெளியேறி பெரிய வீட்டில் குடியேறி மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள்.         இறுதியாக ஒரு நாள் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு தயார் ஆனது. எல்லோரும் சேர்ந்து ஆலோசித்து, ஒரு விஷேசமான நாளை, புதுமனை புகுவிழாவிற்காக முடிவு செய்தார்கள்.        ஆனால், விழாவுக்கு 2 நாட்களுக்கும் முன்னால், ஏற்பட்ட நில நடுக்கத்தால், அந்த வீடு முழுவதுமாக இடிந்து விழுந்து போய் விட்டது.        இந்த சம்பவத்தைப் பற்றி தெரிந்தவுடன், அந்த ஏழை மனிதர் மார்க்கெட்டுக்கு ஓடிச் சென்று இனிப்புகள் வாங்கி வந்தார். வீடு இடிந்து கிடந்த இடத்திற்கு இனிப்புகளோடு சென்றார். அங்கு நிறைய பேர் திரண்டு நின்று, அவர்களது வருத்தத்தை வெளிப்படுத்திக் கொண்டு நின்றனர். இந்த சம்பவம் நடந்ததற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.        “ஓ, இந்த ஏழை மனிதருக்கு இப்பட

தமிழ்நாடு அரசின் வீடு கட்ட புதிய விதிகள்

Click here to Download the File 

கடவுளின் மீதுள்ள நம்பிக்கை

ஒரு மனிதன் தன் மகனுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தான். அவர்கள் இருவரும் சமுத்திரத்தில், ஒரு படகில் பயணம் செய்து கொண்டு இருந்தனர். திடீரென்று மிகப்பெரிய புயல் ஒன்று வந்தது. அந்த மனிதர் ஒரு போர் வீரர். அவர் அப்படியே அமைதியாக இருந்தார். ஆனால் அவரது மகனோ, மிகவும் பயந்து போய்விட்டார். கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்து விட்டவர் போல தோற்றமளித்தார்.அவர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்த படகு மிகவும் சிறியது; மேலும் அந்தப் புயல் உண்மையிலேயே வலிமையுடையதாக இருந்தது. எந்தக் கணத்திலும் அவர்கள் புயலில் மூழ்கி விடுவதற்கான வாய்ப்பில் இருந்தார்கள்.      .அதிகமான அளவில் மகன் பயந்து கொண்டு இருக்கும் போது, அவனது அப்பா அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். எதுவுமே நடக்காதது போல, முழுவதுமாக அமைதியோடு சலனமற்று இருந்தார்.       அந்த நடுங்கிக் பயத்தால் நடுங்கிக் கொண்டே அப்பாவைப் பார்த்து,  “நீங்கள் பயப்படவில்லையா ? நமது வாழ்க்கையின் கடைசி நேரம் இதுவாகத்தான் இருக்கும்.        நாம் இருவரும் கரையை சென்று அடைவோம் என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு அதிசயம் இந்தக் கணத்தில் ந

எஜமானருடைய ஸ்கூட்டர்

பிரவீன் பார்த்தி ஒரு ஆசிரியர். அவர் வழக்கமாக ஆரம்பப் பள்ளி வகுப்புக் குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பவர். அவரது கிராமத்திலிருந்து அவரது பள்ளிக் கூடம் 7 கி.மீ. தொலைவில் இருந்தது. அந்தப் பள்ளிக் கூடத்தைச் சுற்றிலும் முழுவதுமே ஒன்றும் கிடையாது. மரம், தாவரம், செடி, கொடி, புல் பூண்டு எதுவுமே இல்லாமல் ஒரு பாலைவனம் போல தோற்றம் அளிக்கும்.       அவரது கிராமத்தில் இருந்து பள்ளியை சென்று அடைவதற்கு எப்போதாவது போக்குவரத்து வசதி கிடைக்கும். எனவே, அவர் அடிக்கடி வழக்கமாக யாரிடமாவது ‘லிப்ட்’ கேட்டுச் செல்வார். லிப்ட் கிடைக்காத அந்த நாட்களில் எல்லாம் அவர் நடந்தே செல்வார். நமக்குக் கடவுள் கொடுத்த இரண்டு கால்கள் இருக்கின்றன. எப்போது அது தேவையோ அதைப் பயன்படுத்தச் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டே நடந்து செல்வார்.        ஒவ்வொரு நாளும் லிப்டுக்காக காத்திருக்கும் போது, அவர் வழக்கமாக நினைப்பது உண்டு, “ஏன் இந்த அரசாங்கம் ஆட்களே வசிக்காத ஒரு பகுதியில், பள்ளிக் கூடத்தை திறந்து இருக்கிறார்கள்?       என்னுடைய கிராமத்தில் நான் ஒரு பலசரக்குக

இருளில் ஒரு விருந்து

தயவு செய்து இந்த உண்மையான கதை முழுவதையும் இன்று நீங்கள் கண்களை மூடுவதற்கு முன்பாகவும், நாளை அதனை திறப்பதற்கு முன்பாகவும் வாசித்து விடுங்கள். யாரோ ஒருவருடைய அதிசயமான அனுபவம் இங்கே பகிர்ந்து கொள்ளப் பட்டது.    பார்வை இழந்தோர் மையத்தில் நடக்கும், பார்வை இழந்தோரின் நன்மைக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளச் சென்றேன்.   வழக்கம் போல, அந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலையில் நடப்பதாக இருந்த காரணத்தால், நான் முதலில் அந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என நினைத்தேன். இது போரடிக்கும் நிகழ்ச்சியாக இருக்கக் கூடும் என்பதால், நான் அன்று மாலைப் பொழுதை உற்சாகமாக வேறு விதமாக செலவிடலாம் என்று நினைத்தேன்.   தனியாக இருப்பதாலும், நேரத்தை எப்படி செலவழிப்பது என தெரியாததாலும் முடிவாக இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்கு செல்வதற்காக ஆன்லனில் புக் பண்ணி, ரிஜிஸ்டர் செய்தேன்.    நான் அங்கு சென்ற போது, ஏறக்குறைய 40 பேர் இருந்தனர். முதன் முதலில், எங்களுக்கு ஒரு வீடியோ காண்பிக்கப்பட்டது. அது அந்த மையத்தைப் பற்றியது. 15 நிமிட வீடியோ அது. அது மிகவும் ஈர்க்கும்படியாக இருந்தது. பலதரப்பட்ட மக்கள் அங்கு வந

சூஃபி ஞானியின் பிரார்த்தனையும் சீடரின் கேள்வியும்

முன்னொரு காலத்தில் சூஃபி மறைஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வழக்கமாக தன் பிரார்த்தனையை இப்படி செய்வார் –“கடவுளே, நீ எனக்கு செய்யும் அனைத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் செய்யும் நன்மைகளை என்னால் எப்போதாவது திருப்பிக் கொடுக்க முடியுமா? நான் நன்றியுணர்வை மிகவும் உணர்கிறேன்”.      ஒரு முறை அவர் வெகு தூரம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து மூன்று நாட்களாக அங்கிருந்த மக்கள் இவருக்கு தங்க இடம் கொடுக்க மறுத்தனர். இவர் நல்ல மனிதர் என அவர்கள் நம்பவும் மறுத்தனர். அவருக்கு உணவும், தண்ணீரும் கூட கொடுக்க மறுத்தனர். அந்த மூன்று நாட்கள் முழுவதும் பசியோடும், தாகத்தோடும் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்.      மூன்று நாட்களாக பசியும், தாகமும் வாட்டிய போதும் கூட பிரார்த்தனையைத் தொடர்ந்தார். அவர் இரவில்,“ கடவுளே நன்றி ! என்னால் எப்படித் திருப்பிக் கொடுக்க முடியும் ? நான், நன்றியுணர்வை மிகவும் உணர்கிறேன்.”      அவருடன் பயணம் செய்த சீடர்களில் ஒருவர், இவர் இவ்வாறு பிரார்த்தனை செய்வதை பார்த்து விட்டு, குருவே, தயவு செய்து நான் சிறிது பேசலாமா? என்றார். நீங்கள் எதற்காக நன

தமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம்

தமிழ் மகத்துவம் ⭐தமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம்⭐ 😌 ஓர் சுருக்கமான பதிவு 👉👉தமிழில் மொத்தம் எழுத்துக்கள் 247 உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18 உயிர் மெய் எழுத்துக்கள் 216 ஆய்த எழுத்து 1 🌹உயிர் எழுத்துக்கள் என்பது உயிரின் உற்பத்தி சக்தியை அதிகபடுத்தும். ☘மெய் எழுத்துக்கள் என்பது மனதை அறிய கூடிய மற்றும் வலுப்படுத்தும் சக்தியாக உள்ளது. 🔥உயிர் மெய் எழுத்துக்கள் என்பது உடலையும் மனதையும் சேர்த்து இறைவனை அறிய கூடிய செயலை காட்டும். 👉ஓம் என்பதில் உள்ள அ உ ம் என்பது என்ன என்ன எழுத்துகள் உள்ளன கவனிக்க 👉நாம் பேசும் தமிழ் தானாக வரவில்லை மூன்று நபர்களின் கண்டுபிடிப்பால் வந்தது அதாவது சிவன்,முருகன்,அகத்தியர் கொண்டு உருவாக்கபட்டது 🔥சிவனால் முருகனுக்கு கொடுக்கப்பட்ட பணி தமிழ் மொழியை உருவாக்குவது ☀முருக பெருமான் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து உருவாக்கியுள்ளார். 👉ஆனால் அதில் வரைமுறை இல்லாமல் இருந்தது அதை சரி செய்ய அப்பணி மீண்டும் அகத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது. 👳அகத்தியர் அதை இலக்கணம் செய்து வெளியிட்டார். 👉இப்போது தமிழ் எழுத்துக்கு வருவோம் 🌞மானிடர் நாள் முழுதும் சுவா

கண்ணாடி - உண்மையான அழகு

ஒரு காலத்தில் ஒரு பயணி, பயணம் செய்த களைப்பால் ஓய்வெடுக்க விரும்பினார். சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்கு தகுந்த ஒரு இடத்தை பார்த்துத் தேடிக் கொண்டு இருந்தார்.  திடீரென்று அவர் கண்களுக்கு ஒரு ‘ஆஷ்ரமம்’ தென்பட்டது. அது மிகச் சிறந்த தத்துவ ஞானியான சாக்ரடீஸின் ஆஷ்ரமம் ஆகும். மிகவும் நல்லது. நான் இங்கு சில நாட்கள் தங்குவதற்கும், உள்ளார்ந்த சிந்தனைகளையும், பேருரைகளையும் கவனித்துக் கேட்பதற்கும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார்.   இந்த எண்ணத்தோடு அவர் சாக்ரடீஸை சென்று பார்த்தார். அவர் அங்கு தங்குவதற்கு சாக்ரடீஸ் உடனே சம்மதித்தார். அவர் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அவரது சொந்த அறைக்கு எதிர் பக்கத்தில் இருந்த அறையை அந்த பயணி தங்குவதற்குக் கொடுத்தார்.       ஒரு நாள் அந்தப் பயணி அவர் அறையில் இருந்து வெளியே வரும்போது, எதிர் அறையில் சாக்ரடீஸ் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அதற்கு மிகுந்த கவனமும் கொடுக்கவில்லை.அதைப் பார்த்ததற்காக எந்த வித முக்கியத்துவமும் கொடுக்காமல் தன் வேலையை தொடர்ந்தார்.    ஆனால், இதே நிகழ்ச்சி இரண்டாவது

அறிவுரைகளால் என்ன பயன்..??

  துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்.. பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்.. இளைஞன் ஒருவன் வந்தான் சாமி எனக்கு ஒரு சந்தேகம்.. உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். *༺🌷༻* ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான்.. உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்..?? என்று கேட்டான்.. துறவி அவனிடம் சொன்னார்.. தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய்.. *༺🌷༻* ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை.. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும்.. தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார். *༺🌷༻* மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.. அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான். இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து

நிர்ஜல ஏகாதசி 18.06.2024

'ஜேஷ்ட மாதம்', வளர்பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே பாண்டவ நிர்ஜல ஏகாதசி என்றும் நிர்ஜல ஏகாதசி என்றும் சொல்லப்படுகிறது. நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த புராணம்' விவரித்துள்ளது. ஸ்ரீ வியாஸதேவரிடம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் பார்ப்போம்.ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன், தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேகத்தைக் கேட்டார்... ’’ரிஷிகளில் சிறந்த எமது பாட்டனாரே. வெகு நாட்களாக என் மனதில் இருக்கும் ஐயத்தைத் தீர்த்து வைக்க வேண்டுகிறேன். எமது தாய் குந்தி தேவி, எனது உடன்பிறந்தவர்கள் யுதிஷ்டிரர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மற்றும் பாஞ்சாலி இவர்கள் அனைவரும் பிரதி ஏகாதசி தோறும் விரதம் இருக்கின்றனர். ஏகாதசி விரதத்தை முறையாகக் கடைபிடித்து பகவான் கிருஷ்ண பரமாத்மாவை மகிழ்வித்து அவரது ஆசிர்வாதத்திற்கு உரியவர்கள் ஆகின்றனர். மேலும், என்னையும் ஏகா

வித்தியாசமான கொண்டாட்டம்

 அன்று ஒரு நாள் காலை ஆறு மணி. வரப்போகின்ற தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பற்றி நான் கனவு கண்டு கொண்டு இருந்தேன். உடனே என் அம்மா,“மனன், எழுந்திரு “என அழைத்தாள். வேண்டா வெறுப்பாக எழுந்து, பள்ளிக்குச் செல்லத் தயாரானேன்.        நண்பர்களே, மேலும் தொடர்வதற்கு முன்னால், என்னை நானே அறிமுகப்படுத்திக் கொள்கின்றேன். என்னுடைய பெயர் மனன். நான் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறேன். இதுதான் என்னைப் பற்றிய கதை!       எல்லா பண்டிகை விழாக்களிலும், எனக்கு மிகவும் விருப்பமானது தீபாவளிப் பண்டிகைதான். ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? தீபாவளி விழாவில்தான் தீபங்கள், புதிய உடைகள், பட்டாசுகள், வெடிகள், தின்பதற்கு இனிப்பான பலகாரங்கள் மற்றும் விடுமுறை இவை அனைத்தும் கிடைக்கின்றன.      நான் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டு இருக்கும் போது, அப்பா என்னை அழைத்து, “ மனன்! இன்று உனக்கு புதிய உடை வாங்கப் போகலாமா?” என்று கேட்டார்.    “சபாஷ்!! “ நான் மகிழ்ச்சியோடு கத்தினேன். ஆகட்டும் அப்பா! என்ன வாங்க வேண்டும் என்பதை ஏற்கனவே நான் முடிவு செய்து விட்டேன்.   குதூகலமான உணர்வோடு நான் பள்ளி வாகனத்தில் ஏற

மனம் குவித்து செய்கின்ற வேலை மிகச் சிறந்த முடிவுக்குக் கொண்டு செல்கிறது

 இங்கிலாந்து நாட்டின் வரலாற்றில் ஆல்பர்ட் ஒரு புகழ் பெற்ற அரசராக இருந்தார். அவர் தன் நாட்டு மக்களின் நன்மைக்காக, மிகச் சிறந்த நலத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். இதனால் அவர் “மகா ஆல்பர்ட் *(Alfred the Great )”* என்றும் அழைக்கப்பட்டார்.   ஆரம்ப காலத்தில், சாதாரணமான எல்லா அரசர்களையும் போல, ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை மேற்கொண்டார். குருட்டுத் தனமான மனப்போக்குடன், அது நல்லதா அல்லது கெட்டதா என ஆராய்ந்து பார்க்காமல், தன் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அதன் படியே, நடக்கலானார். அவரது வாழ்க்கை சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், மேலும் களியாட்டங்களில் ஈடுபடுவதிலும் மூழ்கித் திளைத்தது.   சமுத்திரத்தில் விழுந்த ஒரு வைக்கோல் குச்சி மேலே எழும்பியும், கீழே விழுந்தும் அலைகளால் அடித்துச் செல்லப்படுவதைப் போல, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கையை மேற்கொண்டார். இறுதியில் அது அவரை ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது. பொறுப்பில்லாத இவரது வாழ்க்கை எதிரிகளுக்கு பயன் தருவதாக அமைந்தது. பகைவர்களால் இவரது ராஜ்ஜியம் கைப்பற்றப் பட்டு, இவர் அரச பதவியை இழந்தார்.     இங்கும் அங்குமாக அலைந்து கொண்டு போராடிக் கொ

மறைந்திருக்கும் குணங்களின் முக்கியத்துவம்

  ஒரு வசந்த காலத்தில், காட்டின் நடுவில் இருந்த ஒரு ரோஜா செடி தன்னுடைய அழகான மலர்களின் பெருமையை பெரிதாக கூறிக் கொண்டு நின்றது. அதன் அருகில் நின்ற சில பைன் மரங்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தன. ஒரு பைன் மரம் ரோஜாவைப் பார்த்துக் கொண்டு,“ ரோஜா செடியில் எவ்வளவு அழகான மலர்கள் இருக்கின்றன. நான் வருத்தம் அடைகிறேன். நான் அதைப் போல அழகாக இல்லை” என்று கூறியது.    “நண்பனே, வருத்தப்படுவதற்கு இங்கே ஏதுமே இல்லை. எல்லோரிடமும் எல்லாமே இருப்பது இல்லை “மற்றொரு பைன் மரம் இந்த மரத்திற்கு விடை கூறியது.       இந்த இரண்டு மரங்களும் பேசுவதைக் கேட்ட ரோஜாவுக்கு தன்னுடைய அழகைப் பற்றி மிகவும் கர்வம் ஏற்பட்டது. “ நான் தான் இந்தக் காட்டிலேயே மிகவும் அழகானவள் “ என்று கூறியது.   அந்த சூரிய காந்திப் பூ ரோஜாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. “நீ எப்படி அதைக் கூறலாம்? இந்த காட்டில் எண்ணற்ற அழகான மலர்கள் இருக்கின்றன. அதில் நீயும் ஒருத்தி. அவ்வளவுதான். “ என்றது.   “ஆனால், என்னைப் பார்த்தவுடனேயே எல்லோரும் என்னை விரும்ப ஆரம்பிக்கிறார்கள் “ என்று ரோஜா கூறியது. “அந்தக் கள்

சந்தனக் கட்டையும் கரியும்

ஒரு முறை அரசர் ஒருவர் வேட்டையாட சென்றார்; அதில் மிகவும் மூழ்கியதால், காட்டில் வெகு தூரம் வரைக்கும் சென்று விட்டார். அவருக்கு மிகவும் தாகம் எடுத்தது. தண்ணீரைத் தேடிப்பார்க்கும் போது, ஒரு மரம் வெட்டுபவரை சந்திக்க நேர்ந்தது. அவர் மரத்தில் இருந்து கரி தயார் செய்து கொண்டிருந்தார். அரசர், அவரிடம் சென்று தண்ணீர் கேட்டார். அவரிடம் ஒரே ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் இருந்தது என்றாலும், அதை மகிழ்ச்சியோடு அரசருக்குக் கொடுத்தார்.   அரசர் மரம் வெட்டுபவரின் மீது முழுவதுமாக திருப்தி அடைந்தார். ஏனென்றால், அரசர் தாகத்தால் மிகவும் தவித்த நேரத்தில் தண்ணீர் கொடுத்து உதவினார் அந்த மரம் வெட்டுபவர். அரசர் அவரிடம்,“ ஓ இரக்கமான மனிதரே! நீங்கள் என் அரண்மனைக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். உங்களுக்கு நான் ஒரு வெகுமதி கொடுப்பேன்” என்றார். அந்த மரம் வெட்டுபவரும் அரசரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.    இந்த சம்பவம் நடந்த சில காலத்திற்கு பிறகு, அந்த மரம் வெட்டுபவர் ஒரு நாள் அரண்மனைக்குச் சென்றார். தன்னைத்தானே அரசரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார். “நீங்கள் காட்டில் தாகத்துக்காக தண்ணீர் தேடும் போத

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கதை

ஐன்ஸ்டீனின் "சார்பியல் கோட்பாடு" மிகவும் புகழ் வாய்ந்தது. அப்போது, இந்த கோட்பாட்டைப் பற்றி விளக்கம் தருவதற்காக, அவரை ஒவ்வொரு இடமாக வருவதற்கு அழைப்பு விடுத்தனர். வழக்கமாக, ஐன்ஸ்டீன் காரில்தான் செல்வார். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அவரது டிரைவரும் கூடவே செல்வார். ஐன்ஸ்டீனின் விளக்கக் கூட்டங்கள் நடக்கும் போது, டிரைவர் கடைசி வரிசையில், வழக்கமாக உட்கார்ந்து இருப்பார்.    ஒரு விளக்கக் கூட்டத்திற்காக ஒரு நாள் காரில் போய்க் கொண்டு இருக்கும் போது, அவரது டிரைவர், “சார், உங்களுடைய ‘சார்பியல் கோட்பாடு’ மிகவும் எளிமையானது. அதற்கு நான் கூட விளக்கம் கொடுக்க முடியும். நான் இதை நிறைய தடவைகள் கேட்டு இருக்கின்றேன். நீங்கள் உங்கள் கோட்பாட்டை விளக்கும் போது, கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஞாபகம் இருக்கிறது” என்றார்.      இதைக் கேட்டவுடன் மனக்குழப்பம் அடைவதற்குப் பதிலாக, ஐன்ஸ்டீன் அதை தனக்குக் கிடைத்த ஒரு பாராட்டாக எடுத்துக் கொண்டார். அறிவியலைப் பற்றி ஏதும் தெரியாமல் இருந்தாலும், தனது டிரைவர் கூட தன்னுடைய கோட்பாட்டை புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருப்பதற்கு மகிழ

அமைதியின் ஆற்றல் - புத்தரும், தத்துவ ஞானியும்

ஒரு முறை ஒரு சிறந்த தத்துவ ஞானி புத்தரைப் பார்ப்பதற்காக வந்தார். புத்தரிடம் கேட்பதற்காக அவர் நிறைய கேள்விகளை தன் வசம் வைத்திருந்தார். அவர், புத்தரிடம் வந்து கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.      புத்தர் அவரைக் கவனமாகப் பார்த்துவிட்டு,“ உண்மையாகவே உங்களுக்குப் பதில் தேவையா?” என்று கேட்டார். அப்படி என்றால் அதற்குரிய விலையை உங்களால் கொடுக்க முடியுமா ?    அந்த தத்துவஞானி,“ என் வாழ் நாள் முழுவதுமாக நான் விடைகளைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். நிறைய விடைகளைப் பெற்றேன்; ஆனால் ஒவ்வொரு விடைக்கும் பின்னால், புதிய கேள்விகள் எழுந்தன. நீங்கள் என்ன விலை கேட்கின்றீர்கள்? நான் முழு விலையையும் தருவதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். இந்த கேள்விகளுக்கான விடைகளுக்காக நான் ஏக்கத்தோடு இருக்கிறேன். இந்த கேள்விகளுக்கான பதில்களோடுதான் நான் இந்த உலகை விட்டு செல்ல வேண்டும் என ஆவல் கொண்டுள்ளேன்” என்று பதில் கூறினார்.      புத்தர் கூறினார், “ மிக நல்லது. நிறைய மக்கள் விடைகளைத் தெரிய ஆசைப் படுகிறார்கள். ஆனால், அதற்குரிய விலையைக் கொடுக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால்தான

U.K.G. யில் சேர்ப்பதற்கான மிகவும் சவால் நிறைந்த ஒரு நேர்முகப் பேட்டி

 இந்த நிகழ்ச்சி பெங்களூரில் இருக்கும் ஒரு பள்ளிக் கூடத்தில் நடந்தது. அந்த பள்ளியில் U.K.G வகுப்பில் சேர்வதற்கான ஒரு அனுமதி கிடைப்பது மிகவும் இயலாத காரியம் ஆகும்.   அந்தக் குழந்தைக்கு நம்மை ஏன் இங்கு அழைத்துக் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்பதை புரியமுடியவில்லை.   அந்த அறையில் பெற்றோர்கள், ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் (அவர் ஒரு பெண்) ஆகியோர் இருந்தனர். முதல்வர் அந்த குழந்தையிடம் உரையாட ஆரம்பித்தார். மொழி ஆங்கிலம்தான்!      இது எப்போதோ நடந்த ஒரு மறக்க முடியாத நேர்முகத் தேர்வு. தேர்வு தொடங்கியது.  உன்னுடைய பெயர் என்ன?  “சீதா”  “நல்லது. உனக்குத் தெரிந்த சிலவற்றை எனக்குக் கூறு.”  “எனக்கு நிறைய தெரியும். உங்களுக்கு எது வேண்டும்? கூறுங்கள்”.  அவளது பெற்றோர்கள் பயந்தனர். இந்த பதில் ஒன்றே, அட்மிஷனை மறுப்பதற்குப் போதுமானது. சீதாவின் அம்மா, அந்த சூழ்நிலையை மாற்றிட இடையில் குறுக்கிட்டாள். முதல்வர், அவளைத் தடுத்துவிட்டார்.  குழந்தையின் பக்கம் திரும்பி, “உனக்குத் தெரிந்த ஏதாவது கதையோ அல்லது பாடலோ கூறு” என்றார். மீண்டும் குழந்தை; எதை நீங்கள் விரும்புகிறீர்கள்? பா

நுண்ணறிவின் உணர்வு

இராமாயணத்தில் வரும் சீதா தேவியின் தந்தை, இந்த ஜனக மகராஜா.  ஒரு நாள் இரவு அவருக்கு ஒரு விநோதமான கனவு வந்தது. அந்தக் கனவில், ஒரு வலிமை மிக்க அரசன் ஒருவன் ஜனக மகராஜாவின் ராஜ்ஜியத்தைத் தாக்கினான்; அங்குள்ள அனைத்தையும் அழித்தான். அரசர் காட்டுக்குள் தப்பி ஓடினார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, அந்தக் காட்டுக்குள் தனியாக இருந்தார். போரில் தோற்கடிக்கப்பட்டு ஓடி வந்ததால் களைப்பும், பசியும் அவருக்கு ஏற்பட்டது. அந்த அடர்ந்த காட்டில் அவரால் பசிக்கு என்னதான் கண்டு பிடிக்க முடியும்?.   இதே போல பல நாட்களைக் கடந்த பிறகு, ஒரு நாள் அந்த வழியாக வந்த ஒருவன், அவர் இருந்த நிலைமை கண்டு, அவர் மீது இரக்கப்பட்டு அவருக்கு, ஒரு ரொட்டியை கொடுத்தான். அரசர் ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து, அந்த ரொட்டியைச் சாப்பிட முயன்ற போது, பெரிய காகம் ஒன்று, வேகமாகப் பாய்ந்து இறங்கி வந்து அந்த ரொட்டியைப் பறித்துச் சென்று விட்டது.  ஜனகர் அதைப் பார்த்து கத்தினார். அந்த அலறல் சத்தம், அவரை தூக்கத்திலிருந்து எழுப்பியது. தன்னுடைய அரண்மனையில் அவருடைய சொந்தப் படுக்கையில் படுத்திருப்பதையும், அவர் உடல் முழுவதும் வியர்வ

வாழ்க்கையின் பொருள்

ஒரு காலத்தில், ஒரு மனிதனுக்கு தீவிர விருப்பம் ஒன்று இருந்தது. அது என்னவெனில், வாழ்க்கையின் மிக உண்மையான பொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே. அதைத் தேடி கண்டு பிடிப்பதற்காக அவன் வெளியே கிளம்பினான். ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடம் என அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள், அவன் ஒரு மனிதனை சந்தித்தான். அந்த மனிதன் இவனுக்கு அறிவுரை வழங்கினான்; இந்த கிராமத்தில் முடிவில் ஒரு குகை இருக்கிறது; அங்கு சென்றால், உன் கேள்விக்கு விடை கிடைக்கும்.      அவன் சொல்லியபடியே, இந்த மனிதன் அந்த குகைக்குச் சென்றான்; அங்கு ஒரு சந்நியாசியை சந்தித்தான்; அந்த சந்நியாசி இவனிடம் ஒரு கிராமத்தைப் பற்றிக் கூறினான்; அந்த கிராமத்தில் ஒரு நாற்சந்தி இருக்கும்; அங்கு போனால், உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ காணலாம், என்றார்.  மிகுந்த உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும், அந்த மனிதன் அந்த கிராமத்தைத் தேடி வெளியே கிளம்பினான். பல வாரங்கள் தேடிய பிறகு அந்த கிராமத்தைக் கண்டு பிடித்தான்; முடிவாக அந்த நாற்சந்தியை அடைந்தான்.   அங்கு மூன்று கடைகளை அவன் பார்த்தான். கடைகளுக்கு மிக அருகில் சென்றான். ஒரு கடையில் மரத்துண்டுகள் வி

கருப்பு பெல்ட்

*கருப்பு பெல்ட் வாங்குவதன் பொருள் என்ன?*  ஒரு தற்காப்பு கலைஞன் பல வருடங்களாக கடினமாக பயிற்சி செய்தான். அவன் கருப்பு பெல்ட் வாங்குவதற்கு தகுதியுடையவனாக தேர்ந்தெடுக்கப் பட்டான். அந்த பெல்ட் அவனுக்கு ஒரு கராத்தே ஆசிரியரால் (Sensei – Karate Teacher in Japanese ) விழா ஒன்றில் கொடுக்கப் படுவதாக இருந்தது. அந்த விழா அன்று அந்த இளம் கலைஞன் கருப்பு பெல்டை பெறுவதற்காக அந்த ஆசிரியர் முன்பு வந்தான். பெல்டைப் பெறுவதற்கு முன்பு, உனக்கு மற்றொரு தேர்வு வைக்கப் போகிறேன் என்றார் ஆசிரியர்.   “நான் தயாராக இருக்கிறேன்” என்று அந்த இளைஞன் எந்தவித தயக்கமும் இன்றி, முழுமையான நம்பிக்கையுடன் பதில் கூறினான். யாருடனாவது போட்டியிடச் சொல்வார் என அவன் நினைத்தான். ஆசிரியர் மனதில் வேறு ஏதோ இருப்பதை அவன் அறியவில்லை.    தேர்வு என்னவென்றால், ஆசிரியர் அவன் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் என விரும்பினார். இந்த கருப்பு பெல்டை பெறுவதன் உண்மையான பொருள் என்ன? --இதுதான் கேள்வி.  “என்னுடைய பயணத்தின் முடிவில், என்னுடைய கடின உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி “ என்று இளைஞன் பதில் கூறினான்.     இந்த பதிலுக்கு

ரத்தினங்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன?

ஒரு சமயம் நீதிமன்றம் அதன் வீரர் ஒருவருக்கு தண்டனை விதித்தது; அவர் அரைக் கிலோ சுண்ணாம்பை உண்ண வேண்டும், என்பதே தண்டனை. வெற்றிலை பாக்கு போடும் போது, சுண்ணாம்பு சிறிது அளவு பயன்படுகிறது என்றாலும், ஒரே நேரத்தில் அரைக் கிலோ சுண்ணாம்பை வாயில் போட்டு சாப்பிட்டாக வேண்டும் என்றால், அவ்வாறு சாப்பிடுபவர் உயிர் பிழைப்பது சாத்தியம் அற்றது. ஆகவே, அவர் உறுதியாக ஒரு மாபெரும் தவறினை செய்திருக்க வேண்டும்.   அந்த வீரர் சுண்ணாம்பை வாங்கி வர வேண்டும்; அடுத்த நாள் நீதி மன்றத்தில் முழுவதுமாக வாயில் போடப்பட்டாக வேண்டும்; ஆகவே அவர் ஓரு வெற்றிலை பாக்குக் கடைக்கு, அதனை வாங்குவதற்கு சென்றார். ஆனால், இவ்வளவு அதிகச் சுண்ணாம்பை அவர் கேட்டவுடன் கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார்.  கடைக்காரரின் மனதில் கொஞ்சம் சந்தேகம் எழுந்திடவே, இவ்வளவு அதிக அளவிலான சுண்ணாம்பு வாங்குவதன் காரணத்தை கேட்க ஆரம்பித்தார். அந்த வீரர் சோகமான குரலில், “அடுத்த நாள் அவ்வளவு சுண்ணாம்பையும் நான் வாயில் போட்டு சாப்பிட்டாக வேண்டும். இதுதான் தண்டனை” என்றார்.    கடைக்காரர் வீரரிடம், “பிரச்சனையே இல்லை. அது தொடர்பாக நான் உனக்கு உதவுகிறேன்.